india

img

மகாராஷ்டிராவில் உருக்குலைந்த நிலையில் சட்டம்-ஒழுங்கு

மகாராஷ்டிராவில் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் கட்சிகளை உடைத்து  குறுக்கு வழியில் கூட்டணி ஆட்சி யை நடத்தி வருகிறது பாஜக. பாஜகவின் கூட்டணி ஆட்சி அமைந்த காலத்தில் இருந்தே மகாராஷ்டிராவில் சட்டம் ஒழுங்கு  உருக்குலைந்துள்ளது. மத வன்  முறைகள், துப்பாக்கிக் கலாச்சா ரம் மூலம் அரசியல் கட்சித் தலை வர்கள் மீது கொலைவெறித் தாக்  குதல் என மாநிலம் முழுவதும் நாள்தோறும் வன்முறை சம்பவங்  கள் அரங்கேறி வருகின்றன.

2 வாரத்திற்கு முன்பு தானே மாவட்ட காவல் நிலையத்திற்குள் சிவசேனா (ஷிண்டே) தலைவர் மகேஷ் கெய்க்வாட் மீது பாஜக  எம்எல்ஏ கணபத் கெய்க்வாட் துப்  பாக்கிச்சூடு நடத்தினார். இச்சம்ப வத்தில் மகேஷ் கெய்க்வாட் ஆபத்தான கட்டத்தில் இன்னும் சிகிச்சை பெற்று வருகிறார். இந்  நிலையில், வியாழனன்று மும்பை யின் தஹிசார் பகுதியில் சிவ சேனா (உத்தவ்) பிரிவைச் சேர்ந்த  முன்னாள் எம்எல்ஏ வினோத் கோசல்  கரின் மகனும், முன்னாள் உள் ளாட்சி மன்ற உறுப்பினருமான அபிஷேக் கோசால்கர் முகநூல்  நேரலையின் பொழுதே துப்பாக்கி யால் சுட்டுக்கொல்லப்பட்டார். அபிஷேக்கை துப்பாக்கியால் சுட்டுக்கொன்ற தொழிலதிபர் மாரிஸ் நொரோன்ஹா தன்னை தானே துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.

குடியரசுத் தலைவர் ஆட்சி
தொடர் துப்பாக்கிச்சூடு சம்ப வங்களால் அரசியல் கட்சித் தலை வர்களுக்கு பாதுகாப்பு இல்லா சூழ்நிலையில், சிவசேனா (உத் தவ்) தலைவர் உத்தவ் தாக்கரே  செய்தியாளர்கள் சந்திப்பில், “மகாராஷ்டிராவில் சட்டம் - ஒழுங்கு சீர்குலைந்துள்ளதால் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான மகா ராஷ்டிரா அரசை டிஸ்மிஸ் செய்து,  குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்தி புதிய தேர்தல் நடத்  தப்பட வேண்டும்” என ஒன்றிய அர சிற்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

மோடி, அத்வானியை விமர்சித்ததால் பத்திரிகையாளர் மீது பாஜகவினர் கொடூரத் தாக்குதல்

பாஜகவின் வகுப்புவாத அரசியலை தனது விமர்சனங்கள் மூலம் தோலுரித்து வரும் மகாராஷ்டிராவைச் சேர்ந்த பத்திரி கையாளர் நிகில் வாக்லே, சமீபத்தில் “பாஜக ஆட்சி நடக்கும் சூழலில்  எல்.கே.அத்வானிக்கு பாரத் ரத்னா வழங்குவதை எப்படி ஏற்க முடி யும்?” என கேள்வி எழுப்பி, பிரதமர் நரேந்திர மோடியை கடுமையாக விமர்சித்து இருந்தார். இந்நிலையில், வெள்ளியன்று இரவு நிகில் வாக்லே தனது காரில் புனேவில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது அவரது காரை குண்டர்கள் வழிமறித்து, கார் கண்ணாடிகளை உடைத்தது மட்டுமல்லாமல், காரை சூழ்ந்து கொண்டு நகரவிடாமல் தடுத்து, காரின் மேல்பகுதியில் மையை ஊற்றினர்.

காப்பாற்றிய “இந்தியா” கூட்டணியினர்
தகவலறிந்த காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் (சரத்), சிவசேனா (உத்தவ்) கட்சியினர் தாக்குதல் நடத்திய பாஜகவினரை அடித்து துரத்தி, நிகில் வாக்லேவை மீட்டனர். “இந்தியா” கூட்டணியினர் வர வில்லை என்றால் நிகில் வாக்லேவை பாஜக குண்டர்கள் அடித்தே கொன்றிருப்பார்கள். இதுகுறித்து நிகில் வாக்லே,’’என்னை தாக்கிய வர்களை நான் மன்னிக்கிறேன். இதற்கு முன்பு நான் 6 முறை தாக்கப்பட்டேன். இது 7 ஆவது முறையாகும்’’ என்றார்.