அரசியலை நடத்துகின்றவர்களுக்கு மதங்களை ஆதரிப்பதற்கு ஒரு பெருத்த காரணமுண்டு. மதங்களை அனுசரிப்பது, ஒரு பெரிய பொருளாதாரச் செல்வாக்கை அளிக்கின்றது. அரசியலில் செல்வாக்குடையவர்கள் யாவரும், பொருளாதாரச் செல்வாக்கைப் பெற்றுள்ளவர்கள். இவர்களை ஆதரிப்பவர்களில், பெரும்பான்மையோர், மதப்பற்றுடையவர்கள். இவர்களுடைய ஆதரவின்றி, அரசியல் அதிகாரிகளுக்கு ஆதிக்கம் வலுத்துவராது. ஆதலின் அரசியல் அதிகாரிகளுக்கு மதக்கற்பனைகளே, ஆதரவாக இருந்து வருகின்றன.
- ம. சிங்காரவேலர் -