புதுதில்லி, ஜன. 30 - சேலம் மாவட்டம், ஆத் தூர் அருகே உள்ள ராமநாயக் கன்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த விவசாயிகள் கிருஷ்ணன், கண்ணையன். ஏழை விவசாயிகளான இவர் களுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பிய விவகாரம் விவாதங்களை ஏற்படுத்தியது.
விவசாயிகளின் நிலத்தை அபகரிக்கும் நோக்கில் பாஜக-வின் சேலம் கிழக்கு மாவட்ட இலக்கிய அணி செயலாளர் குணசேகரன் என் பவர் தொடர்ந்து தங்களை அச்சுறுத்தி வருவதாக விவ சாயிகள் இருவரும் காவல் நிலையத்தில் புகார் அளித் திருந்தனர். நீதிமன்றத்திலும் வழக்கு நடைபெற்று வரு கிறது. இந்நிலையில்தான், இரண்டு விவசாயிகளையும் மிரட்டிப் பணியவைக்கும் வகையில், பாஜக மாவட்டச் செயலாளர் குணசேகர னுக்கு துணைபோகும் வித மாக அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது.
விவசாயிகள் இருவரும் பட்டியல் வகுப் பைச் சேர்ந்தவர்கள் என்ற நிலையில், சம்மனில் அவர் களின் சாதிப் பெயரையும் அமலாக்கத்துறை குறிப் பிட்டு இருந்தது. இதற்கு கடும் கண்டனங்கள் எழுந்த நிலையில், விவசாயிகள் மீதான நடவடிக்கையை அமலாக்கத்துறை கை விட்டது. எனினும், பாஜகவின ரோடு அமலாக்கத்துறை கைகோர்த்துக் கொண்டு, ஏழை விவசாயிகளை மிரட் டியதற்கு பொறுப்பேற்று, ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பதவி விலக வேண்டும் அல்லது அவரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என ஐ ஆர்எஸ் அதிகாரியும், சென் னை ஜிஎஸ்டி துணை ஆணை யருமான பாலமுருகன், குடி யரசுத்தலைவருக்கு கடிதம் அனுப்பினார்.
விவசாயக் குடும்பத்தில் இருந்து வந்த தால், விவசாயிகளுக்கு எதி ரான இந்த நடவடிக்கையை பொறுத்துக்கொள்ள முடிய வில்லை என்று தனது கடி தத்தில் பாலமுருகன் குறிப் பிட்டு இருந்தார். மணிப் பூரில் நடைபெற்ற பழங்குடி யினர் பெண்களின் நிலைமை யைப் பார்க்கும்பொழுது தானொரு இந்தியன் என சொல்லவே வெட்கமாக இருக்கிறது என்று பேட்டி யும் அளித்து இருந்தார்.
இந்நிலையில்தான், ஜிஎஸ்டி துணை ஆணையர் பாலமுருகனை சஸ்பெண்ட் செய்து ஒன்றிய அரசு நட வடிக்கை எடுத்துள்ளது. பாலமுருகன், ஜனவரி 31- ஆம் தேதியோடு ஓய்வுபெற இருந்த நிலையில், அவ ரைப் பழிவாங்கும் வகை யில், ஒருநாள் முன்னதாக சஸ்பெண்ட் செய்துள்ளது.