புதுதில்லி, ஆக. 14 - கனிம வளங்களுக்கான வரியை மாநில அரசுகள் முன் தேதியிட்டு வசூலிக்க உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
இதன்படி சுரங்க நிறு வனங்களிடம் இருந்து 2005 முதல் வசூலித்த வரித் தொகையை மாநிலங்களி டம் ஒப்படைக்குமாறும் ஒன்றிய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள் ளது.
கனிம வளங்களுக்கு வரி விதிக்க நாடாளுமன்றத் திற்கு அதிகாரம் இல்லை என்றும், வரி விதிப்பு அதி காரம் மாநில அரசுகளுக்கு மட்டுமே இருப்பதாகவும் நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தலைமையிலான உச்ச நீதிமன்றத்தின் 9 நீதிப திகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு 8:1 என்ற பெரும்பான்மை அடிப்படை யில் கடந்த ஜூலை 25 அன்று முக்கியமான தீர்ப்பை வழங்கியது.
கனிம வளங்கள் மீது வரி விதிக்க மாநில அரசு களுக்கு உரிமை கிடையாது என ஒன்றிய அரசும், இந்தியா சிமெண்ட்ஸ், ஒடிசா சிமெண்ட்ஸ், மகாநதி கோல்ஸ் உள்ளிட்ட கனிம வள நிறுவனங்களும் தொடர்ந்த வழக்கில் தான் இந்த தீர்ப்பை வழங்கியது.
இந்நிலையில், இந்த வரியை முன் தேதியிட்டு வசூலிப்பதற்கு தடை விதிக்க வேண்டும் என்று சுரங்க நிறுவனங்கள் மற்றும் ஒன்றிய அரசு தரப்பில் உச்சநீதிமன்றத்தில் முறை யிடப்பட்டது.
இதனை விசாரித்த தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான 9 நீதிபதி கள் அமர்வு, ஒன்றிய அரசின் முறையீட்டை நிராகரித்த னர். 2005 ஏப்ரல் 1 முதல் தற்போது வரையி லான வரிகளை சுரங்க நிறு வனங்கள் மற்றும் ஒன்றிய அரசிடம் இருந்து மாநில அரசுகள் முன்தேதியிட்டு வசூலித்துக் கொள்ளலாம்; அதேநேரம் முன்தேதியிட்டு வசூலிக்கும் வரிக்கு அப ராதம் மற்றும் வட்டி போன்ற வை வசூலிக்கக் கூடாது என்றும், மாநிலங்களுக்கு சேர வேண்டிய தொகையை தவணை முறையில் 12 ஆண்டுகளில் ஒன்றிய அரசு வழங்கலாம் என்றும் நீதிபதி கள் தீர்ப்பில் குறிப்பிட்டுள்ள னர்.