india

img

தீக்கதிர் முக்கிய செய்திகள்

இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்  பாட்டு கழகத்தின் (டிஆர்டிஓ) சார்பில் நீண்ட  தூரம் மற்றும் குறைந்த தூரம் பயணிக்கும் ஏவு கணைகள் தயாரிக்கப்பட்டு சோதனை செய்யப்  பட்டு வருகின்றன. அந்த வகையில் 5 ஆயிரம்  கிலோ மீட்டர்களுக்கும் மேல் அணு ஆயுதங்களை  சுமந்து சென்று, ஒன்றுக்கும் மேற்பட்ட இலக்கு களை தாக்கி அழிக்கும் “அக்னி 5 ஏவுகணை” சோதனை திங்களன்று வெற்றிகரமாக நிறைவுபெற்றது.

தில்லி எல்லையான ஷம்புவில் முகாமிட்டுள்ள விவசாயிகள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்ப வத்தில் ஒன்றிய மற்றும் ஹரியானா அரசைக் கண்டித்து பஞ்சாப் சட்டமன்றத்தில் திங்களன்று தீர்மானம் நிறைவேற்றவும், விவாதம் நடத்தவும் காங்கிரஸ் கட்சி கோரிக்கை விடுத்தது. 

ரம்ஜான் பண்டிகைக்காக முஸ்லிம் அரசு ஊழி யர்கள், ஆசிரியர்களின் வேலை நேரத்தை காங்கிரஸ் ஆளும் தெலுங்கானா அரசு குறைத்து உத்தரவிட்டுள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலம் காஜிப்பூரில் தனி யார் பேருந்து உயரழுத்த மின் கம்பி மீது  உரசி தீப்பிடித்த விபத்தில் 5 பேர் உயிரிழந்த னர். 10க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர்.

காலியாக உள்ள தேர்தல் ஆணையர் இடங் களை புதிய சட்டங்களை கொண்டு நிரப்ப  தடை கோரி காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஜெயா தாக்கூர் என்பவர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

யாதாத்ரி கோவில் விழா நிகழ்ச்சியில் தெலுங்கானா துணை முதல்வராக  பதவி வகிக்கும் மல்லு பட்டி விக்ரமர்காவை நாற்  காலியில் அமர வைக்காமல் தரையில் அமர  வைத்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி யுள்ளது. “அவர் தலித் என்ற ஒரே காரணத்துக்காக இப்படியா அவமானப்படுத்துவீர்கள்?” என  பிஆர்எஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கேள்வி யெழுப்பியுள்ளன.

இமாச்சலப் பிரதேசத்தின் ஹமிர்பூர் மாவட்டத் தில் உள்ள தவுனி தேவி பகுதியில் தண்ணீர்  மாசுபாட்டால் 200க்கும் மேற்பட்டோர் வயிற்றுப் போக்கால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மராத்தா இடஒதுக்கீடு போராட்ட வன்முறை யை விசாரிக்க ஐபிஎஸ் அதிகாரி சந்தீப் கர்னிக்  என்பவரை எஸ்ஐடி தலைவராக மகாராஷ்டிர அரசு  நியமித்துள்ளது.

ஏஐஎம்ஐஎம் கட்சி மகாராஷ்டிராவில் 6 மக்க ளவைத் தொகுதிகளில் போட்டியிட உள்ள தாக தகவல் தெரிவித்துள்ளது.

ஜெய்ப்பூர்
பாஜகவிலிருந்து மேலும் ஒரு எம்.பி., விலகல்
காங்கிரஸ் கட்சியில் இணைகிறார்

“இந்தியா” கூட்டணி எழுச்சியால் தோல்வி பயத்தில் உள்ள பாஜக, எதிர்க்கட்சி எம்பி, எம்எல்ஏக்களை தங்கள் பக்கம் இழுக்  கும் ஆள்பிடி வேலையில் தீவிரமாக இறங்கியுள்ளது. கடந்த ஒருமாத காலத்  தில் மட்டும் 50க்கும் மேற்பட்ட எதிர்க்கட்சி  எம்பி, எம்எல்ஏக்களை தங்கள் பக்கம் பாஜக இழுத்துள்ள நிலையில், எதிர்க் கட்சிகள் அழைக்காமலேயே பாஜக எம்பிக்கள் அடுத்தடுத்து காங்கிரஸ், திரி ணாமுல் காங்கிரஸ் கட்சியில்  இணைந்து வருகின்றனர். 

ஞாயிறன்று ஹரியானா மாநிலத்தின் முக்கிய பாஜக தலைவரும், ஹிசார் தொகுதி பாஜக எம்பியுமான பிரிஜேந் திர சிங் தனது அடிப்படை கட்சி உறுப்பி னர் பதவியை ராஜினாமா செய்து காங்கி ரஸ் கட்சியில் இணைந்தார்.

இந்த விவகாரத்தால் பாஜக ஹரி யானாவில் உயர்மட்ட கூட்டத்தை கூட்டி யது. பிரிஜேந்திர சிங் காங்கிரஸ் கட்சிக்கு  சென்ற அதிர்ச்சியில் இருந்து பாஜக மீள்  வதற்குள், ராஜஸ்தான் பாஜகவின் முக்  கிய தலைவர்களில் ஒருவரும், எம்பியு மான ராகுல் கஸ்வான் பாஜகவில் இருந்து விலகி கூடுதல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார். 

அவர் விரைவில் காங்கிரஸ் கட்சி யில் இணைய உள்ளதாக தகவல் வெளி யாகியுள்ளது.

பெங்களூரு
கர்நாடகாவில் பஞ்சுமிட்டாய், கோபி மஞ்சூரியனுக்கு தடை

கோவா, தமிழ்நாட்டைத் தொட ர்ந்து கர்நாடக அரசும் பஞ்சுமிட்டாய், கோபி மஞ்  சூரியனுக்கு தடை விதித்துள்ளது. 

இதுதொடர்பாக அம்மாநில சுகா தாரத் துறை அமைச்சர் தினேஷ் குண்டு ராவ் கூறுகையில், “ரோடோமைன்-பி  கலந்து விற்கப்படும் கோபி மஞ்சூரியன்  மற்றும் பஞ்சு மிட்டாய்க்கு தடை விதிக்கப்  பட்டுள்ளது. முக்கியமாக தடையை மீறி  உணவுப் பொருட்களில் ரோடோமைன்-பி பயன்படுத்தப்பட்டால் 7 ஆண்டுகள் அல்லது வாழ் நாள் சிறை தண்டனை விதிக்கப்படும்” என எச்சரிக்கை விடுத் துள்ளார்.

புதுதில்லி
‘மோடி அரசு கொண்டு வந்த சட்டத்தின்படி தேர்தல் ஆணையரை நியமிக்கக் கூடாது!’

தேர்தல் ஆணையர் அருண் கோயல் திடீரென ராஜினாமா செய்த நிலையில், புதிய ஆணை யரை நியமிக்க ஒன்றிய அரசு தீவிரம் காட்டி வருகிறது. மார்ச் 15 அன்று இதற்  கான கூட்டம் நடைபெறும் என்றும் கூறப்  பட்டுள்ளது.

பிரதமர், இந்திய உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி, எதிர்க்கட்சித் தலை வர் ஆகியோர் கொண்ட குழுவே தேர்தல்  ஆணையர்களை கண்டறியும் என்ற நிலை யில், அண்மையில் மோடி அரசானது  புதிய சட்டத்திருத்தத்தைக் கொண்டு வந்து, அதில், தலைமைத் தேர்தல் ஆணையர் மற்றும் தேர்தல் ஆணை யர்களைத் தேர்ந்தெடுக்கும் குழுவிலி ருந்து தலைமை நீதிபதியை வெளியேற்றி யது. பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர், பிர தமரால் பரிந்துரைக்கப்படும் ஒன்றிய அமைச்சர் ஆகியோர் கொண்ட குழுவே  தேர்தல் ஆணையர்களை நியமிக்கும் என்று மாற்றியது. 

இதற்கு எதிராக, காங்கிரஸ் தலை வர்களில் ஒருவரான ஜெயா தாக்குர் உச்ச  நீதிமன்றத்தில் 2024 ஜனவரி மாதமே வழக்கு தொடர்ந்திருந்தார். 

இந்நிலையில், தற்போது புதிதாக ஒரு  பொதுநல வழக்கு தாக்கல் செய்துள்ளார். அதில், பழைய முறையிலேயே தேர்தல்  ஆணையர் நியமனத்தை மேற்கொள்ள வேண்டும்; தலைமை தேர்தல் ஆணை யர்கள் மற்றும் பிற தேர்தல் ஆணை யர்களை நியமிக்க நடுநிலை குழுவை அமைக்க வேண்டும் மற்றும் இந்திய தலைமை நீதிபதியை தேர்வுக் குழுவில்  சேர்க்க வேண்டும் என்று வலியுறுத்தி யுள்ளார்.