india

img

அரசியல் உள்நோக்கத்துடன் சிபிஐஎம்-க்கு வருமான வரி நோட்டீஸ்! - சீத்தாராம் யெச்சூரி

அரசியல் உள்நோக்கத்துடன் சிபிஐஎம் திருச்சூர் மாவட்டக் குழு வங்கி கணக்கை முடக்கி வருமான வரி நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாக சிபிஐஎம் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து சீத்தாராம் யெச்சூரி அவரது எக்ஸ் பதிவில் கூறியதாவது:
"சிபிஐ(எம்) திருச்சூர் மாவட்டக் குழுவின் வங்கிக் கணக்கை முடக்கி வருமான வரி நோட்டீஸ் அனுப்பப்பட்டிருப்பது முற்றிலும் கண்டிக்கத்தக்கது. நாடு முழுவதும் உள்ள சிபிஐ(எம்) கட்சியின் வங்கிக் கணக்குகளின் விவரங்கள் ஏற்கனவே வருமான வரித்துறைக்கும், தேர்தல் ஆணையத்துக்கும் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது; சட்டப்படி ஒருங்கிணைந்த கணக்குகள் சமர்ப்பிக்கப்பட்டு, அவர்களின் இணையதளங்களில் வெளியிடப்பட்டுள்ளது. ஆண்டு முழுவதும் எந்த ஆட்சேபனையும் தெரிவிக்காமல், தேர்தல் செயல்பாடுகள் தொடங்கும் போது இது நடக்கிறது என்றால், கேரளாவில் சிபிஐ(எம்) தலைமையிலான எல்.டி.எஃப் ஆட்சிக்கு எதிராக மோடி அரசு அரசியல் உள்நோக்கத்துடன் செயல்படுகிறது என்பது தான் உண்மை."
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.