india

img

தேர்தல் பத்திர விவரங்களை ஒன்றுவிடாமல் மார்ச் 21-க்குள் வெளியிட்டாக வேண்டும்: உச்சநீதிமன்றம் எஸ்பிஐக்கு கறார் உத்தரவு

புதுதில்லி, மார்ச் 18 - தேர்தல் நன்கொடைப் பத்தி ரங்கள் தொடர்பான அனைத்து தரவு களையும் மார்ச் 21 மாலை 5  மணிக்குள் தேர்தல் ஆணையத்தி டம் வழங்கியாக வேண்டும் என்று ‘ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா’ (SBI) வங்கியின் தலைவர் தினேஷ் குமார் காராவுக்கு, தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தலைமையிலான உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு ஆணையிட்டுள்ளது.

இந்த விவகாரத்தில், “ஒவ்வொன்றுக்கும் நீதிமன்றம் தனித் தனியாக உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்ற மனநிலையை எஸ்பிஐ நிர்வாகம் மாற்றிக் கொண்டு, தேர்தல் நன்கொடைப் பத்திரங்கள் வாங்கப்பட்ட தேதி, வாங்கியவரின் பெயர், சீரியல் எண்கள், ஆல்ஃபா நூமரிக் எண்கள் (எண்ணெழுத்து அதாவது, 1, 2, 3 A, B, C) என அனைத்து தரவுகளையும் தாக்கல் செய்தாக வேண்டும்” என்று கறார் உத்தரவு பிறப்பித்துள்ள அர சியல் சாசன அமர்வு, “எஸ்பிஐ வங்கி நிர்வாகம் தனது கைவசம் மற்றும் பாதுகாப்பில் உள்ள தேர்தல் பத்தி ரங்கள் தொடர்பான அனைத்து விவ ரங்களையும் வழங்கிவிட்டோம்; எந்த விவரமும் மறைக்கப்படவில்லை என்பதைக் குறிப்பிட்டு உச்ச நீதி மன்றத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும்” என்றும்  அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.

தேர்தல் பத்திரத் திட்டம் சட்டவிரோதம்

ஒன்றிய பாஜக அரசு, கடந்த  2018-ஆம் ஆண்டு நடைமுறைக்குக் கொண்டு வந்த தேர்தல் பத்திரங்கள் திட்டம் சட்ட விரோதம் என்று தலை மை நீதிபதி டி.ஒய். சந்திர சூட் தலை மையில், நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா, ஜே.பி. பர்திவாலா, மனோஜ் மிஸ்ரா, பி.ஆர். கவாய் ஆகிய 5 பேர் அடங்கிய அரசியல் சாசன அமர்வு, கடந்த பிப்ரவரி 15 அன்று தீர்ப்பளித்தது.

தேர்தல் பத்திரம் விற்பனையை ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா உடனே  நிறுத்த வேண்டும். அரசியல் கட்சி கள் மாற்றாமல் வைத்துள்ள பத்தி ரங்களை உடனே திரும்ப ஒப்ப டைக்க வேண்டும்; 2019 ஏப்ரல் முதல் இதுவரை விற்பனை செய்யப்பட்ட தேர்தல் பத்திரங்கள் குறித்த முழு மையான விவரங்களை இந்திய தேர்தல் ஆணையத்திடம் மார்ச் 6-ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்; அந்த விவரங்களை இந்திய தேர்தல் ஆணையம் மார்ச் 15-ஆம் தேதிக்குள் இணையதளத் தில் வெளியிட வேண்டும் என்று உத்தரவிட்டது.

அரைகுறையான  ஆவணங்கள் தாக்கல்

இதையடுத்து, உச்சநீதிமன்றத் தில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்த எஸ்பிஐ வங்கி, கடந்த 2019 ஏப்ரல் முதல் 2024 பிப்ரவரி 15 வரை 22,217 தேர்தல் பத்திரங்கள் வாங்கப் பட்டு உள்ளதாகவும், இதில் 22,030 பத்திரங்களை அரசியல் கட்சிகள் பணமாக்கி உள்ளன, எஞ்சிய 187 பத்திரங்கள் மாற்றப்படாததால், அந்தத் தொகை பிரதமரின் தேசிய நிவாரண நிதிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தது.

தேர்தல் ஆணையமும், எஸ்பிஐ அளித்த தேர்தல் பத்திர விவரங் களை ‘பாரத ஸ்டேட் வங்கி  சமர்ப்பித்த தேர்தல் பத்திரங்களின் வெளிப்பாடு’ என்ற பெயரில்  2 பாகங் களாக தனது இணைய தளத்தில் வியாழனன்று (மார்ச் 14) மாலை வெளியிட்டது.

யாரிடமிருந்து யாருக்கு நன்கொடை சென்றது?

எனினும், தேதி வாரியாக எந்தெந்த நிறுவனங்கள் அல்லது தனிநபர்கள் தேர்தல் பத்திரங்களை வாங்கினார்கள்; எந்தெந்த தேதியில் பத்திரங்களை வங்கியில் கொடுத்து அரசியல் கட்சிகள் ரொக்கமாக மாற்றினார்கள் என்ற விவரங்கள் மட்டுமே எஸ்பிஐ வங்கிப் பட்டிய லில் இடம்பெற்றிருந்ததே தவிர, தேர்தல் பத்திர எண், யார் எந்த கட்சிக்கு எவ்வளவு தொகை நன்கொடையாக வழங்கினார்கள் என்ற விவரங்கள் சாமர்த்தியமாக மறைக்கப்பட்டன.

இதுதொடர்பாக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் ஏடிஆர், காமன் காஸ் ஆகிய அமைப்புகள் தொடுத்த வழக்குகளை விசாரித்த உச்சநீதிமன்றம்,தேர்தல் பத்திர விவகாரத்தில் எஸ்பிஐ செயல் பாட்டுக்கு கடும் கண்டனம் தெரிவித்த துடன், தேர்தல் பத்திர எண்களை ஏன் வழங்கவில்லை என கேள்வி எழுப்பி,  தேர்தல் பத்திரங்கள் எந்த தேதியில் யாரால் வாங்கப்பட்டது, யாரால் பணமாக்கப்பட்டது, அந்த தேர்தல் பத்திரங்களின் எண்கள் என்ன என்ற அனைத்து விவரங் களையும் மார்ச் 17 அன்றைக்குள் தேர்தல் ஆணைய இணையதளத்தில் வெளியிட வேண்டும். ஒவ்வொரு தேர்தல் பத்திரத்தின் தனி அடையாள எண்ணையும் எஸ்பிஐ வெளியிட வேண்டும் என்றும் உத்தரவிட்டது.
எண்களை வெளியிடாதது ஏன்?
திங்களன்று இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா சார்பில் மூத்த வழக்கறி ஞர் ஹரீஷ் சால்வே, ஒன்றிய அரசின் தரப்பில் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா ஆகியோர் ஆஜராகி வாதாடினர்.

அப்போது, தலைமை நீதிபதி சந்திரசூட், “தேர்தல் பத்திர எண்களை வெளியிடாதது ஏன்?” என்று கேள்வி எழுப்பினார். அதற்கு “உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுகளை நாங்கள் புரிந்துகொண்டதன் அடிப்படையிலேயே தரவுகள் அளிக்கப்பட்டுள்ளது” என்று மூத்த வழக்கறிஞர் ஹரிஷ் சால்வே சமாளித்தார்.

“’எல்லா விவரங்களையும்’ வெளியிடுமாறு தீர்ப்பில் கூறியிருந்தோம். அதில் பத்திர எண்களும் அடங்கும். அனைத்து விவரங்களும் என்று நாங்கள் கூறிவிட்ட பிறகு, அதில் எவற்றை வெளியிடுவது என்பதை வங்கி தேர்வு செய்ய முடியாது” என்றார். அதற்கு, “எண்கள் கொடுக்கப்பட வேண்டும் என்றால், நாங்கள் அவற்றைக் கொடுப்போம். அதில் எந்த பிரச்சனையும் இல்லை” என்று சால்வே ஒப்புக்கொண்டார். 

அனைத்தும் என்றால் அனைத்தும்தான்..
“எல்லா விவரங்களையும் என்று நாங்கள் கூறும்போது, அதில் சிந்திக்கக்கூடிய அனைத்து தரவுகளும் அடங்கும். அனைத்து தரவுகளையும் வெளியிட வேண்டும் என்று முதல் உத்தரவிலேயே தெளிவாக கூறப்பட்டுள்ளது; இருந்தும், தேர்தல் பத்திர வரிசை எண்களை எஸ்பிஐ வெளியிடாதது சரியல்ல” என்று தலைமை நீதிபதி தெரி வித்தார்.

“தேர்தல் பத்திரங்களில் பெயர்கள் குறிப்பிடாமல் இருப்பதற்கான உத்தரவாதம் இருக்கும் போது, அந்தத் தகவலை எப்படி வெளியிடுவது?” என்று முதலாளிகளுக்கு சாதகமாக மூத்த வழக்கறிஞர் முகுல் ரோத்தகி கேள்வி எழுப்பினார். பத்திர எண்கள் வெளியிடுவதை ஒத்திவைக்க வேண்டுமென்று தொழிற்துறை முதலாளிகளின் அமைப்புகளான ஃபிக்கி  (FICCI) மற்றும் அசோசம் (ASSOCHAM) போன்றவை கோரிக்கை விடுத்துள்ளன என்றும் அவர் குறிப்பிட்டார்.

அதற்கு, அதுபோன்ற விண்ணப்பங்கள் எதுவும் எங்களுக்கு வரவில்லை என்று நீதிபதிகள் தெரிவித்தனர். மேலும், அதற்கு, “ஒரே ஒரு பதில் மட்டுமே உள்ளது. ஏப்ரல் 12 முதல் அமலுக்கு வரும்” என்று சந்திரசூட் கூறினார்.

ஊடக விமர்சனங்களை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம்
“நீதிமன்றத்தின் தீர்ப்பை வைத்து, சமூக வலைத்தளங்களில் புள்ளிவிவரங்கள் திரிக்கப்பட்டு வருகின்றன, நீதிமன்றத்தை அவ மானப்படுத்தும் வகையிலான கருத்துக்கள் வெளியிடப்பட்டு வருகின்றன”  என்று சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா போலிக் கண்ணீர் வடித்த நிலையில், “ஒரு நிறு வனமாக, சமூக ஊடக வர்ணனைகளை கையாள்வதற்கு எங்கள் தோள்கள் பரந்த அளவில் உள்ளன. எங்களின் நோக்கம்  தகவல்களை வெளிப்படுத்துவது மட்டுமே...  நாங்கள் சட்டத்தின் ஆட்சியால் ஆளப்படு கிறோம்” என்று தலைமை நீதிபதி அதிரடியாக கூறினார்.