பிரதமர் மோடியின் சொந்த மாநிலமான குஜராத்தின் போர்பந்தர் அருகே ரூ.450 கோடி மதிப்புள்ள போதைப்பொருட்கள் பறிமுதல் செய் யப்பட்டுள்ள நிலையில், இதுதொடர்பாக 6 பாகிஸ்தானியரை போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் கைது செய்தனர். ஏற்கெனவே 2 வாரத்திற்கு முன்பு குஜராத்தில் ரூ.2000 கோடிக் கும் அதிகமான போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில், அடுத்த 15 நாட்களுக்குள் ரூ.450 கோடி மதிப்புள்ள போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது நாடு முழுவதும் கடும் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியுள்ளது.
மக்களவை தேர்தலுக்காக 43 பெயர்கள் அடங்கிய காங்கிரஸ் கட்சியின் 2ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் செவ்வாயன்று வெளியானது.
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சால்மரில் விமா னப்படைக்கு சொந்தமான தேஜஸ் விமா னம் விழுந்து நொறுங்கியது. மாணவர்கள் விடுதி அருகே விமானப்படையின் தேஜஸ் விமானம் விழுந்து நொறுங்கி தீப்பிடித்து எரிந்த நிலையில், விமானத்தில் பயணித்த விமானிகள் இருவரும் பாராசூட் மூலம் உயிர் தப்பியதாக தகவல் வெளி யாகியது.
தேசிய குடிமக்கள் பதிவேட்டில் (என்ஆர்சி) விண்ணப்பிக்காத ஒருவர் குடியுரிமை பெற்றால், தான் முதலில் ராஜினாமா செய்வேன் என அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா தெரிவித்துள்ளார்.
மிளகாய் விலை பெரிய அளவில் குறைந்த தால் ஆத்திரமடைந்த விவசாயிகள், கர்நாடக மாநிலம் ஹவேரி மாவட்ட விவசாயிகள் சங்க சாலையில் நிறுத்தப்பட்ட வாகனங்களுக்கு தீ வைத்து கொளுத்தினர்.
பாஜகவுடனான கூட்டணி அரசில் இருந்து விலகியதை அடுத்து மக்களவைத் தேர்த லில் ஹரியானா மாநிலத்தில் தனித்துப் போட்டியிடு வதாக ஜனநாயக ஜனதா கட்சி அறிவித்துள்ளது.
தெலுங்கானாவின் ஆளும் காங்கிரஸ் அர சைக் கலைக்க பாஜக - பிஆர்எஸ் கட்சிகள் கூட்டு சதி செய்வதாக தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி தெரிவித்துள்ளார்.
புதுதில்லி
8 மாநிலங்களில்
என்ஐஏ சோதனை
பயங்கரவாத தடுப்பு நடவடிக்கை மற்றும் போதைப்பொருள் கடத்தல் தொடர்பாக நாடு முழுவதும் 30 இடங்களில் தேசிய சிறப்பு புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) செவ்வாயன்று சோதனை மேற்கொண்டது. பஞ்சாப், ஹரியானா, ராஜஸ்தான், மத்தியப்பிர தேசம், தில்லி, சண்டிகர், உத்தரப்பிர தேசம், குஜராத் ஆகிய 8 மாநிலங்களில் பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பு உடையதாக சந்தேகிக்கப்படும் நபர்களின் வீடுகள் மற்றும் போதைப் பொருளில் தொடர்புடையோர்களின் வீடு கள் என 30 இடங்களில் என்ஐஏ சோதனை மேற்கொண்டது.
iபெங்களூரு
மதரஸாக்கள்,
மசூதிகளில் தாக்குதல் நடத்த வேண்டுமாம்
கர்நாடகாவில் வன்முறையை
கிளப்ப விஎச்பி தீவிரம்
கர்நாடகா மாநிலம் பெங்களூரில் உள்ளது இராமேஸ்வரம் கபே உணவகம். இந்த உணவகத்தில் மார்ச் 1 அன்று அடுத்தடுத்து இரண்டு வெடிகுண்டுகள் வெடித்தன. இந்த சம்ப வத்தில் 10 பேர் படுகாயமடைந்தனர். இது தொடர்பாக என்ஐஏ விசாரணை நடத்தி வருகிறது. சம்பவம் நடந்து 10 நாட்கள் ஆகியும் குற்றவாளியை கைது செய்ய முடியாமல் என்ஐஏ திணறி வரும் நிலை யில், குண்டுவெடிப்பு குற்றவாளி தொடர்பாக தகவல் தெரிவித்தால் ரூ.10 லட்சம் வரை சன்மானம் அளிப்பதாக என்ஐஏ அறிவித்துள்ளது.
இந்நிலையில், இராமேஸ்வரம் கபே குண்டுவெடிப்பு சம்பவம் மூலம் கர்நாடக மாநிலத்தில் வன்முறையை கிளப்ப தீவிர இந்துத்துவ அமைப்பான விஷ்வ இந்து பரிஷத் (விஎச்பி) தீவி ரமாக களமிறங்கியுள்ளன. மாநில விஎச்பி தலைவரான ஷரன் பம்ப்வெல், “இராமேஸ்வரம் கபே ஓட்டலில் வெடி குண்டு வைத்தவர் மசூதியிலோ அல்லது மதரஸாவிலோ தஞ்சம் அடைந்து இருக்கலாம். அதனால் அங்கு தாக்கு தல் நடத்தினால் குற்றவாளியைக் கண்டு பிடிக்கலாம். மதரஸாக்கள், மசூதிகளில் தேசிய புலனாய்வுக் குழு(என்ஐஏ) சோத னையிட்டால் வெடிகுண்டு குற்றவாளி யைக் கண்டுபிடிக்கலாம்” என மதவன் முறையை தூண்டும் வகையில் கூறி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார்.