திஸாநாயக்கடிச. 15-இல்இந்தியாவருகிறார்!
புதுதில்லி, டிச. 11 - இலங்கை ஜனாதிப தியாக அனுர குமார திஸா நாயக்க பதவி ஏற்ற பிறகு முதல் வெளிநாட்டு அரசு முறை பயணமாக இந்தியா வருவதாக அதிகாரப்பூர்வ மாக அறிவிக்கப்பட்டுள்ளது. டிசம்பர் 15 முதல் 17 வரையிலான இப்பயணத் தின்போது அவர் இந்திய குடி யரசு தலைவர் திரவுபதி முர்மு, பிரதமர் மோடி உள்ளிட்டோரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாகவும் தெரிவிக்கப் பட்டுள்ளது. அவருடன் இலங்கை வெளியுறவுத் துறை அமைச்சர் விஜிதா ஹேரத் மற்றும் நிதித்துறை துணை அமைச்சர் அனில் ஜெயந்தா பெர்னாண் டோ உள்ளிட்டோரும் வரு கின்றனர்.
தமிழகத்தில் 3 நாட்களுக்கு மழை வாய்ப்பு
சென்னை, டிச. 11 - தென்கிழக்கு வங்கக் கடல் மற்றும் அதை யொட்டிய கிழக்கு இந்தியப் பெருங்கடல் பகுதிகளில் நில விய காற்றழுத்த தாழ்வு பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப் பெற்றது.
இந்நிலையில் தனி யார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தனது சமூக வலைதளப் பக்கத்தில் புதனன்று வெளியிட்டுள்ள பதிவில், “கடலோர தமி ழகத்தில் இன்று மழை தொட ங்கும். ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியால் தமிழகம் முழுவதும் அடுத்த மூன்று நாட்களுக்குப் பரலாக மழை பெய்யும்” என்று குறிப் பிட்டுள்ளார்.
கடலுக்குச் செல்ல வேண்டாம் என்று மீனவர்களுக்கு ஏற்கெனவே அறிவுறுத்தப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.