6 மாநிலங்களவை உறுப்பினர்கள் ராஜினாமா செய்ததை அடுத்து இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. டிச.20- அன்று இடைத்தேர்தல் நடைபெறும் எனவும் இடைத்தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை அன்று மாலையே நடைபெறும் எனவும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. ஆந்திராவில் 3, ஒடிசா, மேற்குவங்கம், ஹரியானாவில் தலா ஒரு மாநிலங்களவை எம்.பி. பதவிக்கு இடைத்தேர்தல் நடைபெறும்.
குடியரசுத் தலைவரின் அரசியலமைப்பு தின உரையில் சமத்துவம், மதச்சார்பின்மை என்ற வார்த்தைகள் இடம்பெறவில்லை. அரசியலமைப்பு விழுமியங்களை மேலும் தெளிவுபடுத்தும் வகை யில் குடியரசுத் தலைவர் உரை மீது விவாதம் நடத்த வேண்டும் என சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு திமுக மக்களவை குழு தலைவர் டி.ஆர்.பாலு கடிதம் அனுப்பியுள்ளார்.
உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூரில், வரலாற்றுச் சிறமிப்புமிக்க பாலம் செவ்வாயன்று இடிந்து கங்கை நதியில் விழுந்தது.150 ஆண்டுகள் பழமையான இந்தப் பாலத்தின் தூண்களில் விரிசல் ஏற்பட்டதால் சில ஆண்டுகளுக்கு முன்பே போக்கு வரத்துக்குத் தடை செய்யப்பட்டிருந்த நிலையில் இடிந்து விழுந்துள்ளது.
தேசிய இயற்கை வேளாண்மைத் திட்டம், புது மைத் திட்டம் மற்றும் காகிதக் குறைவான பேனா அமைப்பு உள்ளிட்ட பல முக்கிய திட்டங்க ளுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள் ்ளது.மேலும், இயற்கை வேளாண்மைக்கான தேசியத் திட்டத்துக்காக ரூ. 2,481 கோடி நிதி ஒதுக்கப் பட்டுள்ளது. இதன்மூலம் நாடு முழுவதுமுள்ள 1 கோடி விவசாயிகளை இயற்கை விவசாயத்துக்கு மாற்று வது இந்த இயக்கத்தின் நோக்கம் என்று கூறப் படுகிறது.
அசாம் மாநிலத்தில் செயல்பட்ட அசோம் ஐக்கிய முன்னணி (உல்பா) என்ற பிரிவினைவாத அமைப்பை மேலும் ஐந்தாண்டுகளுக்கு ஒன்றிய அரசு தடை செய்துள்ளது. இந்த அமைப்பிற்கு 1990 முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது.
புதுதில்லி
அதானி லஞ்ச விவகாரம் குறித்த கேள்விக்கு அமெரிக்கா மழுப்பல் பதில்
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் திங்களன்று துவங்கி யது. அவை துவங்கியதும் அதானி மீதான லஞ்ச ஊழல் குற்றச் சாட்டு குறித்து விவாதிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் கேட்டுக்கொண்டன. ஆனால் அவைத்தலைவர் எதிர்க்கட்சி களின் கோரிக்கையை ஏற்க மறுத்ததால் கண்டனம் தெரிவித்து கோசம் எழுப்பினர். இதனால் திங்கள் கிழமை முழுவதும் அவை ஒத்திவைக்கப்பட்டது.
இதனைத்தொடர்ந்து இந்திய நாடாளுமன்றத்தில் அதானி மீதான குற்றச்சாட்டு குறித்து எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பியதை குறிப்பிட்டு கேட் கப்பட்ட கேள்விகளுக்கு அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பா ளர் மேத்யூ மில்லர் பதில் அளிக்க மறுத்துள்ளார்.
அமெரிக்க செய்தியாளர்கள் சந்திப் பின்போது மேத்யூ மில்லரிடம் இந்திய தொழிலதிபர் கௌதம் அதானியின் லஞ்ச ஊழல் விவகாரம் இந்திய நாடாளு மன்றத்தில் எழுப்பப்பட்டது. இதனை நீங்கள் ஆதரிக்கிறீர்களா என செய்தி யாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர், ‘இது ஒரு சட்டத்தை நடைமுறைப் படுத்தும் விஷயம். இதுகுறித்து இங்குள்ள வழக்கறிஞர்களிடம் தான் விவாதிக்க வேண்டும்’ என கூறி நேரடியாக பதில் அளிக்க மறுத்துவிட்டார்.
மும்பை
ஷிண்டே, அஜித் பவாரின் கட்சிகள்அமித்ஷா, மோடியின் அடிமைகள் : சஞ்சய் ராவத் விமர்சனம்
ஏக்நாத் ஷிண்டேவின் சிவ சேனா கட்சியும், அஜித் பவாரின் தேசிய வாத காங்கிரஸ் கட்சியும் அமித் ஷா மற்றும் மோடியின் அடிமைகளாக உள்ளனர் என சிவசேனா (உத்தவ்) எம்பி சஞ்சய் ராவத் கடுமையாக விமர்சித் துள்ளார். மகாராஷ்டிரா மாநிலத்திற்கான முதல்வராக யார் இருக்க வேண்டும் என் பதை அமித் ஷாவும், மோடியும் தான் முடிவெடுப்பார்கள். ஏக்நாத் ஷிண் டேவும், அஜித் பவாரும் அவர்களின் கட்சிக் காக தனியாக முடிவெடுத்துவிட முடி யாது. இரண்டு கட்சிகளும் அமித் ஷா மற்றும் மோடியின் அடிமைகள், பாஜக வின் துணை நிறுவனங்களாக செயல் படுகின்றனர். தனித்து ஆட்சி அமைக்க ஷிண்டே மற்றும் அஜித் பவாரின் கட்சி யைக் கூட பாஜக மீண்டும் உடைக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.