india

img

பெரும்பான்மைக்காக பாஜக குதிரை பேரம்

நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் காலியாக  உள்ள 56 மாநிலங்களவை இடங்களுக்கு சமீபத்தில் தேர்தல் அறிவிக்கப்பட்டது. ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம், மகாராஷ்டிரா, குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் 41 பேர் போட்டியின்றி தேர்வு செய்  யப்பட்ட நிலையில், கர்நாடகா,  உத்தரப்பிரதேசம், இமாச்சலப்பிர தேசம் ஆகிய மாநிலங்களில் உள்ள  15 இடங்களுக்கு கூடுதல் வேட்பா ளர்கள் களமிறங்கியதால், அங்கு கடும் போட்டி ஏற்பட்டது.

கர்நாடகாவில்  காங்கிரஸ் அபாரம்
இந்நிலையில், கர்நாடகா (4 இடங்கள்), உத்தரப்பிரதேசம் (10 இடங்கள்), இமாச்சலப்பிரதேசம் (1 இடம்) ஆகிய 3 மாநிலங்களில் உள்ள 15 மாநிலங்களவை இடங்க ளுக்கு செவ்வாயன்று வாக்குப் பதிவு நடைபெற்ற நிலையில், செவ்  வாயன்று மாலையே வாக்கு எண்  ணிக்கை தொடங்கியது. இதில்  கர்நாடக மாநிலத்தில் அறிவிக்கப் பட்ட 4 இடங்களில் ஆளும் காங்கி ரஸ் கட்சி சார்பில் களமிறங்கிய அஜய் மாக்கன், ஜி.எஸ்.சந்திர சேகர், சையத் நசீர் ஹுசைன் ஆகிய  3 பேர் வெற்றி பெற்ற நிலையில்,  பாஜக சார்பில் நாராயண கே. பாண்டே வெற்றி பெற்றார். போட்டி வேட்பாளரை களமிறக்கிய  மதச்சார்பற்ற ஜனதாதளம் தோல்வியை சந்தித்தது.

இமாச்சலப்பிரதேசம்

இமாச்சலப்பிரதேசத்தில் காலி யாக இருந்த ஒரே ஒரு மாநிலங்க ளவை இடத்தை வெல்ல காங்கிரஸ்  கட்சிக்கு பெரும்பான்மைக்கு போதுமான வாக்குகள் (40 பேர்)  இருந்தும், வெறும் 25 பேரைக்  கொண்டிருந்த பாஜக தொடக்கத்தி லேயே சுயேட்சை எம்எல்ஏக்களை  (3 பேர்) வளைத்து போட்டி வேட்பா ளரை களமிறக்கியது. செவ்வா யன்று இமாச்சலப்பிரதேசத்தில் மாநிலங்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்ற நிலை யில், காங்கிரஸ் கட்சியின் 6  எம்எல்ஏக்களை கடத்தி ‘குதிரை  பேரம்’ மூலமாக தனது வேட்பாள ரான ஹர்ஷ் மகாஜனுக்கு வாக்க ளிக்க வைத்தது. இதன்மூலம் பாஜக - காங்கிரஸ் தலா 34 வாக்கு களுடன் சரிசம அளவில் இருந்த தால், குலுக்கல் மூலம் பாஜக  வேட்பாளர் ஹர்ஷ் மகாஜன் வெற்றி  பெற்றதாக அறிவிக்கப்பட்டார். காங்கிரஸ் மூத்த தலைவர் அபி ஷேக் சிங்வி தோல்வியடைந்ததாக அறிவிக்கப்பட்டது. 

உத்தரப்பிரதேசம்
10 மாநிலங்களவை இடங்களை கொண்ட உத்தரப்பிரதேசத்தில்  சமாஜ்வாதி 3 இடங்களிலும், பாஜக  7 இடங்களிலும் வெல்ல வாய்ப்பு  இருந்தது. ஆனால் போட்டி வேட்பா ளரை பாஜக களமிறக்கியதால் அங்கு தேர்தல் நடத்தப்பட்டது.  உத்  தரப்பிரதேசத்தில் மொத்தமுள்ள 10 இடங்களுக்கு பாஜக சார்பில் 8 வேட்பாளர்கள், சமாஜ்வாதி கட்சி சார்பில் 3 வேட்பாளர்கள் என 11 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். சமாஜ்வாதி கட்சியின் 7 எம்எல்ஏக்  கள், பாரதிய சமாஜ் கட்சியின் ஒரு  எம்எல்ஏ, பகுஜன் சமாஜ் கட்சியின்  ஒரு எம்எல்ஏ ஆகியோர் கட்சியின்  கொறடா உத்தரவுக்கு எதிராக கட்சி  மாறி வாக்களித்ததை அடுத்து, பாஜக வேட்பாளர்கள் 8 பேர் வெற்றி  பெற்றனர். சமாஜ்வாதி கட்சி நிறுத்  திய 3 வேட்பாளர்களில் இருவர் வெற்றி பெற்றனர். ஒருவர் தோல்வி  அடைந்தார்.

பெரும்பான்மைக்காக குதிரை பேரம்
240 உறுப்பினர்களைக் கொண்ட மாநிலங்களவையில் பெரும்  பான்மைக்குத் தேவை 121 இடங் கள் ஆகும். தற்போது நிறைவு பெற்ற மாநிலங்களவை தேர்தலில் பாஜக மற்றும் கூட்டணி கட்சிகள் 33 இடங்களை (பாஜக மட்டும் 30) கைப்பற்றியுள்ள நிலையில், தேசிய ஜனநாயக கூட்டணியின்  பலம் 117 ஆகவும், பாஜகவின் பலம் 97 ஆக உயர்ந்துள்ளது. மாநிலங்க ளவையில் பாஜக அல்லாத எதிர்க்கட்சிகளின் பலம் 123 ஆக  உள்ளதால், மக்களவை போல  மாநிலங்களவையிலும் பெரும் பான்மையை நிரூபிக்க, தற்போது நிறைவுபெற்ற மாநிலங்களவை தேர்தலில் தீவிர குதிரைப் பேரத்  தில் பாஜக களமிறங்கியது. ராஜஸ்  தான் மாநிலத்தில் போட்டி வேட்பா ளரை அறிவித்தும் பலனளிக்காத தால், உத்தரப்பிரதேசம் மற்றும் இமாச்சலில் பணத்தை வாரி இறைத்து எதிர்க்கட்சிகளின் வாக்கு களை தங்கள் பக்கம் வளைத்து, பெரும்பான்மை இன்றி கூடுதலாக  2 மாநிலங்களவை உறுப்பினர் களை வெற்றி பெற வைத்துள்ளது பாஜக.