india

மது ஒழிப்பும் பாஜகவின் இரட்டை வேடமும்

கடந்த அக்டோபர் மாதம் ஒரு தனியார் தொலைக்காட்சியின் விவாத நிகழ்ச்சியில் தெலுங்கானா எம்.எல்.சி.யும் அம்மாநிலத்தின் முன்னாள் முத லமைச்சர் கே.சி.சந்திரசேகர ராவின் மகளு மான கவிதா,  பாஜகவின் மதவாத அரசி யலைச் சாடி புள்ளிவிபரங்களை அடுக்கிப் பேசி யிருந்தார்.

அவரைத் தொடர்ந்து பேசிய தமிழ்நாடு பா.ஜ.க தலைவர் அண்ணாமலை, கவிதா எழுப்பிய கேள்விக்கெல்லாம் பதி லளிக்காமல் எங்கெங்கோ சுற்றிவிட்டு, ‘தமிழ்நா டும் தெலுங்கானாவும் தங்கள் மாநிலத்தை குடிகாரர்களின் மாநிலமாக மாற்றிவிட்டது’ எனச் சொல்லிவிட்டு, இரண்டு மாநிலங்களின் மது விற்பனை வருவாயை குறிப்பிட்டுப் பேசினார்.  வழக்கமாக தமிழ்நாட்டையும் கேரளாவை யும் ‘குடிகாரர்களின் மாநிலங்களாக’ காட்டு வதில் இவர்கள் தவறுவதில்லை. ஆனால் இந்த ஆண்டு மே மாதம் வரை பாஜக ஆட்சி யில் இருந்த பெங்களூருவைப் பற்றி பேசாமல், கவனமாகத் தவிர்த்து விட்டார். இதன் பின் இருக்கும் உண்மை என்ன? தமிழ்நாட்டையும் கேரளாவையும் மட்டும் ஏன் குடிப் பழக்கத்தோடு இணைத்து பா.ஜ.க விஷமப் பிரச்சாரம் செய்கிறது?

சாராய ஆறு
அதே அக்டோபர் மாதத்தில் ஆங்கில இணைய ஊடகமான “தி பிரிண்ட்”டில் வெளி யான செய்தி, உத்தரப் பிரதேசம் எப்படி இந்தியா வின் புதிய சாராயத் தலைநகரமாக உருவாகி யுள்ளது என்பதை வெளிச்சம் போட்டுக் காட்டியது. உத்தரப் பிரதேசம் நாட்டிலேயே அதிகமான குடிக்கத்தக்க மற்றும் குடிக்கத்தகாத மதுவின் உற்பத்தியிலும் விற்பனையிலும் முதலிடம் பிடித்துள்ளது.

உத்தரப் பிரதேசம் 2023 நிதி ஆண்டில் கலால் வரி வருவாயில் ரூ.42,250 கோடி ஈட்டியது, இது 2017-18 இல்  ஈட்டியிருந்த ரூ.14,000 கோடியை விட மூன்று மடங்கு அதிகம். அதே ஆண்டில் தான் யோகி ஆதித்யநாத் தலைமையில் பா.ஜ.க ஆட்சியும் அம்மாநிலத்தில் அமைந்தது என்பது குறிப்பிடத்தக்கது. 2017 ஆம் ஆண்டில் இருந்து இப்போது வரை புதிதாக 25 டிஸ்டில்லரீஸ் மற்றும் 2 ப்ரூவரீஸ் (மதுபான ஆலைகள்) தொடங்கப்பட்டுள்ளன. ஒரு பக்கம் ‘இது ராமர்  பிறந்த ஊர்’, ‘அயோத்தி இந்துக்களின் புனிதத்தலம்’ என பிரச்சாரம் செய்து கொண்டு இன்னொரு பக்கம் மாநிலத்தில் சாராய ஆறை பாய்ச்சிக் கொண்டிருக்கிறது பாஜக. 2017 இல் இருந்து ஆண்டிற்கு ரூ.500 கோடி வருமானம் ஈட்டித்தரும் மாவட்டங்களுள் பிரதமரின் வார ணாசியும் அடங்கும். இந்த லட்சணத்தில் தான்  பா.ஜ.க தலைவர்கள், தமிழ்நாட்டிற்கு பாடம் எடுக்கிறார்கள். உத்தரப் பிரதேசம் பற்றி எந்த ‘கோடி மீடியாவும்’ (மீண்டும் மீண்டும் பொய்களைப் பரப்பும் கோயபல்ஸ் - மோடி ஊடகங்கள்) விவாத நிகழ்ச்சி நடத்தவில்லை. ஆனால் தமிழர்களும் மலையாளிகளும் தெலுங்கர்களும் ‘அதிகம் குடிப்பார்கள்’ என்கிற கருத்தை மட்டும் நாடு முழுவதும் கொண்டு சேர்த்திருக்கின்றன.

குஜராத்தின் கதி
அடுத்தது, டிசம்பர் 22 அன்று குஜராத்தில் ஆட்சியில் இருக்கும் பாஜக அரசு காந்தி நகரில்  உள்ள கிஃபிட் சிட்டி பகுதியில் ‘உலகத்தர வணிகச் சூழலை’ உருவாக்க பெருநிறுவனங்களின் நலனை மனதில் கொண்டு மதுவிலக்கை தளர்த்தி உள்ளது என்ற செய்தி 1960 இல் மாநிலம் உருவான ஆண்டில் இருந்து குஜராத் மாநிலத்தில் மதுவிலக்கு ‘காந்தி பிறந்த மண்’ என்கிற நெறியின் காரணமாக அமலில் இருந்து வந்தது. இதைத் தான் இப்போது பாஜக மெதுவாக துடைத்து எறிய ஆரம்பித்திருக்கிறது.

 கிட்டத்தட்ட அறுபது ஆண்டுகளுக்கு மேல் அமலில் இருந்த மதுவிலக்கு, பாஜக அரசால் தளர்த்தப் படுவது குறித்து ‘கோயபல்ஸ் - மோடி மீடியாக்கள்’  கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை.  அதேபோல் இரண்டு இனக் குழுக்களுக்கு இடையே சண்டை மூண்டு, பல நூறு பேர் மடிந்து, 250 க்கும் மேற்பட்ட தேவாலயங்கள் எரிக்கப்பட்டு, 7 மாதங்களுக்கு மேல் ஆகியும் பிரதமர் சென்று பார்த்திடாத மணிப்பூர் மாநிலம்;  இங்கு, கடந்த டிசம்பர் 6 அன்று பைரன் சிங் தலை மையிலான பாஜக அரசு மணிப்பூர் மது ஒழிப்பு சட்டம், 1991 ஐ திரும்பப் பெற்றுக் கொண்டது. மாநி லத்தில் மதுவை சட்டப்பூர்வமாக்க வழிமுறை களை வகுத்தது. இதன் மூலம், அங்கு கிட்டத்தட்ட 30 ஆண்டுகள் அமலில் இருந்த மதுவிலக்கு தளர்த்தப்பட்டது.

மது விற்பனையில் இருந்து ரூ.600 கோடி வரியை தேற்றலாம் என பைரன் சிங் அரசு எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது. ஏற்கனவே பற்றி எரிந்து கொண்டிருக்கும் ஊரில்  அதை அணைப்பதற்கு முன்னரே அரசு இது போன்ற நடவடிக்கையை எடுத்திருப்பது அம்மாநில மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

இதையும் மோடி அரசிடம் விலைபோன ஊடகங்கள் கண்டுகொள்ளவில்லை. மேற்கண்ட மூன்றுமே வரலாற்று நிகழ்வுகள். தன்னுடைய கட்சி ஆளும் மாநிலங்களில் நிலைமை இப்படி இருக்க, தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை மற்றும் அவரது சகாக்கள் மட்டும் அதே பழைய பல்லவியைப் பாடிக்கொண்டிருக்கின்றனர். பாஜக-விடம் எந்த மாற்றும் இல்லை என்பதை இது காட்டுவதோடு, பாஜக மதுப் பழக்கத்திற்கு எதிராக எத்தனை பிரச்சாரங்களை மேற்கொண்டுள்ளது என்கிற கேள்வியையும் கேட்க வைக்கிறது. 2023 -ன் தொடக்கத்தில்  போதைப்பொருள் பழக்கத்திற்கு இளைஞர்கள் அடிமையாவதை எதிர்த்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி 1 கோடி கையெழுத்து திரட்டும் பிரச்சாரத்தில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஈடுபட்ட னர்.

பாஜக இது போல என்ன செய்துள்ளது? எல்லாவற்றிற்கும் ஒரு அணி வைத்திருக்கும் கட்சி மதுப் பழக்கத்தினால் பாதிக்கப்படும் மக்க ளுக்கு அதில் இருந்து மீள கவுன்சிலிங் மை யங்கள் அமைத்திருக்கிறதா அல்லது முகாம்கள் நடத்தியிருக்கிறதா? எதுவும் இல்லை.