india

img

அலகாபாத் உயர் நீதிமன்றம் தடை விதிக்க மறுப்பு

புதுதில்லி, பிப். 2 - ஞானவாபி மசூதியின் தெற்கு பாதாள அறையில் இந்துமதத்தினர் பூஜைகளை நடத்த வாரணாசி மாவட்ட  நீதிமன்றம் ஏற்கெனவே அனுமதி வழங்கி யிருந்த நிலையில், இந்த உத்தரவுக்கு தடைவிதிக்க அலகாபாத் உயர்நீதி மன்றம் மறுத்துள்ளது. முன்னதாக மாவட்ட நீதிமன்றம் அளித்த தீர்ப்புக்கு தடை விதிக்கக் கோரி,  மசூதியை நிர்வகிக்கும் அஞ்சுமன் இன்டெஜாமியா மசாஜித் கமிட்டி, உச்ச நீதிமன்றத்தில் அவசர மனுவைத் தாக்கல் செய்தது.

ஆனால், அலகாபாத் உயர் நீதிமன்றத்தை அணுகுமாறு, உச்ச  நீதிமன்றம் கூறியிருந்தது.  இந்நிலையில்தான், அலகாபாத் உயர் நீதிமன்றத்தை மசூதி நிர்வாகம் நாடி யது. ஆனால், ஞானவாபி மசூதி வளா கத்தில், இந்துமத வழிபாடுகளை நடத்த  அனுமதி வழங்கியது சரிதான் என்று அலகாபாத் உயர் நீதிமன்றமும் தீர்ப் பளித்துள்ளது. இது வாரணாசி இஸ்லா மியர்கள் மத்தியில் அதிர்ச்சியையும், அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ளது.  வாரணாசியில், காசி விஸ்வநாதர் கோவிலையொட்டி, ஞானவாபி மசூதி வளாகம் அமைந்துள்ளது.

நீதிமன்ற உத்தரவுப்படி, சமீபத்தில், இந்த வளா கத்தில் ஆய்வு நடத்திய ‘இந்திய தொல்லியல் துறை’யினர், பிரம்மாண்டக் கோவிலை இடித்துத்தான் மசூதி  கட்டப் பட்டுள்ளதாக ஒரு அறிக்கையைத் தாக்கல் செய்தனர்.  இதைத் தொடர்ந்து, ஞானவாபி வளாகத்தை இந்துக்களிடம் ஒப்படை க்க வேண்டும் என்ற கோரிக்கையை கிளப்பிய சங்-பரிவாரங்கள் பல கட்ட முயற்சிகளில் இறங்கினர்.

குறிப்பாக, கடந்த 1993-ஆம் ஆண்டு மசூதி மூடப்படும் வரை, மசூதியின் தெற்குப் பகுதியிலுள்ள பாதாள அறையில் பூஜைகள் நடந்ததாகவும், எனவே, மீண்டும் பூஜைகள் மேற்கொள்ள அனு மதியளிக்க வேண்டும் என்றும் அர்ச்ச கர் சோம்நாத் வியாஸின் குடும்பத்தி னர் மூலம் வாரணாசி மாவட்ட நீதிமன்றத் தில் மனுத்தாக்கல் செய்தனர். ஆனால், மசூதியின் தெற்கு பாதாள அறையில் எந்தவிதமான பூஜையும் நடைபெற்ற தில்லை என்று மசூதி நிர்வாகம் நீதி மன்றத்தில் வாதிட்டது.

ஆனால், ஜனவரி 31 அன்று இந்த  மனுவை விசாரித்த மாவட்ட நீதிபதி அஜய் கிருஷ்ண விஸ்வேஷா, ‘வியாஸ் தெஹ்கானா’ எனப்படும் மசூதியின் தெற்கு பாதாள அறையில் உள்ள சிலை களுக்கு மனுதாரர் மற்றும் காசி விஸ்வ நாத் அறக்கட்டளையால் நியமிக்கப் பட்ட அர்ச்சகர் மூலம் பூஜை வழிபாடு கள் நடத்த, ஏழு நாட்களுக்குள் இரும்பு தடுப்பு மற்றும் இதர பொருட்களை கொண்டு தகுந்த ஏற்பாடுகளை செய்ய  வேண்டும் வாரணாசி மாவட்ட ஆட்சி யருக்கு உத்தரவிடப்படுவதாக அறிவித் தார். மாவட்ட நீதிபதி பதவியில் இருந்து ஓய்வு பெறும் இறுதி நாளில் இந்தத் தீா்ப்பை நீதிபதி ஏ.கே. விஸ்வேஷா அளித்திருந்தார். இதையடுத்து, அன்று இரவே போலீசாரைக் குவித்த, ஆதித்யநாத் தலைமையிலான உ.பி. பாஜக அரசு, மாவட்ட ஆட்சியர் எஸ். ராஜலிங்கம் தலைமையில் மசூதியின் தெற்குப் பகுதி யில் அமைந்துள்ள கிரில்ஸை வெட்டி, மசூதி வளாகத்திற்குள் நுழைந்து பூஜைக்கான ஏற்பாடுகளைச் செய்து கொடுத்தது.

மாவட்ட நீதிபதி அளித்த தீர்ப்பில், ஞானவாபி மசூதியின் தெற்குப் பகுதியி லுள்ள பாதாள அறையை இந்துக்களின் பூஜைக்கு ஒப்படைக்க 7 நாட்கள் அவ காசம் அளித்திருந்த நிலையில், இர வோடு இரவாக இடிப்பு வேலையை  பாஜக அரசு செய்தது. அதைத்தொட ர்ந்து இரவு 10.30 மணியளவில் கியான் வாபி மசூதியில் பண்டிட் சோம்நாத் வியாஸ் குடும்பத்தினர் மூலம் பூஜை களும் செய்யப்பட்டன. தொல்லியல் துறையினரால் கண்டுபிடிக்கப்பட்டு கரு வூலத்தில் வைக்கப்பட்டிருந்த எட்டு சிலைகளை பாதாள அறைக்குள் வைத்து, பண்டிட் ஓம் பிரகாஷ் மிஸ்ரா பூஜை செய்தார். புதன்கிழமை இரவு 11 மணியளவில் தனக்கு அவசர தொலைபேசி அழைப்பு கள் வந்ததாகவும், உடனடியாக தெற்கு பாதாள அறையில் பூஜைகளை மேற் கொள்ள வரும்படி கேட்டுக் கொண்ட தாகவும் பண்டிட் சோம்நாத்தின் பேரன் ஜிதேந்திர வியாஸ்(62) பேட்டி ஒன்றில்கூறினார். அதாவது, இந்துக்களோ, காசி விஸ்வநாதர் கோயில் நிர்வாகமோ இதில் எந்த அழுத்தத்தையும் கொடுக் காத நிலையில், அரசியல் காரணங் களுக்காக சிலரோடு  மாவட்ட நிர்வாகம் கூட்டுச் சேர்ந்துகொண்டு, நீதிமன்றத் தீர்ப்பைச் சாதகமாக்கி அவசர அவசர மாக, நீதிமன்றம் அனுமதி வழங்கிய 8  மணி நேரத்தில் மசூதிப் பகுதியில் பூஜை களை நடத்தியது. இதையடுத்தே, மாவட்ட நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் ஞானவாபி மசூதி நிர்வாகம் வியாழக் கிழமை காலை முறையிட்டது.

இந்த மனு வை விசாரிக்க மறுத்துவிட்ட உச்ச நீதி மன்றம், அலகாபாத் உயர் நீதிமன்றத்தை நாடுமாறு கூறிவிட்டது.  அதன்படி உயர் நீதிமன்றத்தை நாடிய நிலையில்தான், ஞானவாபி மசூ தியின் பாதாள அறையில், இந்துக்கள் பூஜை நடத்த வாரணாசி மாவட்ட நீதி மன்றம் வழங்கிய அனுமதிக்கு இடைக் காலத் தடைவிதிக்க முடியாது என்று அலகாபாத் உயர் நீதிமன்றமும் கைவி ரித்து, வழக்கு விசாரணையை பிப்ரவரி 6-ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது.

இதனால், வெள்ளிக்கிழமையன்று இரண் டாவது நாளாக, ஞானவாபி மசூதியின் பாதாள அறையில் எவ்விதத் தடையு மின்றி இந்துமத பூஜைகள் நடத்தப் பட்டன. நாள்தோறும் 5 வேளை பூஜைகள் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இதற்கு தங்களின் வருத்தத்தை யும், அதிருப்தியையும் தெரிவிக்கும் வகையில், வாரணாசி முஸ்லிம்கள் தங்களின் கடைகளை அடைத்து எதிர்ப்பைப் பதிவு செய்தனர்.