india

img

தன்னிகரற்ற, அர்ப்பணிப்புமிக்கத் தலைவர் தோழர் எம்.என்.எஸ். வெங்கட்டராமன் - பிரகாஷ்காரத் புகழஞ்சலி

தோழர் எம்.என்.எஸ். கட்சியின் ஒரு தன்னிகரற்ற மற்றும் அர்ப்பணிப்புமிக்க தலைவர் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பிரகாஷ்காரத் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பிரகாஷ்காரத் அனுப்பியுள்ள இரங்கல் செய்தி வருமாறு,

தோழர் எம்.என்.எஸ்.வெங்கட்டராமன் அவர்கள் திடீரென, எதிர்பாரா விதமாக நம்மை விட்டுப் பிரிந்து விட்டார் என்ற செய்தி அறிந்து அதிர்ச்சியும் துயரமும் அடைந்தேன். தோழர் எம்.என்.எஸ். கட்சியின் ஒரு தன்னிகரற்ற மற்றும் அர்ப்பணிப்புமிக்க தலைவர் ஆவார். கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் என்ற அடிப்படையில் அவர் பல்வேறு பொறுப்புகளை நிறைவேற்றி வந்தார்.

விவசாயிகள் மற்றும் தொழிலாளர்களின் பல்வேறு போராட்டங்களுக்கு தலைமை தாங்கிய அனுபவத்தை பெற்றுள்ள அவர் ஒரு சிறந்த அமைப்பாளர் ஆவார். அவரது கருத்துக்கள், தெளிவாகவும் செறிவாகவும் கூர்மையான அரசியல் உணர்வுடனும் கூடியதாக வெளிப்படும்.

அவரது பங்களிப்பு மிக அதிகமாக தேவைப்படுகிற இந்த தருணத்தில், அவரது மறைவு கட்சிக்கு ஒரு பெரிய இழப்பு ஆகும்.

அவரது நினைவுக்கு எனது மரியாதையை செலுத்துகிறேன். ஆழமான துயரம் சூழ்ந்துள்ள இந்த தருணத்தில் அவரது மனைவிக்கும் மகனுக்கும் எனது இதயப்பூர்வமான இரங்கல்களை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு பிரகாஷ்காரத் கூறினார்