பாலஸ்தீனர்களுக்கு எதிராகக் கொடூர மான இனப்படுகொலையில் இஸ்ரேல் ஈடு பட்டுள்ளது. வான் தாக்குதல் மூலம் இதுவரை ஆயிரம் குழந்தைகள் உட்பட ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்டோர் கொன்று குவிக்கப்பட்டுள் ளனர்.
அமெரிக்கா முழுமையான ராணுவ உத வியை இஸ்ரேலுக்கு வழங்குகிறது. இதன் மூலம் அமெரிக்காவின் பிரதிநிதியாகவே இஸ்ரேல் இந்தப் போரை நடத்துகிறது. இஸ்ரேல் எந்த ஒரு பாலஸ்தீனக் குடும்பத்தையும் விட்டுவைக்கப் போவதில்லை என அங்கிருந்து வரும் தக வல்கள் நம்மை அதிர்ச்சிக்குள்ளாக்குகின்றன. இறக்காதவர்கள் காயமடைந்திருக்கிறார்கள்; யார் காயமடையவில்லையோ அவர்கள் இடம் பெயர்ந்திருக்கின்றனர்; உயிரைக் காத்துக் கொள்ள மருத்துவமனைக்குச் சென்றவர்கள் அங்கேயே தாக்குதல் நடத்தி படுகொலை செய்யப்படுகிறார்கள். சர்வதேச மனித உரிமைச் சட்டங்கள் மற்றும் போர் நடைமுறைகள் அனைத்தையும் காலில் போட்டு மிதிக்கிறது இஸ்ரேல்.
ஐ.நா சபையின் பொதுச்செயலாளர் அந்தோ ணியோ குட்டரெஸ், இஸ்ரேலின் அடாவடி யைக் கடுமையாக கண்டித்திருக்கிறார். “10 லட் சத்துக்கும் அதிகமானோரை தெற்கு காசா வுக்குப் பாதுகாப்பாக இடம்பெயருமாறு கூறிவிட்டு அங்கேயும் இஸ்ரேல் குண்டுகளை வீசுகிறது. கடந்த 56 ஆண்டுகளாக இஸ்ரேலி யர்களின் குடியேற்றங்களால் பாலஸ்தீனர்க ளின் நிலம் தொடர்ந்து ஆக்கிரமிக்கப்படுகிறது. வன்முறை அரங்கேற்றப்படுகிறது. இதனால் பாலஸ்தீன மக்கள், பொருளாதார நெருக்கடி யாலும் வீடுகளை இழந்தும் பாதிக்கப்பட்டு வரு கிறார்கள். இஸ்ரேல் மீதான ஹமாஸ் தாக்குத லுக்கு இதுவும் ஒரு காரணம். ஆனால் ஹமாஸின் தாக்குதல்களை நியாயப்படுத்த முடி யாது. ஐ.நா தீர்மானங்கள் மற்றும் முந்தைய ஒப்பந்தங்களின்படி சுதந்திரமான தேசத்தை பாலஸ்தீனர்கள் காண வேண்டும். இஸ்ரேல் சர்வதேச மனித உரிமைச் சட்டத்தை மீறுவது மிகுந்த வருத்தமளிக்கிறது. இந்தச் சட்டத்துக்கு அப்பாற்பட்டவர்கள் யாரும் இல்லை” என்று தெரிவித்துள்ளார்.
காசாவில் 22 மருத்துவமனைகளை உடனே காலி செய்ய இஸ்ரேல் உத்தரவு போட்டிருக்கி றது. இதனைக் காயம் மற்றும் நோய்வாய்ப்பட்ட வர்களுக்கான மரண தண்டனை என்று உலக சுகாதார நிறுவனம் சரியாகவே குறிப்பிட்டி ருக்கிறது. இப்போதாவது மோடி அரசு இஸ்ரே லுக்கு அளித்து வரும் மறைமுக ஆதரவை திரும்பப்பெற்று, பாலஸ்தீன மக்களுக்குத் தனது ஒருமைப்பாட்டைத் தெரிவித்திட வேண்டும். இஸ்ரேல் நடத்தும் மனித படுகொலையை தடுத்து நிறுத்த சர்வதேச சமூகம் முன் வர வேண்டும்.