headlines

img

உரக்கப் பேசினால் பொய் உண்மையாகுமோ?

ஐந்து மாநில தேர்தல் பிரதமர் மோடி வகையறாவின் இரும்பு நெஞ்சங்களை ரொம்ப வும் உருக்கிவிட்டது. ஐந்து கட்ட தேர்தல் முடிந்தா லும் கூட மோடியின் முகாம் அலுவலகமாக உ.பி. மாறிவிட்டது. யோகி ஆதித்யநாத் எண்பதுக்கும் இருபதுக்குமான போட்டி என்று முஸ்லிம்களுக்கு எதிராக விஷம் கக்கினார். ஆனால் மோடியோ, ஜாதி, மதம் கடந்து நிற்கவும் நாட்டை தற்சார்பு டையதாக மாற்றி வலுப்படுத்தவும் இதுவே சரி யான தருணம் என்று பேசியிருக்கிறார். இருவரும் வேறு வேறு வார்த்தைகளில் பேசுவது போலத் தெரியும். ஆனால் முஸ்லிம்களைக் கொல்லுவோம் என்று ஹரித்துவாரில் நடந்த சாமியார்கள் மாநாட்டில் வெறித்தனமாகப் பேசியதை பிரதமர் என்ற அடிப்படையில் ஒரு வார்த்தை கூடக் கண்டிக்காததும் மவுனம் காத்ததும் அதற்கு சம்மதம் என்பதுதானே!

ஆனால் இவர் வேறொரு வாதத்தை முன் வைக்கிறார். மற்ற கட்சிகள் எல்லாம் குடும்பக் கட்சிகள் என்கிறார். அவர் பேசிய ஒரு மேடை யில்தான் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கின் மகனும் இருந்தார் என்பதை அவர் அறியாமலிருக்க வாய்ப்பில்லை. ஆயினும் கூட தொடர்ந்து அவர் குடும்ப அரசியலுக்கும் தீவிர தேசபக்தர்களுக்கும் இடையிலான போட்டி தான் உத்தரப்பிரதேச தேர்தல் என்கிறார்.

இவர்களின் அகராதியில் தீவிர தேசபக்தர்கள் என்றால் சுதந்திரப் போராட்டத்தில் கலந்து கொள்ளாதவர்கள், அதில் பங்கேற்றவர்களை காட்டிக் கொடுத்தவர்கள்; மன்னிப்புக் கடிதம் எழுதிக் கொடுத்துவிட்டு வெளியே வந்து, ‘மாட்சிமை தாங்கிய’ பிரிட்டிஷ் ஆட்சியாளர்க ளுக்கு சேவகம் செய்தவர்கள் தான் என்று அர்த்தம். அத்துடன் தற்போது இந்திய ராணுவம் நடத்திய  தாக்குதல்களுக்கு எதிராக கேள்வி கேட்காத வர்கள், ஆதாரம் கேட்காதவர்கள் என்று அர்த்தம்.

அதுமட்டுமல்ல, “கமிஷனுக்காக” வெளி நாட்டுப் பொருட்கள் மீது முந்தைய அரசுகள் கவனம் செலுத்தின. நமது ராணுவம் வெளி நாட்டு நிறுவனங்களைச் சார்ந்திருக்க வைத்து பாது காப்புத் தொழிற்சாலையை முந்தைய அரசுகள் அழித்துவிட்டன என்கிறார் மோடி. ஆனால் அவர் மற்றவர்களை ஒரு விரல் காட்டி குற்றம் சாட்டுகை யில் மூன்று விரல்கள் அவரை நோக்கியே இருக்கின்றன என்பதை மறந்துவிட்டார், பாவம்!

ரபேல் போர் விமான ஒப்பந்தத்தில் முந்தைய காங்கிரஸ் அரசு 126 விமானங்களுக்கு சம்மதித்த தொகை வெறும் ரூ.41,000 கோடி தான். ஆனால் இவரது அரசோ வெறும் 36 விமானங்களுக்கு தரச் சம்மதித்த தொகை ரூ.58,000 கோடி என்பதன் ரகசியத்தை பிரான்ஸ் நாட்டின் ஊழல் தடுப்பு நிறு வனம் அம்பலப்படுத்தியதை உலகமே அறியும்.  ஆனாலும் சுத்த சுயம்பிரகாசர் போல உரக்கப் பேசுகிறார் என்பதை நாட்டு மக்கள் நன்கறிவார்கள்.

ஒன்றிய இரட்டை இன்ஜின் ஆட்சியும் யோகி ஆதித்யநாத்தின் மாநில ஆட்சியும் உ.பி.யை கடைசி இடத்துக்குள் தள்ளிவிட்டதற்கு மக்கள் நல்ல பதில் தருவார்கள் என்பது உறுதி.