மக்களவையில் புதன்கிழமை விவாதம் நடந்து கொண்டிருந்தபோது திடீரென பார்வை யாளர்கள் மாடத்தில் இருந்து 2 நபர்கள் அரங் கிற்குள் குதித்தனர். அதோடு அவர்கள் 2 பேரும் வண்ணப் புகைக் குண்டுகளை வீசினர். இதனைக் கண்டு பதறிய எம்.பி.க்கள் அதிர்ச்சியடைந்தனர். உறுப்பினர்களில் சிலர் அவர்களை பிடித்து அவைக் காவலர்களிடம் ஒப்படைத்தனர். இந்த சம்பவம் இந்திய நாடாளுமன்ற வரலாற்றில் கரும்புள்ளியாக மாறியுள்ளது.
நாடாளுமன்றப் பாதுகாப்பு ஏற்பாடுகளில் மிகப்பெரிய தோல்வி என்பதை அரசு ஒப்புக் கொள்ளவேண்டும். ஜனநாயகத்தின் தூணாக விளங்கும் நாடாளுமன்றத்துக்கு மிகப் பெரிய அச்சுறுத்தலாக இந்த சம்பவம் அமைந்துள்ளது. இந்த சம்பவம் குறித்து நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் உறுப்பினர்கள் கேள்வி எழுப்பி யதற்கு நேர்மையாக பதில் அளிக்க அரசிடம் வார்த்தைகள் இல்லை. ஜனநாயகம் பற்றி எப்போ தும் எதிர்க்கட்சிகளுக்கு பாடம் எடுக்கும் பிரதம ரும் உள்துறை அமைச்சரும் வாய் மூடி மவுனம் காக்கின்றனர். தாக்குதல் நடந்து 24 மணிநேரம் கழித்து டிவிட்டரில் கருத்து தெரிவித்துள்ள பிரதமர் நரேந்திரமோடி நாடாளுமன்ற பாது காப்பை பலப்படுத்தவேண்டும் என்று மட்டும் முடித்துக் கொண்டுள்ளார்.
தாக்குதல் நடைபெற்ற தினத்திற்கு முன்பு நாடாளுமன்றத்தில் காஷ்மீர் தொடர்பான விவாதத்தின் போது துள்ளித் துள்ளிக் குதித்த உள்துறை அமைச்சர் அமித்ஷா, எங்கே போனார் என்றே தெரியவில்லை. இதில் வேடிக்கை என்னவென்றால் தாக்குதல் நடத்தியவர்க ளுக்கு ‘பாஸ்’ கொடுத்த மைசூரைச் சேர்ந்த பாஜக எம்பி பிரதாப் சிம்ஹா மக்களவையில் எந்த பதற்ற மும் இல்லாமல் அமர்ந்துகொண்டிருக்கிறார். அவர் மீது நடவடிக்கை எடுப்பதற்கு பதிலாக, மக்களவையில் நாடாளுமன்ற பாதுகாப்புக் குறைபாடுகள் குறித்து கேள்வி எழுப்பிய தமிழ் நாட்டை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் கள் உள்பட 14 பேர் இடை நீக்கம் செய்யப்பட்டிருக்கி றார்கள். இது அப்பட்டமான ஜனநாயக விரோத மான செயலாகும்.
நாடாளுமன்ற தாக்குதல் சம்பவத்தில் ஒன்றிய பாஜக அரசு எதையோ மறைக்கப் பார்க்கிறது. யாரையோ காப்பாற்றப் பார்க்கிறது என்பது மட்டும் உண்மை.
ஜனநாயகத்தின் தூணாக விளங்கும் நாடா ளுமன்றத்துக்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தலை எளிதாக எடுத்துக் கொள்ள முடியாது. திட்ட மிட்டு நடத்தப்பட்டுள்ள இந்த தாக்குதல் குறித்து விரிவாக விசாரிக்கப்பட வேண்டும். தவறு செய்த வர்கள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும். எதிர்காலத்தில் பாதுகாப்பு குறைபாடுகள் ஏற் படாதவாறு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவை எல்லாம் நடக்க முதலில் அரசு உண்மை யைப் பேசவேண்டும்.