விளாடிமிர் புடின் மீண்டும் வெற்றி பெற்றுள் ளார். இந்த முறை 87 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகளைப் பெற்று, உலக அரசியல் தலை வர்களிலேயே மிகப் பெரிய அளவிற்கு மக்கள் செல்வாக்குடன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
ஓராண்டுக்கும் மேலாக உக்ரைன் போர் நடந்து கொண்டிருக்கும் நிலையில், ரஷ்ய ஜனாதிபதி தேர்தலில் இந்த வெற்றியை புடின் பெற்றிருப்பது, அமெரிக்கா உள்ளிட்ட மேற் கத்திய சக்திகளிடமிருந்து ரஷ்யாவைப் பாது காப்பதற்காக புடின் மேற்கொண்டிருக்கும் நட வடிக்கைகளுக்கான ரஷ்ய மக்களின் அங்கீகா ரம் என்று சர்வதேசிய அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.
உலக அரசியல் அரங்கில் அனைத்து நாடுக ளையும் தனது செல்வாக்கின் கீழ் கொண்டு வந்து அடக்கி ஆள முனைகிறது அமெரிக்க ஏகாதி பத்தியம். அதன் ஒரு பகுதியாக ஆசியாவைச் சுற்றி வளைப்பது எனும் மிகப் பெரும் புவி அரசி யல் சூழ்ச்சித் திட்டத்தை அரங்கேற்றியும் வரு கிறது. அத்திட்டத்தின் ஒரு பகுதியே சோசலிச சீனா மற்றும் அதன் நெருக்கமான நட்பு நாடான ரஷ்யா மற்றும் இவற்றுடன் நெருக்கமாக உள்ள நாடுகளை அமெரிக்கா குறி வைத்திருப்பது.
ரஷ்யா தற்போது ஒரு சோசலிச நாடு அல்ல என்ற போதிலும், சோவியத் ஒன்றிய கால கட்டத்திலிருந்தே ரஷ்ய மக்களும், சோவியத் வீழ்ச்சிக்குப் பின்னர் ஆட்சிக்கு வந்த புடின் அர சும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் ஆதிக்கத் திற்கு எதிராக வலுவான முறையில் போராடி யும், செயல்பட்டும் வருகின்றனர். இந்த பின்னணி யில் தான், வரலாறு நெடுகிலும் பல கொடூர மான போர்களை நடத்தி லட்சக்கணக்கான மக்களை அழித்தொழித்த அமெரிக்கா தலை மையிலான நேட்டோ ராணுவக் கூட்டணி, ரஷ்யாவின் அண்டை நாடான - முன்னாள் சோ வியத் குடியரசுகளில் ஒன்றான - உக்ரைனில் அமெரிக்க கைக்கூலியான ஜெலன்ஸ்கியை ஆட்சியில் அமர்த்தி, அவர் மூலமாக ரஷ்யா வுக்கு எதிரான போரைத் தூண்டி, ஓராண்டிற் கும் மேலாக நடத்தி வருகிறது.
ரஷ்யாவின் மீது திணிக்கப்பட்ட போர் இது. இந்தப் போரைத் தவிர்க்கவும், நிறுத்தவும் ரஷ்யா தொடர்ந்து முயற்சி செய்ய வேண்டும். அதே வேளையில், ரஷ்யாவைச் சுற்றி வளைக்கவும், பொருளாதார ரீதியாக தடைகளை விதித்து அந்நாட்டை நிலைகுலையச் செய்யவும் அமெ ரிக்காவும், அதன் ஐரோப்பிய கூட்டாளிகளும் மேற்கொண்டுள்ள பல்வேறு விதமான தாக்கு தல்களை சாதுரியமாக எதிர்கொள்ள வேண்டிய தேவையும் ரஷ்யாவுக்கு உள்ளது. இதை, அமெ ரிக்க ஏகாதிபத்தியத்தின் சூழ்ச்சிகரமான நகர்வு களை அறிந்து துல்லியமாக புடின் எதிர்கொண்டு வருகிறார் என்பதில் ஐயமில்லை. இந்தநிலை யில் பெருவாரியான வாக்குகளுடன் அவர் மீண்டும் வெற்றி பெற்றிருப்பதில் ஆச்சரியம் ஏதுமில்லை.