கடந்த மக்களவைத் தேர்தல் போலன்றி இந்த தேர்தலில் எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து ‘இந்தியா’ அணியை உருவாக்கியிருப்பதால் மூன்றாவது முறை ஆட்சிக் கனவு நிறை வேறாது என்ற எண்ணத்தில் தங்களது மதப் பிளவுவாத நடைமுறையை துவக்கியிருக்கிறது பாஜக. குடியுரிமை திருத்தச் சட்டத்தை அமல் படுத்துவதற்கான அறிவிப்பை வெளியிட்டு, அதுவும் தேர்தல் தேதி அறிவிக்கப்படவிருக்கும் சூழலில். இஸ்லாமியர்களின் ரம்ஜான் நோன்பு துவங்கும் நாளில் ஒன்றிய பாஜக அரசின் அறி விப்பு வெளியிட்டதே அதன் மதத்துவேஷத்தை வெளிப்படுத்துகிறது.
நான்காண்டுகளாக காத்திருந்தவர்கள் அரசியல் லாபம் கருதியும் மதரீதியிலான ஆதாயம் அடையவுமே தற்போது அறிவித்தி ருக்கிறார்கள். இந்த அறிவிப்புக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பைத் தெரிவித்துள்ளன. கேரள, தமிழக, கர்நாடக மாநில அரசுகள் இந்தச் சட்டத்தை தங்கள் மாநிலங்களில் அமல்படுத்த மாட்டோம் என்று அறிவித்து தங்களது எதிர்ப்பைத் தெரிவித்துள்ளன.
ஏற்கெனவே இந்த சட்டம் கொண்டு வரப் பட்ட போதே நாடு முழுவதும் எதிர்ப்புக் கிளர்ச்சிப் போராட்டங்கள் வெடித்தன; சம உரிமை வழங்கும் அரசியல் சட்டப்பிரிவு 14-ஐ மீறும் செயல் என்றும் இஸ்லாமியர்களை நாடற்றவர்க ளாக்கும் நடவடிக்கை என்றும் பலத்த எதிர்ப்புக் கிளம்பியது. இப்போது தேர்தல் பத்திர ஊழல் விவகாரத்தில் இருந்து தப்பிப்பதற்கும் திசை திருப்புவதற்கும் மோடி அரசு இந்த அறி விப்பை வெளியிட்டுள்ளது என்று சீத்தாராம் யெச்சூரி உள்ளிட்ட தலைவர்கள் கடும் கண்ட னம் தெரிவித்துள்ளனர்.
இந்த அறிவிப்பு இஸ்லாமியர்களை மட்டு மின்றி இலங்கைத் தமிழர்களையும் பாதிக்கும். அத்துடன் அசாம், மேற்குவங்க மாநிலங்களில் முஸ்லிம்களை கடுமையாகப் பாதிக்கும் என்று கண்டனக்குரல் எழுந்திருப்பதோடு அசாமில் மாணவர் அமைப்பு போராட்டத்தில் ஈடுபடப் போவதாகவும் அறிவித்துள்ளது. இந்திய ஜன நாயக வாலிபர் சங்கம் நீதிமன்றம் செல்லப் போவ தாகவும் கூறியுள்ளது.
தற்போதைய சட்ட அறிவிப்பு விதிகள், மாநில அரசுகளின் உரிமையைப் பறிப்பதாகவும் குடியுரி மையை முடிவு செய்வதிலிருந்து மாநிலங்களை ஒதுக்கிடும் வகையிலும் அமைக்கப்பட்டிருப்பது ஒன்றிய பாஜக அரசின் எதேச்சதிகாரத் தன்மை யையே காட்டுகிறது. இந்தச் சட்டம் நாடாளு மன்றத்தில் நிறைவேறுவதற்கு காரணம் தமிழ் நாட்டின் அதிமுகவும் உடந்தையாக இருந்ததே யாகும். ஆனால் தற்போது சிறுபான்மையின ருக்கு பாதுகாப்பாக இருப்போம் என்று அதிமுக பசப்புகிறது. எனவே இந்த தேர்தலில் பாஜக கூட்டணியையும் அதிமுகவையும் தோல்வியு றச் செய்து இந்த சட்டத்தை ரத்து செய்திடுவதே நாட்டு மக்களின் - தமிழக மக்களின் தலையாய கடமையாகும்.