எட்டாண்டுகளுக்கு முன் இன்றைய பிரதமர் நரேந்திர மோடியை வளர்ச்சியின் நாயகன் என்று பிரச்சாரம் மூலம் பிம்பத்தை கட்டமைத்தார்கள். ஆனால் அவரது ஏழாண்டு கால ஆட்சி அந்த வளர்ச்சி பிரச்சாரத்தை மண்ணாக்கி விட்டது. அதனால் இப்போது அவருக்கு வேறொரு பிம்பம் தேவைப்படுகிறது. அதற்காக அவரது அமைச்சரவை சகாக்கள் பல்வேறு பில்டப்புகளை கொடுத்து வரு கிறார்கள்.
அவற்றில் ஒன்றுதான் ஒன்றிய சிறுபான்மை யினர் நலத்துறை அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வியின் அமைதிக்கான ஒளிவிளக்காக பிரதமர் மோடி திகழ்கிறார் என்பது. இந்த பிம்பம் நடக்க விருக்கிற ஐந்து மாநில தேர்தல்களில் ஆட்சியை கைப்பற்றுவதற்கு பாஜகவுக்குப் பலனளிக்கும் என்ற எண்ணத்திலேயே செய்யப்படுகிறது. ஆனால் அது கைகூடாது என்பதையே அந்த மாநிலங்களில் பாஜகவினருக்கு மக்கள் காட்டும் எதிர்ப்பு தெளி வாக்குகிறது.
வளர்ச்சி நாயகன் பில்டப்புக்கு காரணமான குஜ ராத் முதல்வர் பதவிக்காலத்தில் அவரது நட வடிக்கைகள் கலவரங்களில் ஈடுபடுபவர்களை கண்டு கொள்ளாமல் இருந்ததுதான். அதனால்தான் அவரது கட்சியைச் சேர்ந்த அப்போதைய பிரத மரான அடல்பிகாரி வாஜ்பாய் கூட இனி எந்த முகத்தோடு வெளிநாடு செல்வேன் என்று அப்போது தனது எதிர்ப்பை வெளிப்படுத்தினார்.
அதன் தொடர்ச்சியாகத்தான் பின்பு மோடி அமெரிக்காவுக்கு பயணம் செய்வதற்கான விசா அனுமதி கொடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அவரது குஜராத் மாநில முதல்வர் செயல்பாடு கோத்ரா ரயில் எரிப்பு சம்ப வத்திலும் பெஸ்ட் பேக்கரி எரிப்பு சம்பவத்திலும் நாட்டு மக்கள் கண்டுகொண்டதுதான். இத்தகைய கலவர தீப்பந்தக்காரரைத்தான் முக்தார் அப்பாஸ் இப்போது அமைதியின் ஒளிவிளக்கு என்று அளந்து விடுகிறார்.
இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு ஆசியாவின் ஜோதி என்று புகழப்பட்டார். அதுபோன்றதொரு பிம்பத்தை கட்டி அமைப்பதற்கே பாஜகவினர் படாத பாடுபடுகின்றனர். குடியுரிமை திருத்தச்சட்டம், தேசிய மக்கள் பதிவேடு என்ற பெயரில் சட்டங்களை கொண்டு வந்து சிறுபான்மை யினரை நாட்டுக்குள்ளேயே அகதிகளாக்கும் காரியத்தில் ஈடுபட்டார்.
முஸ்லிம்கள் அதிகமாக வசிக்கும் மாநிலம் என்பதால் ஜம்மு, காஷ்மீர் மாநிலத்தை துண்டா டினார். அண்மையில் உ.பி.யில் சாமியார்களின் நாடாளுமன்றத்தில் முஸ்லிம்களை கொன்று குவிப்போம் என்று பேசியதற்கு சிறு எதிர்ப்புக் கூட காட்டாமல் இருந்தார்; மவுனம் சம்மதம் என்பதன் அறிகுறியாக.
இத்தகைய மனநிலையும், அரசியல் செயல் பாடும் இந்துத்துவா மதவெறியும், சிறுபான்மை மக்களின் மீதான பாரபட்சமும் கொண்டவரைத் தான் அமைதிக்கான ஒளிவிளக்காக ஒட்டு மொத்த உலகமும் நம்பிக்கையுடன் எதிர்பார்க்கி றது என்று முக்தார் அப்பாஸ் நக்வி கூறுகிறார். மத நல்லிணக்கத்தையும், மக்கள் ஒற்றுமையையும் ஜனநாயக நடைமுறைகளையும் எல்லோரும் சமம் எனும் அரசியல் சட்ட மாண்புகளையும் காலில் போட்டு மிதிப்பவரை அமைதியின் தூதுவர் என்றால் நானிலம் நகைக்காதா?