கூட்டாட்சித் தத்துவத்தை குழிதோண்டி புதைத்துக் கொண்டிருக்கும் ஒன்றிய பாஜக அரசுக்கு எதிரான போர்க்குரல் தலைநகர் தில்லி துவங்கி தேசத்தின் எல்லா திசைகளிலும் எதிரொ லிக்கிறது. மொழி வழி மாநிலங்கள் எனும் கோட்பாடு முகிழ்த்தபோதே அதை முனைமுறித்துப் போட முயன்றது இந்துத்துவா கும்பல். மாநிலங்கள் என்ற கட்டமைப்பே இந்தக்கூட்டத்திற்கு கசக்கும். எனவே தான் நவீன இந்தியா என்கிற கட்டமைப்பு உருவாக்கப்பட்ட போது மாநிலங் கள் தேவையில்லை. அனைத்து அதிகாரங்களும் ஒன்றிய அரசிடம் குவிக்கப்பட வேண்டும் என்பதே இவர்களது கோரிக்கையாக இருந்தது. ஒரு வரலாற்றுப் பேரிடராக ஒன்றிய ஆட்சிப் பொறுப்புக்கு பாஜக வந்த பிறகு மாநிலங்களை சீர்குலைக்க என்னவெல்லாம் செய்ய முடியுமோ அத்தனையையும் செய்து வருகிறது.
எதிர்க்கட்சிகள் ஆளும் மாநில ஆட்சிகளை சீர்குலைக்க நியமன ஆளுநர்கள் நித்தமும் தொல்லை கொடுத்து வருகின்றனர். கேரளம் மற்றும் தமிழக ஆளுநர்கள் மக்களால் தேர்வு செய்யப்பட்ட மாநில அரசுகளோடு வம்பு வளர்ப் பதையே அன்றாட கரசேவையாக செய்து வரு கின்றனர். அரசியல் சட்டத்தை புறக்கணித்து விட்டு ஆர்எஸ்எஸ் கருத்தியலின் பஜனை மடமாக ஆளுநர் மாளிகையை மாற்றி வைத்துள்ளனர். ஜிஎஸ்டி வரி விதிப்பின் காரணமாக மாநி லங்களின் வருவாய் வாய்க்கால்கள் அடைக்கப் பட்டுள்ளன. இயற்கைப் பேரிடர் நிதியை வழங்கு வதில் கூட பாரபட்சம் காட்டப்படுகிறது. தமிழ் நாட்டில் ஒற்றைச் செங்கலோடு நெட்டைத் தவ மிருக்கும் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையே வஞ்சத்திற்கு சாட்சி.
பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை செயல் படுத்துவதிலும், கல்வி, சுகாதாரம் போன்ற துறை களிலும் கேரளம், தமிழ்நாடு போன்ற மாநிலங் கள் முன்னணியில் நிற்கின்றன. ஆனால் இந்த மாநில அரசுகளுக்கு காழ்ப்புணர்வோடு உதவ மறுக்கிறது ஒன்றிய அரசு. இந்தப் பின்னணியில் ஒன்றிய அரசின் நிதி நிர்வாகத் தலையீட்டை எதிர்த்து கேரள இடது ஜனநாயக முன்னணி அரசு உச்சநீதிமன்றத்தை நாடியுள்ளதோடு, மக்கள் மன்றத்திலும் முறை யீடு செய்துள்ளது. இந்த முயற்சிகளுக்கு தமிழக அரசு துணை நிற்கும் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆதரவுக் கரம் நீட்டியுள்ளது வர வேற்கத்தக்கது.
தலைநகர் தில்லியில் கேரளம் வியாழனன்று நடத்தும் போராட்டத்திற்கும் திமுக உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு தெரிவித்துள் ளன. ஆளுநர்களின் அடாவடியை எதிர்த்து தமிழ்நாடு முழுவதும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நடத்தும் போராட்டத்தில் திமுக மற்றும் தோழமைக் கட்சிகள் திரளாக பங்கேற்கின்றன. இத்தகைய போராட்டங்கள் வலிமை பெறுவதன் மூலமே மாநில கட்டமைப்பை பாதுகாக்க முடியும்.