இந்தியாவில் குறுக்கு வழியில் அதிகா ரத்தைத் தக்க வைக்கத் துடிக்கும் ஒன்றிய பாஜக அரசு அதற்காக ஆப்பிள் மொபைல் போன்கள் மூலமும் முயன்றிருக்கிறது. இந்தியா கூட்டணி யில் உள்ள சீத்தாராம் யெச்சூரி உள்ளிட்ட முக்கிய தலைவர்களின் போன்களுக்கு ஆப்பிள் நிறுவனம் அனுப்பியிருக்கும் எச்சரிக்கை செய்தியில் “உங்களுடைய கைப்பேசியில் சட்டவிரோத மாக நுழைந்து, ஆப்பிள் ஐடியுடன் இணைக்கப் பட்ட ஐபோனை ரிமோட் மூலம் இணைத்து உங்களுக்குத் தெரியாமலேயே உங்கள் தகவல்க ளைத் திருட அரசு ஆதரவுடன் முயற்சிகள் நடக்கிறது‘’ எனத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
ஏற்கனவே 2019 இல் வாட்ஸ்அப் வழியாக பெகாசஸ் ஸ்பைவேர் மூலம் ஒட்டுக்கேட்பதை ஒன்றிய அரசிற்கு அந்நிறுவனம் தெரிவித்தது. ஆனால் மோடி அரசு கண்டுகொள்ளவில்லை. அதனால் அமெரிக்காவின் கலிபோர்னியா நீதிமன்றத்தில் வழக்கும் தொடர்ந்தது. அந்த வழக்கில் என்எஸ்ஓ நிறுவனம் நாங்கள் யாரையும் கண்காணிக்கவில்லை. அரசுகளு க்குத்தான் நாங்கள் விற்கிறோம். அரசுகளைத் தான் கேட்க வேண்டும் எனப் பதிலளித்தது.
2021-இல் ஒன்றிய பாஜக அரசு பெகாசஸ் மென்பொருளைப் பயன்படுத்தி இந்தியப் பத்திரி கையாளர்கள், எதிர்க்கட்சித் தலைவர்கள், நீதி பதிகள் உள்ளிட்டு 300-க்கும் மேற்பட்டவர்களை உளவு பார்த்தது கண்டுபிடிக்கப்பட்டது. உச்சநீதி மன்றம் தலையிட்டு 3 குழுக்கள் அமைத்து விசா ரணை நடத்தியது. அப்போது அரசோ, அரசு தொடர்பான நிறுவனங்களோ பெகாசஸ் மென் பொருளை வாங்கியதா? அதைப்பயன்படுத்தி தனிநபர்களின் உரையாடல் ஒட்டுக்கேட்கப் பட்டதா ? என்ற கேள்விகளுக்கு மோடி அரசு, “இந்த கேள்விகளுக்குப் பாதுகாப்பு காரணங்க ளால் பதிலளிக்க முடியவில்லை” என்றது.
பெகாசஸ் மர்மம் விலகாத நிலையில், கடந்த ஏப்ரல் மாதம் இஸ்ரேலிடமிருந்து அதை விட மேம்படுத்தப்பட்ட ஐ போன்களை ஹேக் செய்யும் `பிரிடேட்டர்’, (Predator) `குவாட்ரீம்’ (QuaDream), `காக்நைட்’ (Cognyte) உள்ளிட்ட மென்பொ ருட்களை பல்லாயிரங்கோடி ரூபாய்க்கு வாங்க முயல்வதை ஃபைனான்ஸியல் டைம்ஸ் பத்திரிகை அம்பலப்படுத்தியது. இதற்கு ஒன்றிய அரசு மறுப்பு தெரிவிக்கவில்லை.
அந்த மென்பொருள்தான் தற்போது தனது உளவு வேலைகளை ஆரம்பித்திருக்கிறது. ஜெர்மனியில் ஜனநாயக கட்டமைப்பைத் தகர்த்து சர்வாதிகாரத்தைக் கட்டமைக்க ஹிட்லர் அரசு அதிகாரிகள், அரசியல் தலை வர்களை உளவு பார்க்க எஸ்.எஸ். உளவுப் பிரிவைப் பயன்படுத்தினான். அதே போல் மோடி அரசு பயன்படுத்துகிறதோ என்ற ஐயம் எழு கிறது? கோழைகளின் நவீன ஆயுதமே உளவு மென்பொருட்கள்! அதனால் ஒரு போதும் உண்மைகளைக் கொல்ல முடியாது. ‘இந்தியா’ வெல்லும்!