தமிழ்நாடு இந்தியாவின் போதைப் பொருள் தலைநகரமாக மாறியிருக்கிறது என்றும், போதைப் பொருள் கடத்தல்காரர்களின் புகலி டமாக மாற்றப்பட்டுள்ளது என்றும் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை போகிறப் போக்கில் சமீ பத்தில் குற்றச்சாட்டை அள்ளி வீசியிருக்கிறார். அவர்களது சமூக ஊடக கூலிப் படைகள் மூலமாகவும் இந்தப் பிரச்சாரத்தை கட்ட விழ்த்துவிட்டுள்ளனர்.
இதையொட்டி உண்மையிலேயே போதைப் பொருள் பரவலின் பிறப்பிடமாக எந்த மாநிலம் இருக்கிறது, எங்கிருந்து சமீப சில ஆண்டுக ளாக தமிழகம் உட்பட நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் போதைக் கலாச்சாரம் தீவிரப் படுத்தப்பட்டுள்ளது என்பது குறித்த ஆய்வுக ளும், விவரங்களும் வெளிவரத் துவங்கி யுள்ளன.
2023 டிசம்பர் 13 அன்று மாநிலங்களவையில் ஒன்றிய உள்துறை அமைச்சகம் தெரிவித்த விவ ரங்களின் அடிப்படையில் ராஜஸ்தான், பஞ்சாப், மத்தியப் பிரதேசம், ஜார்க்கண்ட், மணிப்பூர், குஜ ராத், உத்தரப்பிரதேசம், ஹரியானா ஆகிய மாநி லங்கள்தான் முதன்மை இடத்தில் உள்ளன. இந்த மாநிலங்களோடு ஒப்பிடும் போது தமிழ் நாட்டில் போதைப் பொருள் புழக்கம் குறைவே என்பது தெரிய வருகிறது. அந்த குறைவான போதைப் பொருள் புழக்கத்தையும் மட்டுப் படுத்த சமீப காலமாக தமிழ்நாடு அரசு தீவிர மான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. அதே வேளையில் இன்னும் வலுவான நடவடிக்கைகளை மேற் கொள்ள வேண்டிய தேவையும் உள்ளது.
இதைப் பற்றி பேசும் போது, தமிழ்நாடு உட்பட இந்தியா முழுவதும் மிக மோசமான போதைப் பொருள்கள் கடத்தலுக்கு காரணியாக இருப்ப வர்கள் பெரும்பாலும் பாஜகவினராக, அக்கட்சி யுடன் தொடர்பு இருப்பவர்களாக உள்ளனர் என்ற தகவல்கள் தொடர்ந்து வெளியாகி வரு வதை வெறுமனே கடந்து செல்ல முடியாது. பெரு வாரியான போதைப் பொருள்கள் இந்தியா விற்குள் ஊடுருவுவது குஜராத்தில் உள்ள முந்த்ரா துறைமுகம் வழியாகத்தான் என ஏராள மான செய்திகள் தரவுகளோடு வெளியாகி யுள்ளன. இந்த துறைமுகம் மோடியின் கூட்டுக் களவாணி அதானிக்கு சொந்தமானது என்பது கவனிக்கத்தக்கது.
மதவெறியை ஊட்டி சமூகத்தை மனிதத் தன்மையற்றதாக மாற்றும் ஆர்எஸ்எஸ்- பாஜக, முழுக்க முழுக்க தனது கட்டுப்பாட்டிற் குள் இளைய சமூகத்தை கொண்டு வரும் நோக் கத்துடன் நாடு முழுவதும் போதை மயமாக்கும் சூழ்ச்சியை திட்டமிட்டு அரங்கேற்றுகிறது என்பதை மறுப்பதற்கு இல்லை. அடுத்தடுத்து வரும் செய்திகள் இதை உறுதிப்படுத்துகின்றன. போதைமயமாக்கும் ஆர்எஸ்எஸ் -பாஜகவின் சூழ்ச்சியிலிருந்து இளைஞர்களை மீட்பதும், பாதுகாப்பதும் நம் அனைவரின் முக்கியக் கடமையாகும்.