headlines

img

குமரி முனையும், குறுக்குச்சாலும்

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி ஒவ்வொரு நாளும் ஆர்எஸ்எஸ் கருத்தியலின் அடிப்படை யில் வரலாற்றைத் திரிக்கும் வேலையைச் செய்து வருகிறார். 

ஆர்எஸ்எஸ், பாஜக கொள்கையை பிரச்சா ரம் செய்வது தான் தன்னுடைய தலையாயப் பணி என்று அவர் கருதுவாரேயானால், ஆளுநர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு ஆர்எஸ்எஸ் பிரச்சாரகராகச் செயல்படலாம். ஆனால் மதச் சார்பற்ற அரசியல் சாசனத்தின் பெயரால் பொறுப்பேற்றுக் கொண்ட ஒருவர் அரசியல் சாசனத்தின் சாரத்திற்கு எதிராகப் பேசுவதும், செயல்படுவதும் பொருத்தமானது அல்ல.

கன்னியாகுமரி மாவட்டம் தமிழகத்தோடு இணைந்த நாளையொட்டி நாகர்கோவில் அருகே தனியார் பொறியியல் கல்லூரி ஒன்றில் பாரதிய இதிகாச சங்கலன் சமிதி சார்பாக நடை பெற்ற நிகழ்ச்சியில் பேசிய அவர், மேற்கத்தியர் கள் வந்தபிறகுதான் நம் வரலாறு மாற்றி எழு தப்பட்டது. கலாச்சாரம் தவறாக பரப்பப்பட்டது என்று கூறியுள்ளார்.

இன்றைய குமரி மாவட்டம் உள்ளடக்கிய அன்றைய திருவிதாங்கூர் சமஸ்தான ஆட்சியை பரிசீலித்தால் ஆளுநர் கூறுவதற்கு நேர்எதிர்மாறான வரலாறுதான் உள்ளது. அன் றைய கேரளத்தின் சனாதனத்தின் பெயரால் கொடிய சாதிய மேலாதிக்கம்தான் ஆட்சி நடத்தி யது. இதனால்தான் அன்றைய கேரளத்திற்கு  வந்த சுவாமி விவேகானந்தர் சாதியக் கொடுமை களை பார்த்துவிட்டு, பைத்தியக்காரர்களின் விடுதி போலவுள்ளது என கண்டித்தார். 

தீண்டாமைக் கொடுமைகளும் பெண்க ளுக்கு எதிரான கொடுமைகளும் உச்சத்தில் இருந்த காலமது. பெண்கள் மேலாடை அணி வதுகூட தடுக்கப்பட்டது. அதை எதிர்த்து தோள் சேலை போராட்டம் நடைபெற்று 200 ஆண்டு கள் ஆகிறது. இதுகுறித்து ஆளுநர் ஒரு வார்த்தை கூடப் பேசவில்லை. ஆனால் அன்றைக்கு எல்லாம் உன்னதமாக இருந்ததே என்றும் மேற்கத்தியர்கள் தான் தவறான கதை யைக் கட்டிவிட்டார்கள் என்றும் பழமைக்குப் பட்டுத்துணி போர்த்துகிறார்.

தீண்டாமைக் கொடுமை மட்டுமல்ல, பாராமை என்ற கொடுமையும் இருந்தது. இத னால்தான் அந்த மண்ணின் அய்யன்காளி, நாராயண குரு, வைகுண்டசாமிகள் போன்ற சமூக சீர்திருத்த தலைவர்கள் உருவாகி பெரும்  இயக்கங்களை முன்னெடுத்தனர். 

விடுதலைப் போராட்டக் காலத்தில் கம்யூ னிஸ்ட்டுகள் ஏகாதிபத்திய எதிர்ப்புடன் சமூக சீர்திருத்த இயக்கத்தையும் முன்னெடுத்து பெரும் மாற்றங்களை கொண்டு வந்தனர். குமரி மாவட்டத்தை தமிழகத்துடன் இணைப்பதற் கான போராட்டத்தில் கம்யூனிஸ்ட்டுகள் முன் னின்றார்கள். ஆர்.என். ரவிகளை உருவாக்கும் இயக்கம் விடுதலைப் போராட்டத்திலோ, மாநில உரிமைகளுக்கான போராட்டத்திலோ ஒரு புல்லைக்கூட கிள்ளிப் போட்டதில்லை. சனாத னம் முடைநாற்றம் வீசிய சூழலை பண்பாடு, கலாச்சாரம் என ஆளுநர் நடத்தும் பஜனை இங்கு எடுபடாது.