headlines

img

துரோகமிழைக்கலாமா?

ஒன்றிய பாஜக அரசினால் நியமிக்கப்பட்ட ஆளுநர்கள் எதிர்க்கட்சிகள் ஆளும் மாநில அரசுகளுக்கு குடைச்சல் கொடுப்பது மட்டு மல்லாமல், அபத்தமாகவும், அறிவியலற்ற தன்மையிலும் பேசுவதில் ஒருவருக்கொருவர் சளைத்தவர்கள் இல்லை என்பதையே உணர்த்திக் கொண்டிருக்கின்றனர்.

அண்மையில் தெலுங்கானா மாநில ஆளுநர் மருத்துவர் தமிழிசை கர்ப்பிணிப் பெண்கள் இராமாயணம், மகாபாரதம் படிக்க வேண்டுமென் றும் குறிப்பாக இராமாயணத்தில் சுந்தரகாண் டத்தை படிக்க வேண்டுமென்றும், அதன்மூலம் வலுவான குழந்தை பிறக்கும் என்றும் பேசியி ருக்கிறார். ஒரு மருத்துவராக சிந்திக்காமல், மத போதகர் போல பேசியிருப்பது அவர் இருக்கும் இடத்தின் இயல்பையே காட்டுகின்றது.

இந்தியாவில் ஊட்டச்சத்து குறைவால் 17 சதவீதம் குழந்தைகள் குறைந்த எடையுடன் பிறக்கின்றன என்றும், குறைப் பிரசவம், நரம்பு தொடர்பான சிக்கல்கள் உள்ளிட்ட பல்வேறு கோளாறுகள் ஏற்படுகின்றன என்றும் புள்ளி விபரங்கள் கூறுகின்றன. கர்ப்பிணி பெண்க ளுக்கு ஊட்டச்சத்து குறைவாக இருப்பதால் 53 சதவீதம் பேர் பாதிக்கப்படுகிறார்கள். குழந்தை களில் 60 சதவீதம் பேர் பாதிக்கப்படுகிறார்கள். 

இரும்புச்சத்து குறைபாடு அதாவது இரத்தச் சோகையால் 50 முதல் 90 சதவீதம் வரை கர்ப்பிணிப் பெண்கள் பாதிக்கப்பட்டி ருக்கின்றனர். இதனால் குழந்தை இறப்பு விகிதம் அதிகரிக்கிறது. மத்தியப் பிரதேசத்தில் ஆயிரத்திற்கு 43 குழந்தைகளும், உ.பி.,யில் 38 குழந்தைகளும், அசாமில் 36 குழந்தைகளும் என இந்த விகிதம் பாஜக ஆளும் மாநிலங்க ளில் அதிகமாக உள்ளது. மிக குறைவான இறப்பு விகிதம் உள்ள மாநிலம் கேரளா (6). தமிழ கத்தில் 13. இந்த தகவல்கள் பொருளாதார ஆய்வறிக்கை 2022-23இல் கூறப்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் உள்ள ஊட்டச்சத்து இல்லாத குழந்தைகளில் மூன்றில் ஒரு பகுதியினர் இந்தியாவில்தான் உள்ளனர். இத்த கைய மோசமான பாதிப்பு உலகின் நான்கில் ஒரு பங்கு பெண்களுக்கும் ஏற்பட்டுள்ளது. இத்தகைய நிலையில் 15 -49 வயதுடைய குழந்தை பெறும் பெண்கள் ஊட்டச்சத்தின்மை யால் பாதிக்கப்பட்டுள்ள விகிதம் ஜார்க்கண்டில் 31.5 சதவீதம், பீகார் 30.4, ம.பி., 28, குஜராத் 27.2 என்ற அளவில் பாஜக ஆளும் மாநிலங்களின் நிலையை தெளிவுபடுத்துகிறது. 

ஒரு மருத்துவராக கால முறைப்படியான மருத்துவப் பரிசோதனைகள் ஊட்டச்சத்து உட்கொள்ளுதல் பற்றி ஆளுநர் தமிழிசை ஆலோசனை கூறியிருக்க வேண்டும். ஆனால் கடந்த ஒன்பதாண்டு மோடி ஆட்சியில் அனைத்துத் துறையிலுமே பற்றாக்குறையும், போஷாக்கின்மையுமே கோலோச்சுவதால்  அதை மறைப்பதற்காகவே இத்தகைய இந்துத்துவா சிந்தனையை விதைத்து பெண்க ளுக்கு துரோகமிழைக்கிறார் தமிழிசை.