headlines

img

பிரதமரின் புதிய புளுகு

நாட்டின் பல்வேறு இடங்களில் புதிதாக அகில இந்திய மருத்துவ அறிவியல் நிறுவனம் அதாவது ‘எய்ம்ஸ் மருத்துவமனைகள்’ திறக்கப் பட்டுள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி கடந்த வாரம் பெருமிதம் பொங்க கூறியிருந்தார்.   அவர் சொன்ன இடங்களில் ஒன்று பீகார் மாநிலத்தில் உள்ள  தர்பங்கா. 

மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டப் படும் என்று சொல்லி பல ஆண்டுகள் ஆகியும் ஒரு செங்கல்கூட வைக்கப்படாத நிலையில் 95 விழுக்காடு பணிகள் முடிந்துவிட்டதாக பாஜக தலைவர் ஜே.பி. நட்டா கூறியிருந்தார். அவர் கூறிய அடுத்தநாளே நாடாளுமன்ற உறுப்பினர்கள் சு.வெங்கடேசன், மாணிக் தாக்கூர் ஆகியோர் அந்த இடத்திற்கு சென்று  95 விழுக்காடு பணிகள் முடிந்த இடம் இதுதான் என்று காலியிடத்தை ஊடகங்களுக்கு காட்டி னார்கள். இதன்  பின்னரும் ஒன்றிய ஆட்சியா ளர்களும் பாஜக தலைவர்களும் பொய் பேசிய தற்காக கொஞ்சம் கூட வெட்கப்படவில்லை. 

இந்த நிலையில், பீகார் மாநிலம் தர்பங்கா மாவட்டத்தில்  எய்ம்ஸ் மருத்துவமனை அமைக் கப்படும் என்று தேசிய ஜனநாயக கூட்டணியில் ஐக்கிய ஜனதா தளம் இருந்தபோது ஒன்றிய அரசு அறிவித்தது. இது வெறும் அறி விப்போடு நிற்கும் நிலையில்தான் மருத்துவ மனை கட்டப்பட்டுவிட்டதாக பிரதமர் பொய் சொல்லியிருக்கிறார். 

2021-ம் ஆண்டு தர்பங்கா விமான நிலையம் அருகே ஷோபன் என்ற இடத்தில்  எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க தேவைப்படும் மொத்த நிலத்தில் 131 ஏக்கர் நிலம் மாநில அரசுக்குச் சொந்தமானது. 20 ஏக்கர் நிலம் உள்ளூர் விவசாயி களுக்குச் சொந்தமானது. மொத்தமாக 151 ஏக்கர் நிலத்தையும் மாநில அரசே இலவசமாக வழங்கி யது. நாட்டிலேயே எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க கிடைத்துள்ள சிறந்த இடம் இது என்று மத்திய குழுவினரும் நற்சான்றிதழ் வழங்கினர். 

ஆனால் நிலத்தை கொடுத்த விவசாயிக ளையும் பீகார் அரசையும் ஒன்றிய அரசு ஏமாற்றி விட்டது. கொடுத்த இடம் மருத்துவமனை அமைக்க ஏற்றதாக இல்லை, மழைக்காலத்தில் தண்ணீர் நிற்கும் என்று ஒன்றிய அரசு சால்ஜாப்பு கூறியது.  நிலத்தை மேடாக்கினால் கட்டுமானச் செலவு கணிசமாக அதிகரிக்கும் என்று ஒன்றிய சுகாதாரத்துறை செயலர் ராஜேஷ் பூஷன்  மாநில அரசுக்கு கடிதம் எழுதியிருந்தார்.

இருப்பினும் பீகார் அரசு 151 ஏக்கர் நிலத்தை யும்  தனது சொந்த செலவில் மேடாக்கும் பணியை யும் தொடங்கியது. இதன் பின்னரும் ஒன்றிய அரசு தனது பங்கிற்கான பணிகளை தொடங்க வில்லை. உண்மைநிலை இவ்வாறு இருக்க பொய் பேசுவதில் ஜே.பி.நட்டாவையே மிஞ்சி விட்டார் பிரதமர் மோடி. பீகார் மாநிலத்தில் பாஜக வின் குடைச்சல் தாங்க முடியாமல் கூட்டணி அரசில் இருந்து ஐக்கிய ஜனதாதளம் வெளி யேறியது. எனவேதான் தமிழகத்தை போல் பீகார் மாநிலத்துக்கும் ஓரவஞ்சனை செய்கிறது ஒன்றிய அரசு.