பாஜக தலைமையிலான அரசு செய்த பணி கள் காரணமாக மிசோரம் மாநிலம் முழுவதும் பல துறைகளில் புரட்சி ஏற்பட்டது என்று பிரதமர் நரேந்திர மோடி ஞாயிறன்று காணொலி மூலம் உரையாற்றியுள்ளார். அந்த பல துறைப் புரட்சிகள் என்னென்ன என்றுசொல்லவில்லை.
ஆனால் ஒரு சோறு பதம் என்பது போல, தேசிய நெடுஞ்சாலைகளின் நீளம் 11 ஆயிரம் கி.மீ.யாக இருந்ததை 16 கி.மீ.ஆக ஆக்கியிருப்ப தாகக் குறிப்பிட்டிருக்கிறார். வடகிழக்கு மாநில மக்களின் எண்ணங்களை, தேவைகளை நிறை வேற்றி தில்லிக்கும் வடகிழக்கு மாநிலங் களுக்கும் இடையே நிலவிய இடைவெளியைப் போக்கியிருப்பதாகவும் தன்னைத் தானே பாராட்டிக் கொண்டுமிருக்கிறார். ஆனால் உண்மை நிலை என்னவென்றால் மிசோரம் மாநில முதல்வர் சோரம் தங்கா, பிரதமர் நரேந்திர மோடி தேர்தல் பிரச்சாரத்துக்கு மாநி லத்திற்கு வந்தால் அவருடன் சேர்ந்து பிரச்சாரம் செய்யமாட்டேன் என்று பகிரங்கமாக அறிவித்தார். ஒரு கூட்டணிக் கட்சியின் முதல்வரே இவ்வாறு கூறும் அளவுக்குத் தான் பிரதமர் மோடி வடகிழக்கு மாநில மக்களின் எண்ணங்களைப் புரிந்து வைத்திருக்கிறார்.
மணிப்பூர் மாநில பழங்குடி மக்களின் பிரச்ச னைக்குத் தீர்வு காணாததும், அந்த மாநி லத்துக்கு இதுவரையிலும் பிரதமர் மோடி எட்டிப் பார்க்காததும் மிசோரம் மாநில மக்களுக்கு பெரும் அதிருப்தியையும் கோபத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது. அதன் விளைவுதான் மிசோரம் முதல்வர் சோரம் தங்கா பிரதமருடன் பிரச்சார மேடையைப் பகிர்ந்து கொள்ளத் தயாராக இல்லை என்று அறிவித்தது. இதுதான் வடகிழக்கு மாநில மக்களுடன் மோடிக்கு உள்ள நெருக்கம்; - இடைவெளி குறைப்பு. அதனால் தான் தில்லியிலிருந்து காணொலி மூலம் தேர்தல் பிரச்சாரம் செய்திருக்கிறார், குப்புற விழுந்தும் மீசையில் மண் ஒட்டவில்லை என்கிற கதையாக.
இயற்கைச் செழிப்பும் கலாச்சார வளமும் கொண்ட மிசோரம் உலகளாவிய சுற்றுலா மைய மாக உருவெடுக்கும் திறனுடையது என்றும் அற்புதமான மிசோரமை உருவாக்க பாஜக உறுதி பூண்டுள்ளது என்றும் கூறும் பிரதமர் மோடி, அந்த உறுதிப்பாட்டை நிறை வேற்ற மிசோரம் மக்களின் ஆசியையும் ஆதரவையும் கோரியிருக்கிறார்.
அந்நிய, உள்நாட்டு கார்ப்பரேட் நிறுவனங் களின் வேட்டைக் காடாக மாற்றவே, வனங் களையும் மாநிலத்தின் வளங்களையும் அவர் களுக்கு கைவசம் ஆக்கவே இத்தனை பீடிகை யைப் போடுகிறார் பிரதமர் மோடி. ஏற்கெனவே பக்கத்து மாநிலமான மணிப்பூர் படும் பாட்டைக் கண்ட மிசோரம் மக்கள் கட்டாயம் பாஜகவை மாநில சட்டமன்றத்துக்குள் அனுமதிக்கமாட் டார்கள். இப்போது இருக்கும் ஓரிடத்தையும் பறித்து பூஜ்யம் ஆக்கி ஒரு விரல் புரட்சி செய்வார்கள் என்பது உறுதி.