உத்தரகண்ட் மற்றும் தில்லியில் நடந்த கூட்டங்களில் சிறுபான்மை இஸ்லாமிய மக்க ளுக்கு எதிராக வெறுப்புணர்வை தூண்டும் விதமாக பேசியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிய மனுக்களை உச்சநீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றுக் கொண்டுள்ளது.
உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள பொது நல மனுவில், அந்த விவகாரம் தொடர்பாக சிறப்பு விசாரணை குழு அமைக்க வேண்டுமென்றும் வெறுப்புணர்வை தூண்டும் வகையில் பேசிய வர்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டு மென்றும் கோரப்பட்டுள்ளது. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான அமர்வு இந்த மனுவை விசாரணைக்கு ஏற்பதாக அறிவித்துள்ளது.
உ.பி.உள்ளிட்ட மாநிலங்களில் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் ஆர்எஸ்எஸ் பாஜக பரிவாரம் தங்களுடைய தேர்தல் உத்தியில் ஒரு பகுதியாக வெறுப்பரசியலை தீவிரமாக்கி யுள்ள நிலையில் உச்சநீதிமன்றம் இப்பிரச்சனை யில் உடனடியாக தலையிட வேண்டும். பல்வேறு முக்கியத்துவம் வாய்ந்த வழக்குகள் உள்நோக்கத் துடன் உச்சநீதிமன்றத்தில் தாமதப்படுத்தப் படுகின்றன என்ற விமர்சனம் எழுந்துள்ள நிலை யில், இப்பிரச்சனையில் உடனடி விசாரணை மற்றும் தலையீடு அவசியமாகிறது.
தேர்தலில் வெற்றி பெற்று அதிகாரத்திற்கு வந்தால் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு கரசேவை செய்வது, மீண்டும் அதிகாரத்தை பிடிக்க மக்களி டையே பகைமையை தூண்டும் வெறுப்பரசியலை வளர்ப்பது என்பதை பாஜக ஒரு தொடர் நடை முறையாகவே பின்பற்றி வருகிறது. ஆர்எஸ்எஸ் பரிவாரம் பல்வேறு அமைப்புகளை நடத்தி வரு கிறது. அவர்கள் இந்தப் பிரச்சாரத்தை நடத்துவார் கள். விமர்சனம் எழுந்தால் பாஜக எங்களுக்கும் இதற்கும் தொடர்பில்லை என்று நழுவும். ஆனால் அனைவரும் ஒரே திட்டத்தின் கீழ்தான் ஒருங்கிணைந்து செயல்படுகின்றனர்.
அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்ட தற்கு காரணம் தாங்கள் அல்ல, அது கரசேவர்க ளின் செயல் என்றுதான் அத்வானி போன்றவர் கள் கூறினார்கள். ஆனால் அந்த வழக்கு கூட இன்னமும் முறையாக முடியவில்லை. நீதித்துறை யின் தாமதத்தை தங்களுக்கு சாதகமாக அவர்கள் பயன்படுத்திக் கொள்கிறார்கள். அல்லது நீதித் துறையில் ஒரு பகுதியையும் தங்களுக்கு சாதக மாக பயன்படுத்திக் கொள்கிறார்கள்.
கடந்த முறை உ.பி., சட்டமன்ற தேர்தலின் போது பிரதமர் நரேந்திர மோடி, ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா போன்றவர்களே வெறுப்பர சியலை வீசியடித்தனர். இப்போது தர்மசன்சத் என்ற பெயரில் கூட்டம் கூட்டி வெறியூட்டுவதும் ஆர்எஸ் எஸ் பரிவாரத்தின் ஒரு பகுதியினரே ஆவர். இந்தக்கூட்டம் அடுத்தடுத்து பல்வேறு நிகழ்ச்சி நிரல்களை அறிவித்துள்ளது. உ.பி., மற்றும் ஒன்றிய பாஜக அரசின் தோல்வியை மறைக்க வழக்கமான ஆயுதத்தை அவர்கள் கையில் எடுத்துள்ளனர். உச்சநீதிமன்றம் உடனடியாக விசாரணைக்குழு அமைப்பதோடு இத்தகைய பிரச்சாரங்களுக்கு தடை விதிக்க வேண்டும். தேர்தல் ஆணையத் திற்கும் அந்த பொறுப்பு உண்டு.