தமிழ்நாட்டில் திருத்தப்பட்ட இந்து திரு மணச் சட்டத்தின்படி வழக்கறிஞர்கள் சுயமரி யாதை திருமணங்களை நடத்தி வைக்கலாம். பின்னர் இந்த திருமணங்களை முறைப்படி பதிவு செய்து கொண்டால் போதும் என்று உச்சநீதி மன்றம் வழங்கியுள்ள தீர்ப்பு வரவேற்கத்தக்கது.
இராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த தம்பதியர் வழக்கறிஞர் ஒருவர் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டனர். இந்த திருமணம் செல்லத்தக்கது அல்ல என்று சென்னை உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து செய் யப்பட்ட மேல்முறையீட்டில் உச்சநீதிமன்றம், வழக் கறிஞர்கள் சுயமரியாதை திருமணங்களை நடத்தி வைக்கலாம் என்று தீர்ப்பு வழங்கியுள்ளது.
சுயமரியாதை திருமணத்தை நடத்தி வைத்த வழக்கறிஞர் உள்ளிட்டோருக்கு நோட்டீஸ் அனுப் புமாறு பார்கவுன்சிலுக்கு உத்தரவிட்ட உயர்நீதி மன்றம் இதேபோல திருமணம் நடந்ததாக யாரா வது சான்றிதழ் வழங்கினால் அவர்கள் மீதும் நட வடிக்கை எடுக்க பரிந்துரை செய்திருந்தது. இந்த உத்தரவை உச்சநீதிமன்றம் ரத்து செய்துள்ளது.
சாதியின் இருத்தலுக்கு அகமணமுறை முக் கியமான காரணியாக உள்ளது என்று அண்ணல் அம்பேத்கர் கூறுகிறார். தமிழகத்தில் அறிஞர் அண்ணா முதல்வராக பொறுப்பேற்றவுடன் சுயமரியாதை திருமணங்களுக்கு சட்டப்பூர்வ அங்கீகாரம் அளிக்கும் சட்டம் நிறைவேற்றப்பட் டது ஒரு முற்போக்கான நடவடிக்கையாகும்.
சுயமரியாதை திருமணங்கள் சடங்கு மறுப்பு க்கு மட்டுமல்ல; சாதி, மத மறுப்பு திருமணங்களுக் கும் பேருதவி புரிகிறது. இந்த சட்டம் நிறை வேற்றப்பட்ட பிறகு பல்வேறு கட்சிகள் மற்றும் இயக்கத் தலைவர்களால் லட்சக்கணக்கான திருமணங்கள் சுயமரியாதை அடிப்படையில் செய்து வைக்கப்பட்டுள்ளன.
சமூக நீதிக்கான போராட்டத்தில் சுயமரியா தை திருமணத்திற்கான அங்கீகாரம் முக்கிய மான மைல்கல்லாக அமைந்தது. 1928ஆம் ஆண்டு முதன்முதலாக சாதிமறுப்பு, சுயமரியா தை திருமணத்தை தந்தை பெரியார் நடத்தி வைத்தார்.விதவை திருமணமாக அது அமைந் தது குறிப்பிடத்தக்கது. 1947 இல் இந்து மத சீர்திருத்த சட்டத் திருத்தத்திற்கான முன்வரை வில் திருமண முறையில் மாற்றத்தை அம்பேத் கர் முன்மொழிந்த போதும் அது ஏற்கப்பட வில்லை. அவர் சட்ட அமைச்சர் பதவியை ராஜி னாமா செய்ததற்கு இதுவும் ஒரு முக்கியமான காரணமாகும்.
இந்திய சமூகமும், குடும்பமும் ஜனநாய கப்படுத்தப்பட வேண்டுமானால், சாதி, மத,சடங்கு மறுப்புத் திருமணங்கள் அதிகரிக்க வேண்டியது அவசியமாகும். அது எளிமைப்படுத்தப்பட வேண்டியதும் தேவையான ஒன்று. இந்த நிலை யில், உச்சநீதிமன்றம் சுயமரியாதை திருமணம் தொடர்பாக வழங்கியுள்ள தீர்ப்பு வரவேற்கத் தக்கது. அதேநேரத்தில் மனத்தடைகளை நீக்கு வதற்கான போராட்டத்தை தொடர வேண்டி யுள்ளது.