headlines

img

வஞ்சிக்கப்படும் தமிழ்நாடு

வரிப் பகிர்வில் தமிழ்நாட்டை ஒன்றிய அரசு எந்தெந்த வகையில் வஞ்சிக்கிறது என்று மாநில நிதியமைச்சர் தங்கம் தென்னரசு வெளி யிட்டுள்ள தகவல்கள் அதிர்ச்சியளிப்பதாக உள்ளன. 

தமிழக சட்டப் பேரவையில் துணை மதிப்பீடு களை மாநில நிதியமைச்சர் தாக்கல் செய்தார். அதன் மீது  நடைபெற்ற விவாதத்திற்கு பதில ளித்த அவர் ஒன்றிய அரசுக்கு வரி வருவாயாக தமிழ்நாடு ஒரு ரூபாய் கொடுக்கிறது என்றால், அதற்கு ஈடாக ஒன்றிய அரசிடமிருந்து திரும்ப 29 பைசா மட்டுமே கிடைக்கிறது. ஆனால் பாஜக ஆளக்கூடிய உ.பி.மாநிலம் ஒரு ரூபாய் வரி செலுத்துமானால் அதற்கு ஈடாக இரண்டு ரூபாய் 73 பைசாவை திரும்பப் பெற்றுக் கொள்கிறது. இதி லிருந்தே ஒன்றிய அரசின் வரி பங்கீட்டு முறை எந்தளவிற்கு சமச்சீரற்றதாக, அநீதியானதாக உள்ளது என்பதை புரிந்து கொள்ள முடியும். 

ஜிஎஸ்டி வரியை நடைமுறைப்படுத்துவதன் மூலம் மாநிலங்களுக்கு ஏற்படும் இழப்பீட்டை குறிப்பிட்ட காலம் வரை ஒன்றிய அரசு ஈடு செய்யும் என்று கூறப்பட்டது. 2022ஆம் ஆண்டு ஜூன் 30ஆம் தேதியுடன் ஜிஎஸ்டி வரிக்கான இழப்பீட்டு முறை நிறுத்தப்பட்டுவிட்டது. இதை மேலும் சில ஆண்டுகளுக்கு நீட்டிக்க வேண்டும்  என்ற கோரிக்கையை ஒன்றிய  அரசு ஏற்க மறுத்து விட்டது. இதனால் தமிழ்நாடு போன்ற மாநிலங் கள் கடும் பாதிப்பை சந்திக்க வேண்டியுள்ளது.

இழப்பீட்டுத் தொகையையும் உரிய காலத்தில் முழுமையாக ஒன்றிய அரசு வழங்க மறுத்தது. இப்போது இழப்பீடு வழங்குவதும் நிறுத் தப்பட்டுவிட்டது. கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் வரை ஜிஎஸ்டி வரி இழப்பீடாக தமிழ்நாட்டிற்கு ரூ.9,603 கோடி கிடைத்திருக்க வேண்டும். ஆனால் ரூ.3,533 கோடி மட்டுமே ஒன்றிய அரசி னால் தரப்பட்டுள்ளது. 

தமிழ்நாட்டிற்கு மட்டும் ஜிஎஸ்டி வரியால் 20 ஆயிரம் கோடி அளவிற்கு இழப்பு ஏற்பட்டுள் ளது என்று அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

ஜிஎஸ்டி வரி இழப்பை சுட்டிக்காட்டினால் மாநில அரசுகள் கடன் பெற்றுக் கொள்ளுமாறு ஒன்றிய அரசு கை காட்டுகிறது. அவ்வாறு கடன் பெறுவதற்கும் மின்துறை உள்ளிட்ட அரசுத் துறைகளை தனியாருக்கு தர வேண்டும் என ஒன்றிய அரசு நிபந்தனை விதிக்கிறது.

வரிப் பகிர்வில் மட்டுமல்ல, மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானப் பணியை துவங்க மறுப்பது, தமிழ்நாட்டின் ரயில்வே திட்டங்களுக்கு போதுமான நிதி ஒதுக்க மறுப்பது, கீழடி போன்ற இடங்களில் ஒன்றிய அகழ்வாய்வு துறை மூலம் அகழ்வாய்வு நடத்த மறுப்பது, இந்தித் திணிப்பு என பல்வேறு வகை களில் தமிழகத்தை வஞ்சிக்கிறது ஒன்றிய பாஜக கூட்டணி அரசு. இந்த அநீதிக்கு எதிரா கக் குரல் கொடுக்க வேண்டியது தமிழக மக்கள் அனைவரது கடமையுமாகும்.