நாட்டை போதைப் பொருள் இல்லாத பாது காப்பானதாக மாற்றுவதே ஒன்றிய அரசின் இலக்கு என்று உள்துறை அமைச்சர் அமித்ஷா மத்தியப் பிரதேச மாநிலத்தில் திங்களன்று நடை பெற்ற மாநாட்டில் பேசியுள்ளார். அவரது பேச்சு வரவேற்கத்தக்கதுதான். ஆனால் அவரது அரசின் செயல்பாடு அத்தகையதாக இல்லை என்பதை மறந்துவிட்டே பேசுகிறார்.
பறிமுதல் செய்யப்பட்ட போதைப் பொருட்கள் அழிக்கப்பட்டதை குறிப்பிட்டு இது குறிப்பிடத்தக்க சாதனை என்று கூறியுள்ளார். ஆனால் அந்த மாநிலத்தில் 15 மாவட்டங்கள் போதைப் பொருட்கள் புழக்கத்தில் ஹாட்ஸ்பாட் மாவட்டங்களாக உள்ளன என்பதையும், தலை நகர் போபாலில் ஆறு இடங்கள் ஹாட்ஸ்பாட்டாக உள்ளதையும் அவருக்கு நினைவுபடுத்த வேண்டி யிருக்கிறது.
அவரது சொந்த மாநிலமான குஜராத்தின் முந்த்ரா துறைமுகத்தில்தான் உலகத்திலேயே மிகப் பெரிய அளவு கடத்தல் போதைப் பொருள் பிடிபட்டது. அதன் மதிப்பு ரூ.20 ஆயிரம் கோடி என்பதும் அந்தத் துறைமுகம் அதானிக்கு சொந்த மானது என்பதும் குறிப்பிடத்தக்கது. அந்த துறைமுகத்தில் தொடர்ந்து ஆப்கன், ஈரான், பாகிஸ்தான் பயங்கரவாத தொடர்புடைய அமைப்புகள் இத்தகைய கடத்தலில் ஈடுபடு கின்றன என்பது அவருக்கு தெரியாததா?
இவர்களது போதை ஒழிப்பு எத்தன்மையிலா னது என்பதை மோடி முதல்வராக இருந்த 2009ஆம் ஆண்டு, 136 பேர் இறந்ததையடுத்து மது விலக்கு சட்டத்தை மீறினால் மரண தண்டனை என்று அறிவிக்கப்பட்டதிலிருந்தே தெரிந்து கொள்ளலாம். ஆனால் அதன் பிறகும் சாவு கள் தொடரவே செய்கின்றன.
இப்போதும் கூட போதை அடிமைகள் நிலை யில் பாஜக ஆளும் உ.பி. மாநிலம்தான் (17.3 சத வீதத்துடன்) முதலிடம் வகிக்கிறது. இரண்டாமி டம் தில்லி (16.3 சதவீதம்). மேற்குவங்கம் (15), மணிப் பூர், பீகார் (10சதவீதம்) தொடர்கின்றன. இவர்களது போதை ஒழிப்பு லட்சணம் என்ன நிலையில் இருக் கிறது என்பதை இந்த விபரங்களே வெளிப் படுத்தும்.
மத உணர்வுகளையும், போதை உணர்வுகளை யும் இணைத்தே அரசியல் நடத்தும் பாஜகவின் பரிவாரங்களால்தான் உ.பி., ம.பி., மாநிலங்கள் இத்தகைய போதை பழக்கத்திற்கு அடிமையாகி யுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்தநிலையில், போதைப் பொருள் இல்லாத நாடாக உருவாக்கப் போவதாக அமித்ஷா கூறுவது நகைப்புக்குரிய தாகவே உள்ளது. மணிப்பூர் மாநிலத்தின் இன்றைய வன்முறைக் கலவரங்களுக்கு அங்கு பயிரிடப்படும் போதைப் பயிர்களும், அதன் வர்த்த கத்தை கைப்பற்றும் போட்டியும் ஒரு காரணம்.
இவரது இலக்கை அடைவதற்கு அனைத்து மாநில முதல்வர்களும் உதவ வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருக்கிறார். மாநில நிர்வாகங்க ளில் தலையிடுவதையே வேலையாக வைத்திருக் கும் உள்துறை அமைச்சர் இப்போது மட்டும் ஒத்துழைப்புக் கேட்பது எத்தகையது?