headlines

img

பாஜகவுக்கு துணை போகும் தேர்தல் ஆணையம்

குஜராத் மற்றும் இமாச்சலப்பிரதேச சட்ட மன்றத் தேர்தல்களின்போது பெரும் கார்ப்பரேட் முதலாளிகளிடம் தேர்தல் பத்திரங்கள் மூலமாக பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாய் நன்கொடை என்ற பெயரில் பணம் பெற்றுக் கொள்வதற்காக ரிசர்வ் வங்கி நிர்வாகத்தின் அனுமதியைப் பெறாமல், எவ்வித ஆலோச னையையும் மேற்கொள்ளாமல் ஒன்றிய மோடி அரசு தேர்தல் பத்திர திட்ட தேதியை நீட்டித்து அறிவிக்கை வெளியிட்டிருப்பது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

தகவல் அறியும் உரிமை சட்ட ஆர்வலர் ஒருவர் மூலமாக வெளியாகியுள்ள இந்த விபரம்,  ஒன்றிய பாஜக அரசு, நாட்டின் அரசியலமைப்புச் சட்ட நடைமுறைகளையும் அதன் அதிகாரம் பெற்ற அமைப்புகளையும் எந்த அளவிற்கு மலினப்படுத்தியுள்ளது என்பதற்கு முக்கிய உதாரணம் ஆகும். 

இந்திய ரிசர்வ் வங்கிச் சட்டம் 1934 - பிரிவு  31, ஒன்றிய அரசுக்கு தேர்தல் பத்திர திட்டம் அறி வித்துக் கொள்வதற்கான அதிகாரத்தை வழங்கி யுள்ளது. இந்த அதிகாரத்தை தற்போது முற்றிலும் தவறாக பயன்படுத்தி, கடந்த நவம்பர் 7  அன்று ஒன்றிய நிதி அமைச்சகம், ஏற்கெனவே வெளியிட்ட தேர்தல் பத்திர திட்டத்தில் கூடுத லாக 15 நாட்கள் கால அவகாசம் தரப்படுகிறது என ஒரு திருத்தத்தை செய்து புதிய அறி விக்கை வெளியிட்டுள்ளது. இந்த புதிய அறிவிக்கையின் நோக்கம், குஜராத் மற்றும் இமாச்சலப்பிரதேச சட்டமன்ற தேர்தல்களை யொட்டி பெரும் கார்ப்பரேட் முதலாளிகளிடம் தேர்தல் பத்திரங்கள் என்ற பெயரில் பல்லாயிரக் கணக்கான கோடி ரூபாய்களை பெற்றுக் கொள்வதற்கு கால அவகாசத்தை ஏற்படுத்திக் கொள்ளவே என்பதை விளக்கவேண்டியதில்லை.

வழக்கமாக எந்தவொரு நபரிடமிருந்தும் தேர்தல் பத்திரங்களைப் பெற்றுக்கொள் வதற்கான அறிவிக்கை ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி, ஏப்ரல், ஜூலை, அக்டோபர் மாதங் களில் வெளியிடப்படும். அறிவிக்கை வெளி யிட்ட 10 நாட்களில் தேர்தல் பத்திரங்கள் மூலம் எந்தவொரு கட்சியின் கணக்கிற்கும் எந்த வொரு நிறுவனமோ தனிநபரோ பணம் செலுத்தலாம்.

இந்திய அரசியலில் தேர்தல் பத்திரங்கள் என்ற வடிவத்தை சட்டப்பூர்வமாக்கி, பெரும் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கும் ஆளும் வர்க்க கட்சிகளுக்கும் இடையிலான மிகப்பெரும் அளவிலான பணப்பரிமாற்றத்தை - மிகப்பெரும் ஊழலை அதிகாரப்பூர்வமானதாக மாற்றியுள் ளது பாஜக அரசு. இதில் மிக அதிக பலன் அடைந்ததும் பாஜகவே. 

. மோடி அரசுடன் கூட்டுக் களவாணிகளாக செயல்படும் பெரும் கார்ப்பரேட் கம்பெனிகள், மோடி அரசு வாரி வழங்கும் சலுகைகளுக்கு கைமாறாக பாஜகவுக்கு தேர்தல் பத்திரங்கள் வாயிலாக பல்லாயிரம் கோடிகளை அள்ளித் தருகிறார்கள். ஜனநாயகத்தை படுகொலை செய்யும் இந்த கூட்டுக் களவாணிகள் அரங் கேற்றும் அரசியல் ஊழலில், தற்போது ரிசர்வ்  வங்கியையும் ஏமாற்றிட துணை போயிருப்பது தேர்தல் ஆணையம் என்பதுதான் பெரும் அதிர்ச்சி.