கடந்த ஒன்பதாண்டுகளாக விவசாயிகளின் நலனை கருத்தில் கொண்டு முடிவுகளை எடுத் துள்ளோம் என்று பிரதமர் நரேந்திர மோடி வாய்ப்பந்தல் போட்டுள்ளார். ராஜஸ்தான் மாநி லம் கிசாரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அவர், விதைகள் முதல் விளைபொருட்களை சந்தைப்படுத்துதல் வரை அனைத்து வசதிக ளும் விவசாயிகளுக்கு செய்து தரப்பட்டுள்ள தாக கூறியுள்ளார்.
இந்திய விவசாயத்தை கார்ப்பரேட்டுகளிடம் கைமாற்றி விடும் வகையில் மோடி அரசினால் கொண்டு வரப்பட்ட மூன்று வேளாண் சட்ட திருத்தங்கள் யாருடைய நலனை கருத்தில் கொண்டு எடுத்த முடிவு என்று பிரதமர் மோடி விளக்குவாரா? விவசாயத் துறையை விவசாயி களிடமிருந்து பறிக்கும் இந்த கொடூரச் சட்டத் திருத்தங்களை எதிர்த்து இந்திய விவசாயிகள் ஒரு ஆண்டுக்கு மேல் போராடினார்கள். கடும் அடுக்குமுறை மூலம் இந்த போராட்டத்தை ஒடுக்கி விட ஒன்றிய அரசு முயன்றது.
விவசாயிகளின் வீரம்செறிந்த போராட்டத் தின் விளைவாகவே இந்த சட்டத்திருத்தங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இதை மறைத்து விவசாயிகளுக்காக பாடுபட்டது போல பிரதமர் பேசுவதை யாரும் நம்ப மாட்டார்கள்.
2014ஆம் ஆண்டு தேர்தலின் போது, ஆட்சி க்கு வந்தால் விவசாயிகளின் விளைபொரு ளுக்கு உற்பத்திச் செலவை விட ஒன்றரை மடங்கு கூடுதலாக விலை தருவோம் என்று மோடி வாக்கு றுதி அளித்தார். கடந்த ஒன்பதாண்டுகளில் ஒரு முறையாவது, எந்த பயிருக்காவது இதை நடை முறைப்படுத்தியதா மோடி அரசு?
தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்களில் விவசாயத்திற்கு கிடைக்கும் இலவச மின்சா ரத்தை ரத்து செய்யும் வகையில் மின்சார சட்ட திருத்த மசோதா கொண்டு வரத்துடிப்பது விவ சாயிகளின் நலனைக் கருத்தில் கொண்ட முடிவா?
மாநிலங்களுக்கு அரிசி, கோதுமை போன்ற உணவு தானியங்களை வழங்க ஒன்றிய அரசு மறுக்கிறது. இதனால் வெளிச்சந்தையில் அரிசி விலை கடுமையாக உயர்ந்து கர்நாடகம் போன்ற மாநிலங்கள் அரிசிக்குப் பதிலாக பணமாக வழங்குகின்றன. அரிசி விலை உயர்ந்தபோ தும், நெல்லுக்கு கட்டுப்படியான விலை கிடைக்க வில்லை. தக்காளி விலை கடுமையாக உயர்ந் துள்ளபோதும் விவசாயிகளுக்கு லாபமில்லை.
உரம், பூச்சிமருந்து போன்றவற்றின் விலை யும் தொடர்ந்து உயர்ந்தே வந்துள்ளது. விவசாய இடுபொருட்களுக்கு தட்டுப்பாடும் நிலவுகிறது. நகர்ப்புற பொருளாதாரத்திற்கு நிகராக கிராமப் புற பொருளாதாரத்தை உயர்த்தியுள்ளதாகவும் பிரதமர் ஜம்பமடிக்கிறார். ஆனால் இவருடைய ஆட்சியில் நகர, கிராமப் பொருளாதாரம் இரண் டும் வீழ்ந்துள்ளது என்பதே உண்மை. நூறு நாள் வேலைத்திட்டத்திற்கான பட்ஜெட் ஒதுக்கீடு தொடர்ந்து வெட்டப்படுகிறது. பிறகு எப்படி கிராமப்புற பொருளாதாரம் உயரும்?