பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி ஒன்றிய ஆட்சிப்பொறுப்பேற்று எட்டு ஆண்டுகள் நிறைவடைந்ததை கொண்டாட வேண்டுமென்றும் வீதிகள் தோறும் பிரச்சாரம் செய்ய வேண்டுமென்றும் பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா கூறியுள்ளார். நாட்டை குட்டிச்சுவ ராக்கிக் கொண்டிருக்கும் இவர்களது எட்டு ஆண்டு ஆட்சி நிறைவை கார்ப்பரேட் முதலாளி களும், பன்னாட்டு முதலாளிகளும் மதவெறி சக்தி களும் வேண்டுமானால் பெரும் கொண்டாட்ட மாக நடத்தலாம்; நாட்டின் கோடானுகோடி மக்கள் கொண்டாடுவதற்கு எதுவும் இல்லை.
2014ஆம் ஆண்டில் நரேந்திர மோடி தலைமை யிலான பாஜக கூட்டணி அரசு பொறுப்பேற்றது. இன்னும் இரண்டு ஆண்டுகளில் நாடாளுமன்றத் தேர்தலை சந்திக்க வேண்டியுள்ள நிலையில், மீண்டும் ஆட்சியைப் பிடிக்க அனைத்து முயற்சிகளையும் அவர்களது பாணியில் மேற்கொண்டுள்ளனர்.
ஆர்எஸ்எஸ் வகுத்துக் கொடுத்த வழிமுறையின் படிதான் இவர்களது ஆட்சி நடைபெறுகிறது. ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தை துண்டு துண்டாக்கிய தோடு அரசியல் சட்டத்தின் 370வது பிரிவை ரத்து செய்தது, அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்ட இடத்தில் ராமர் கோவில் கட்டிக் கொண்டிருப்பதாக மக்களை திசைதிருப்புவது, பொது சிவில் சட்டத்தை கொண்டுவரப்போவதாக கூறுவது, குடியுரிமை திருத்தச் சட்டத்தை நடைமுறைப்படுத்தப்போவதாக கூறுவது, பல்வேறு மாநிலங்களில் மதரீதியாக மக்க ளிடையே பகைமையை ஏற்படுத்துவது என்பது தான் அவர்களது செயல்திட்டம்.
மறுபுறத்தில் பணமதிப்பு நீக்கம், ஜிஎஸ்டி வரி அமலாக்கம், தேசிய பணமாக்கல் திட்டம் என்கிற பெயரில் அனைத்து பொதுத்துறை நிறு வனங்களையும் தனியார்மயமாக்குவது, கார்ப்பரேட் முதலாளிகளுக்கு வகைதொகை யற்ற முறையில் சலுகைகளை வாரி வழங்குவது என்பதுதான் பொருளாதாரத்துறையில் பாஜக வின் சாதனை. இதை எப்படி வீதி வீதியாக பிரச்சா ரம் செய்யப்போகிறார்கள் என்றுதெரியவில்லை.
பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை கடுமையாக உயர்ந்து கொண்டே இருக்கிறது. அனைத்துப் பொருட்களின் விலையும் விண்ணை நோக்கிப் பாய்கிறது. வேலையின்மை, வறுமை, அதிர்ச்சியளிக்கும் வகையில் அதிகரித்துள்ளது.
சிறுபான்மை முஸ்லிம் மற்றும் கிறிஸ்தவ மக்களுக்கு எதிராகவும், பட்டியலின மற்றும் பழங்குடி மக்களுக்கு எதிராகவும் திட்டமிட்ட வன்முறைகள் கட்டவிழ்த்துவிடப்படுகின்றன. இவைதான் மோடி ஆட்சியின் எட்டு ஆண்டு சாதனைகள்.
இந்த லட்சணத்தில் சிறுபான்மை மக்களுக் கான நலத்திட்டங்களை எடுத்துச் சொல்லப் போகிறார்களாம். இவர்களது ஆட்சியின் சாதனை மக்கள் வாழ்வில் வேதனையாக வெளிப்பட்டுக் கொண்டிருக்கின்றது. அதனடிப் படையில்தான் இந்த ஆட்சி குறித்து மக்கள் மதிப்பிடுவார்கள். இவர்களது பிரச்சாரம் தோல்வியையே சந்திக்கும்.