headlines

img

தொடரும் துரோண அநீதி!

இந்திய நாட்டின் குடிமக்கள் அனைவருக்கும் கல்வி கிடைக்கச்  செய்வது விடுதலைப் போராட்டக் காலத்து  பொது உணர்வாகவே இருந்தது. அதனால் தான் அனைவருக்கும் கல்விக்கான திட்டங்கள் சுதந்திர இந்தியாவின் முன்னுரிமைத் திட்டமாக ஆயின.

அனைவருக்கும் கல்வித் திட்டத்தை அடிப்படை உரிமையாக்கவே கட்டாய கல்வி உரிமைச் சட்டம் கொண்டுவரப்பட்டது, முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் இடதுசாரிக் கட்சிகளின் வலி யுறுத்தலால். ஆனால் இப்போதைய இந்துத்துவா பாஜக கூட்டணி அரசு, பிராமணிய மேலாதிக்க நோக் கில் கொண்டு வந்த புதிய தேசிய கல்விக் கொள்கை,  மாணவர்களை தேர்வு எனும் பெயரில் எப்படி வடிகட்டு வது, கல்வி நிலையங்களிலிருந்து வெளியேற்றுவது என்பது பற்றியும் குலத்தொழிலை செய்திட நிர்ப்பந் திப்பதுமாகவே வடிவமைக்கப்பட்டது.

இந்த கல்விக் கொள்கையை மாநில அரசுகளின் ஒப்புதலைப் பெறாமல் தானாகவே நிறைவேற்றுவதற் கான நிர்வாக உத்தரவுகள் மூலம் ஒன்றிய கல்வித்துறை ஈடுபட்டு வருகிறது. பொதுப் பட்டியலில் இருந்த கல்வி, அந்தந்த மாநிலங்களின் பண்பாடு, வரலாறு, சூழலுக்கு ஏற்ப அமைக்கப்பட்டிருந்ததை மாற்றி ஒரே ஒற்றைத் தன்மை கொண்ட இந்துத்துவா கல்விமுறையாக ஆக்  கப்பட்டு ஒன்றிய அரசே கைவசப்படுத்திக் கொண்டி ருக்கிறது கூட்டாட்சித் தத்துவத்துக்கு எதிராக.

இவர்களது கல்விக் கொள்கை கார்ப்பரேட், காவி மயத் தேவைகளுக்கு ஏற்ப வடிவமைக்கப்பட்டு ஏழை  எளிய கிராமப்புற மாணவர்களின் இடைநிற்றலை அதிகரித்து அவர்களை கல்வியறிவற்றவர்களாக்கு வதையே நோக்கமாகக் கொண்டிருக்கிறது. புராண கால ஏகலைவர்களை உருவாக்குவதே இதன் உள்ளர்த்தம்.

ஏற்கனவே மருத்துவக்கல்வியில் நீட் தேர்வை திணித்து எண்ணற்ற மாணவர்களின் உயிர்களைப் பறித்து மருத்துவக் கனவைப் பறித்து அநீதி இழைத்துக் கொண்டிருக்கிறது. இப்போது கலை அறிவியல் பட்டப் படிப்புகளுக்கும் கூட நுழைவுத் தேர்வு நடத்திட வேண்டும் என்று பல்கலைக்கழக மானியக் குழு அறிவித்துள்ளது.

கடந்த வாரம் 45 மத்திய பல்கலைக்கழகங்களில் சேருவதற்கு நுழைவுத் தேர்வு கட்டாயம் என்றும் மாநில  மற்றும் தனியார் பல்கலைக்கழக கல்லூரிகளிலும் நடத்திக் கொள்ளலாம் என்றும் யுஜிசி  கூறியது.  இதற்கு தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலும் கடும் எதிர்ப்புக் கிளம்பியது. ஆனாலும் புதனன்று மாநில அரசின் அனைத்துப் பல்கலைக்கழகங்களும் பொது நுழைவுத் தேர்வு அடிப்படையில் மாணவர் சேர்க்கையை நடத்த வேண்டும் என்று யுஜிசியின் தலைவர் ஜகதீஷ்குமார் கூறியிருக்கிறார்.

இதற்காக அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனி யன் பிரதேசங்களின் கல்வி அமைச்சர்களுக்கு கடி தம் எழுதுவேன் என்றும் பல்கலைக்கழக துணை வேந்தர்களைச் சந்தித்து, அவர்களின் சந்தேகங்க ளுக்கு விளக்கமளிக்கத் திட்டமிட்டுள்ளேன் என்றும் கூறியிருக்கிறார்.

இந்தியத் துணைக் கண்டத்தின் பல்வேறு மாநி லங்களின் தன்மைகளுக்கேற்ப கல்வி வழங்குவது பற்றி யோசிக்காமல் தங்களது இந்துத்துவா ஒற்றைத் தன்மை கல்வியைத் திணிக்கவே ஒன்றிய அரசு முயற்சிக்கிறது என்பதையே யுஜிசி தலைவரின் பேச்சு உணர்த்துகிறது. தமிழக உயர் கல்வித்துறை அமைச்சர் தமிழகத்தில் இந்த நுழைவுத் தேர்வை அனுமதிக்க மாட்டோம் என்று சட்டப்பேரவையில் அறிவித்திருந்தார். எனவே யுஜிசியின் இந்த பாதகச் செயலை தடுத்து நிறுத்துவதே தமிழக மாணவர்களின் கல்வி உரிமையை காப்ப தற்கு உதவும்.