குறுக்கு வழியை கைவிடுக!
ஆட்சிக்கு வந்தால் ஆண்டுக்கு 2 கோடிப் பேருக்கு வேலை தருவேன் என்று 2014 தேர்தல் பிரச்சாரத்தின் போது நரேந்திர மோடி நீட்டி முழக்கி னார். அவர் ஆட்சிக்கு வந்து 11 ஆண்டுகள் ஆகி விட்டது. அவரது கணக்குப்படி இதுவரை 22 கோடிப் பேருக்கு வேலை வழங்கியிருக்க வேண்டும். ஆனால் வேலையில்லாத இளைய தலைமுறையை விரக்தியுடன் தெருக்கோடியில் நிறுத்தியதுதான் மோடி அரசின் சாதனை
வேலை வாய்ப்புக்காக காத்திருக்கும் இளை ஞர்களைக் கொண்டு ஒன்றிய அரசின் காலிப் பணியிடங்கள் மற்றும் பொதுத்துறை நிறுவன காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கு மோடி அரசு தயாராகயில்லை. மாறாக, உலகின் மிகப் பெரிய பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றாகவும், உலகில் மூன்றாவது பெரிய ரயில்வே நிறுவனமா கவும் விளங்குகிற இந்திய ரயில்வேத் துறையில் காலிப் பணியிடங்களை ஏற்கெனவே ஓய்வு பெற்ற வர்களைக் கொண்டு நிரப்ப ஒன்றிய அரசு நட வடிக்கை எடுத்து வருகிறது.
இதுதொடர்பாக ஒன்றிய ரயில்வே அமைச்ச கம் சார்பில் மண்டல அலுவலகங்களுக்கு அனுப் பப்பட்டுள்ள சுற்றறிக்கையில் காலியாகவுள்ள பணியிடங்களுக்கு ஓய்வு பெற்றவர்கள் விண்ணப்பித்தால் அவர்கள் ஏற்கெனவே வகித்த பணியிடத்துக்கோ அல்லது அதற்கு கீழுள்ள பணியிடத்துக்கோ முன்னனுபவ அடிப்படையில் தற்காலிக அடிப்படையில் பணியமர்த்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இது வேலைவாய்ப்புக்காக காத்திருக்கும் இளைய தலைமுறையை வெளியே தள்ளி கதவ டைக்கிற அப்பட்டமான துரோகமாகும். விபத்து கள் அதிகமாக நடப்பதால் அனுபவம் பெற்றவர்க ளை பணியமர்த்துவதாக ஒரு சொத்தைக் கார ணத்தை முன்வைக்கிறார்கள். வயது முதிர்வின் அடிப்படையிலேயே அவர்கள் ஓய்வு பெற்றுள்ள னர். அவர்களை மீண்டும் பணியமர்த்துவதன் மூலம் எப்படி செயல்திறன் வெளிப்படும்?
ரயில்வே கட்டமைப்பை மேம்படுத்தி விபத்து களை தவிர்ப்பதற்கு பதிலாக போலியான வாதத்தை முன்வைக்கிறது ஒன்றிய அரசு. வேலை வாய்ப்புக்காக காத்திருப்பவர்களை பணிய மர்த்தி உரிய பயிற்சி அளிப்பதன் மூலம் செயல் திறனை மேம்படுத்த முடியும். மேலும் ஓய்வு பெற்றவர்களுக்கு தற்காலிக அடிப்படையில் குறைந்த ஊதியம் தருவதன் மூலம் அவர்களை யும் சுரண்டுகிற ஏற்பாடு இது
தற்காலிகப் பணியிடங்களாக நிரந்தரப் பணி யிடங்களை மாற்றுவதன் மூலம் இடஒதுக்கீடு அடிப்படையிலான சமூக நீதியையும் ஒன்றிய அரசு மறுக்கிறது. இந்தப் பின்னணியில் காலிப் பணியிடங்களை ஓய்வு பெற்றவர்களைக் கொண்டு நிரப்பும் முடிவை கைவிட்டு வேலை வாய்ப்புக்காக காத்திருக்கும் இளைய தலைமுறையினரை நிரந்தரப் பணியிட அடிப்ப டையில் நிரப்ப வேண்டும். இந்தியாவில் வேலை யின்மை மிகப் பெரிய பிரச்சனையாக உரு வெடுத்துள்ள நிலையில், குறுக்கு வழிகளை தேடு வதை ஒன்றிய அரசு கைவிட வேண்டும்.