இடிப்பும் இஸ்லாமிய வெறுப்பும்
இஸ்லாமியர்களின் வீடுகளை இடிப்பதற்கு பாஜக ஆளும் மாநிலங்களின் நிர்வாகங்கள் புதிது புதிதாக காரணங்களைக் கற்பித்துக் கொண்டு தங்களின் குரோத காரியங்களை நிறைவேற்றிக் கொண்டேயிருக்கிறார்கள். ஆக்கிரமிப்பு அகற்றம் என்ற பெயரில் புல்டோஷரைப் பயன் படுத்தி நூற்றுக்கணக்கான வீடுகளை இடித்துத் தள்ளினர். இத்தகைய கொடுஞ்செயல்களுக்கு உச்சநீதிமன்றம் கடிவாளம் இட்டபின், குற்ற வழக்குகளில் தொடர்புடையவர்கள் என்று கூறி அந்தப் பணியை தொடரவே செய்தார்கள்.
இப்போது பஹல்காம் பயங்கரவாத தாக்குத லுக்குப் பின் தேசப் பாதுகாப்பு என்று கூறி குஜ ராத்தில் எட்டாயிரம் வீடுகள் இடிக்கப்பட்டுள் ளன. இதனால் ஆயிரக்கணக்கானோர் வீடிழந்து நிர்க்கதியாய் வீதிகளில் அலையும் அவலம் ஏற்பட்டுள்ளது. மாநில பாஜக அரசு அவர்களில் 1200 முதல் 1500 பேர் வங்கதேசத்தைச் சேர்ந்தவர் கள் என்று கூறுகிறது. ஆனால் அதில் 90 சத வீதம் பேர் இந்திய குடிமக்களாக ஆகிவிட்டவர் கள். ஆதார் அட்டைகள், வாக்காளர் அட்டைகள், ரேசன் அட்டைகள் எல்லாம் வைத்திருப்பவர்கள்.
சியாசத் நகரில் அவர்களது வீடுகளை இடிப்ப தற்கு முன்பு நோட்டீஸ் கொடுக்கவோ, வேறெந்த அறிவிப்புமோ மாநில, மாவட்ட நிர்வாகத்தால் செய்யப்படவில்லை. அவர்களது வீடுகளை இடிக் கும் நடவடிக்கையை நிறுத்துவதற்கு குஜராத் உயர்நீதிமன்றமும் மறுத்துவிட்டது. இவைய னைத்தும் ‘தேசப் பாதுகாப்பு’ என்ற பெயரில் அங்கு நடந்திருக்கிறது.
இஸ்லாமியர்கள் என்றாலே தேச விரோதி கள் என்பதும் நாட்டின் பாதுகாப்புக்கு ஆபத்தான வர்கள் என்பதும் அறிவுக்கு பொருத்தமற்ற செய லாகும். பாகிஸ்தானுக்கு உளவு சொன்னவர்கள் என்று அண்மையில் கைது செய்யப்பட்டவர்க ளில் பெரும்பாலானோர் இந்துக்களும், இதரர்க ளும் தானே! குஜராத்தில் அப்படி யாரும் கைது செய்யப்படவில்லையே; பஞ்சாப், அரியானா, உ.பி.யைச் சேர்ந்தவர்கள் தானே! அங்கே தேசப் பாதுகாப்பு கேள்வி எழவில்லையா?
ஆபரேசன் சிந்தூர் நடவடிக்கைக்குப் பின் ம.பி., மாநில அமைச்சர் விஜய்ஷா, பாகிஸ்தானை அவர்களின் சகோதரியை வைத்தே அழித்து விட்டோம் என்று அதே இஸ்லாமிய அடையா ளத்தை வைத்துத் தானே மத ரீதியாகப் பார்த்து களங்கம் கற்பித்தனர். அத்தகைய ஆர்எஸ்எஸ்-சின் முஸ்லிம் வெறுப்பு மனநிலை தானே பிரத மர் மோடி உள்ளிட்ட பரிவாரங்களின் செயல் பாடாக இருக்கிறது.
திங்களன்று குஜராத் வந்த பிரதமர் மோடி நிகழ்ச்சி ஒன்றில் பேசும்போது, இந்தியாவை வெறுப்பதும் அதற்கு தீங்கு விளைவிக்கும் வழி
களைப் பற்றி யோசிப்பதும் பாகிஸ்தானின் ஒரே நோக்கமாக உள்ளது என்று கூறியிருக்கிறார். ஆனால் பாஜக அரசுகளின் நோக்கம் முழுவதும்
இஸ்லாமிய வெறுப்பாகவே உள்ளதும் அதை மறைக்க தேசப் பாதுகாப்பு என்று பேசினாலும் இத்தகைய அராஜக இடிப்புச் செயல்கள் மூலம் அவர்களின் உள்ளக்கிடக்கையை மறைக்க
முடியாமல் அம்பலப்பட்டுத்தான் நிற்கிறார்கள்!