headlines

img

சாகடிப்பதற்குத்தான் இந்த சாவடிகளா?

தமிழகத்தில் 28 சுங்கச் சாவடிகளில் சுங்கக் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. 15 சதவீதம் அள வுக்கு உயர்த்தப்பட்டுள்ள சுங்கக் கட்டணத்தால் சொந்த வாகனம் வைத்திருப்பவர்கள் மட்டு மின்றி பொதுப் போக்குவரத்துக்கான செலவும் கடு மையாக அதிகரிக்கும். பெட்ரோல், டீசல் விலை உயர்வாலும், மழையாலும் உயர்ந்து கொண்டே வரும் காய்கறி, பழங்கள் உள்ளிட்ட அத்தியா வசியப் பொருள்களின் விலை மேலும் உயரும்.

இது இந்திய மக்களை குறி வைத்து மோடி அரசு நடத்தி வரும் துல்லியத் தாக்குதலின் மேலும் ஒரு பகுதியாக அமைந்துள்ளது. இந்தியா விலேயே தமிழகத்தில்தான் சுங்கச் சாவடிகள் அதிகமாக செயல்பட்டு வருகின்றன. இந்நிலை யில் 48 சுங்கச்சாவடிகளில் 28 சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது மேலும் ஒரு பேரிடியாக அமைந்துள்ளது.

சுங்கக் கட்டணக் கொள்ளை என்பது பெரும் மர்மமாகவே இருந்து வருகிறது. வெளிப்படைத் தன்மை என்பது கொஞ்சம் கூட இல்லை. தேசிய நெடுஞ்சாலைகளுக்கு அதிகபட்சமாக 15 ஆண்டு கள் அல்லது அந்த சாலைகளை மேம்படுத்த செலவிடப்பட்ட முதலீடு திரும்ப எடுக்கப்படும் வரையிலேயே சுங்கக் கட்டணம் வசூலிக்கப்பட வேண்டும் என்பதே விதி.

ஆனால் தமிழகத்தில் 15 ஆண்டுகளைக் கடந்தும், செலவழிக்கப்பட்ட தொகையை விட பல மடங்கு அதிகமாக வசூலிக்கப்பட்ட பிறகும் சுங்கக் கட்டணம் வசூலிக்கப்படுவது மட்டுமல்ல, குறிப்பிட்ட இடைவெளியில் கட்டணம் அதி கரிக்கப்பட்டும் வருகிறது.

முதலீடு செய்யப்பட்ட தொகை திரும்பப் பெறப்பட்ட பிறகு 40 சதவீதம் மட்டுமே கட்ட ணம் வசூலிக்கப்பட வேண்டும். ஆனால் அவ் வாறு எந்த ஒரு சுங்கச்சாவடியிலும் கட்டணம் குறைக்கப்பட்டதேயில்லை. மாறாக, தொடர்ந்து அதிகரிக்கப்பட்டுதான் வருகிறது.

சொந்த உபயோகத்திற்காக வாகனங்களை பயன்படுத்துபவர்கள் மட்டுமின்றி அரசுப் பேருந்து கள், சரக்கு லாரிகளுக்கும் சுங்கக் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இது பொதுப் போக்கு வரத்தின் முதுகை முறிக்கும் செயல் மட்டுமல்ல, அத்தியாவசியப் பொருட்களின் விலையை கடுமையாக உயர்த்தக்கூடிய நடவடிக்கையாகும்.

நான்கு வழிச்சாலை, எட்டு வழிச்சாலை போன்ற திட்டங்கள் பயண நேரத்தை குறைக்கும். எரிபொருள் செலவை மிச்சப்படுத்தும் என்ப தெல்லாம் வெறும் பம்மாத்து வேலையேயாகும். இத்தகைய சாலைகள் மூலம் மேலும் மேலும் சுங்கக் கட்டணம் என்ற பெயரில் சுருட்டுவதே அரசின் நோக்கமாகும். பெரும்பாலும் பன்னாட்டு நிறுவனங்கள்தான் சுங்கக் கட்டணம் வசூலிக் கின்றன. ‘பாஸ்ட் டிராக்’ முறை என்பது இதில் மேலும் ஒரு கூடுதல் கொள்ளையாகும். குறிப்பிட்ட தொகையை இருப்பு வைத்திருக்க வேண்டும் என்பதன் மூலமும் தனியார் நிறுவனங்கள் லாபம் சம்பாதிக்க வழி வகுக்கப்படுகிறது. சுங்கக் கட்ட ணம் எனும் பகல் கொள்ளைக்கு முடிவு கட்ட வேண்டியது அவசியம்.