மோடி பிரதமராகப் பொறுப்பேற்ற கடந்த 9 ஆண்டுகளில் மட்டும் பாஜக ஆதரவு கார்ப்ப ரேட்கள் வங்கியில் வாங்கிய கடனில் ரூ.14,56,316 கோடி தள்ளுபடி செய்யப்பட்டிருக்கிறது. இது ஒரு திட்டமிட்ட மெகா கொள்ளை.
வங்கியில் வாங்கிய கடனை திருப்பி செலுத்தும் திறன் இருந்தும் செலுத்தாதவர் களை ‘Wilful defaulters’ என்று ரிசர்வ் வங்கி வரையறை செய்கிறது. இப்படி வேண்டு மென்றே கடனை செலுத்தாதவர்களின் கட னைத்தான் மோடி அரசு தள்ளுபடி செய்திருக்கி றது. திரும்பச் செலுத்தும் திறன் இருந்தும் அவர் களிடம் வசூலிக்காமல் ஏன் கடனை தள்ளுபடி செய்ய வேண்டும்? சாதாரண மக்கள் வங்கியில் கடன் வாங்கி விட்டுத் திரும்பச் செலுத்த தகுதி யிருந்தும் செலுத்தாமல் இருந்தால் மோடி அரசு கடனை தள்ளுபடி செய்யுமா? தள்ளுபடி செய்யப்பட்டிருக்கும் கார்ப்பரேட்களுக்கும் பாஜ கவிற்கும் உள்ள தொடர்பு என்ன என்பதை விசாரணைக்கு உட்படுத்த வேண்டும்.
2020 டிசம்பரில் கடனை வேண்டுமென்ற திரும்ப செலுத்தாதவர்களிடமிருந்து வரவேண் டிய கடன் நிலுவைத் தொகை ரூ.2,46,767 கோடி யாக இருந்தது. சட்டங்களை மீறும் பாஜக ஆத ரவு கார்ப்பரேட்கள் மீது நடவடிக்கை எடுக்க மாட்டோம் என்ற ஒன்றிய அரசின் ஒத்திசை வால் 2022 டிசம்பரில் ரூ.3,46,449 கோடியாக அதி கரித்திருக்கிறது.
2014இல் மோடி பிரதமராகப் பொறுப்பேற்ற போது வங்கிகளில் கடன் வாங்கி விட்டு வேண்டு மென்றே செலுத்தாத தொகை ரூ.58,786 கோடி யாக இருந்தது. 2022-23ஆம் நிதியாண்டில் ரூ. 2,09,144 கோடியாக உயர்ந்திருக்கிறது. இதில் ஊழல் இல்லை என்றால் வராக்கடன் வைத்திருப்போரின் பட்டியலையும், தள்ளுபடி செய்யப்பட்டிருக்கும் கார்ப்பரேட்களின் பட்டி யலையும் வெளியிட வேண்டும். ஆனால் மோடி அரசு தொடர்ந்து வெளியிட மறுத்துவருகிறது.
நாடாளுமன்றத்தில் இதுகுறித்து கேள்வி எழுப்பப்பட்ட போது, நிதியமைச்சர் நிர்மலா சீதா ராமன் இவை “கடன் தள்ளுபடியல்ல, கடன் தள்ளி வைப்பு” என வியாக்கியானம் செய்தார். ஆனால் தற்போது ரிசர்வ் வங்கி 2012-13 நிதி யாண்டு முதல் 2022-23 நிதியாண்டு வரை வங்கி களில் வேண்டுமென்றே கடன் செலுத்தாதவர் களின் கடனை வங்கிகள் ரூ.15.32 லட்சம் கோடி யை ரத்து செய்திருப்பதாகத் தெரிவித்திருக் கிறது. இதற்கு எப்படி நிதியமைச்சர் முட்டுக் கொடுக்கப்போகிறார் எனத் தெரியவில்லை.
பாஜக ஆதரவு கார்ப்பரேட்களுக்கு மீண்டும் “சமரச தீர்வு” என்ற பெயரில் ஒரு மெகா தள்ளு படி அறிவிக்கப்பட்டிருக்கிறது. வங்கியில் செலுத்த வேண்டிய கடன் தொகையில் ஒரு சிறு பகுதியைச் செலுத்தினால் போதும், மொத்த கட னும் தள்ளுபடி. மீண்டும் ‘12 மாதங்கள் கழித்து புதிய கடன் வழங்கப்படும்’ என அறிவித்திருக் கிறது. இந்த காவி - கார்ப்பரேட் கூட்டுக் கொள்ளை தடுக்கப்பட வேண்டுமென்றால் ஒன்றிய மோடி அரசு அகற்றப்பட வேண்டும்.