நாட்டின் மக்கள்தொகையில் பெரும் பிரி வினராக இருப்பவர்கள் ஏழைகளே. சாதி, மதம் என எந்த வேறுபாடும் இல்லாமல் நாட்டின் வளங்களில் ஏழை மக்களுக்கே முதல் உரிமை உள்ளது. ஏழைகளின் நலனே நாட்டின் நலன், இப்படி பேசியிருப்பது பிரதமர் மோடி தான்.
ஐந்து மாநிலத் தேர்தலையொட்டி முன் கூட்டியே தனது பிரச்சாரத்தை துவக்கிவிட்ட பிரதமர் மோடி சத்தீஸ்கர் மாநிலத்தில் இவ்வாறு பேசியிருக்கிறார். ஆனால் நாட்டின் பெரும்பாலான மக்களாகிய அடித்தட்டு மக்க ளின் அதாவது 50 சதவீத ஏழைகளின் வருமானம் தேசிய வருமானத்தில் வெறும் 13 சதவீதம்தான். ஆனால் நாட்டின் மேல்தட்டு 10சதவீத பணக் காரர்களின் வருமானம் 57 சதவீதமாக உள்ளது. அதிலும் குறிப்பாக ஒரு சதவீத பெரும் பணக்காரர்களின் வருமானம் 22 சத வீதமாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
இதுதான் ஏழைகளின் நலனில் அக்கறை காட்டும் நரேந்திர மோடி அரசாங்கத்தின் செயல் பாட்டின் விளைவு. இது தொடர்பாக ஆக்ஸ் பார்ம் அறிக்கை, நாட்டின் ஒரு சதவீத பெரும் பணக்காரர்களிடம் 73சதவீத சொத்து அதிகரிப்பு 2017ஆம் ஆண்டில் நடைபெற் றுள்ளது. ஆனால் நாட்டின் மக்கள்தொகையில் பாதிப் பேராக உள்ள 67 கோடிப் பேர்களின் சொத்து சேர்ப்பு வெறும் ஒரு சதவீத உயர்வே ஆகும். இத்தகைய சமத்துவமின்மைதான் நாட்டின் நிலைமையாக உள்ளது.
குறிப்பாக நாட்டின் சேவகன் நான் என்று பிரதமர் மோடி தன்னை துவக்கக் காலத்தில் குறிப்பிட்டார். ஆனால் அவர் யாருக்கு சேவக ராக இருந்தார் என்பதை உலகப் பெரும் பணக்கா ரர்கள் பட்டியலில் அதானி, அம்பானி இடம் பெற்றதிலிருந்தே தெரியவரும். இந்தாண்டு ஏப்ரல் மாதம் வெளியிடப்பட்ட புளும்பெர்க் பணக்காரர்கள் பட்டியலில் 18ஆவது இடத்தை பெற்றிருக்கும் அதானியின் சொத்து 4.38 பில்லியன் டாலரிலிருந்து 64.2 பில்லியன் டால ராக அதிகரித்திருப்பதுதான் மோடி அரசின் ஏழைகளின் நலனுக்கான செயல்பாடாகும்.
தனி நபர் வருமானத்தில் கிராமப்புறத்தில் நுகர்வுச் செலவு ரூ.972 என்றும், நகரத்தில் ரூ.1407 என்றும் அரசு நிர்ணயம் செய்துள்ளது. ஆனால் கிராமப்புறத்தில் குறைந்தபட்ச ஊதியம் பெறும் ஒருவர், ஒரு கார்மெண்ட்ஸ் கம்பெனி உயர் அதி காரியின் ஊதியத்தை சம்பாதிக்க வேண்டுமென் றால் 941 வருடமாகும் என்று ஒரு கணக்கீடு கூறுகிறது. மருத்துவம் மற்றும் அத்தியாவசிய தேவைகளுக்காக செலவழிக்க முடியாததால் ஆண்டுக்கு 6.3 கோடி பேர் வறுமையில் தள்ளப் படுகிறார்கள். அதாவது விநாடிக்கு இரண்டு பேர் வறுமைக்கோட்டிற்கு கீழே போய்க் கொண்டி ருக்கிறார்கள். இதுதான் மோடி அரசு ஏழைக ளின் நலன் காக்கும் லட்சணம்!