headlines

img

பேச்சுரிமைக்கு கிடைத்த வெற்றி

கர்நாடகா மாநிலம், கோலார் மாவட்டத் தில் 2019-இல் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி, ‘எல்லா திரு டர்களுக்கும் மோடி என்று பெயர் வந்தது எப்படி?’ என்று  கேள்வி எழுப்பியிருந்தார்.  இதனால் ஒட்டு மொத்தமாக  மோடி சமூகத்தினரை ராகுல் காந்தி அவமதித்துவிட்டதாகக்  கூறி, குஜராத் பா.ஜ.க எம்.எல்.ஏ-வான பர்னேஷ் மோடி என்பவர் சூரத் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

அந்த வழக்கை விசாரித்த சூரத் நீதிமன்றம், ராகுல் காந்திக்கு இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து கடந்த மார்ச் மாதம் உத்தர விட்டது. அதைத் தொடர்ந்து, ராகுல் காந்தியின் எம்.பி., பதவி பறிக்கப்பட்டது. சிறைத் தண்ட னைக்கு  தடைவிதிக்குமாறு, தனக்கு ஜாமீன் வழங்கிய சூரத் அமர்வு  நீதிமன்றத்தில் ராகுல் காந்தி மனுத்தாக்கல் செய்தார். ஆனால்  தண்ட னைக்குத் தடைவிதிக்க அமர்வு நீதிமன்றமும் மறுத்துவிட்டது.

அதையடுத்து, குஜராத் உயர் நீதிமன்றத்தில் ராகுல் காந்தி மேல்முறையீடு செய்தார். அங்கும் அவருக்கு நீதி கிடைக்க வில்லை. இதையடுத்து ராகுல் காந்தி உச்சநீதிமன்றத்தில் மேல் முறை யீடு செய்தார். அவரது மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம் அவருக்கு விதிக்கப்பட்ட தண்டனை க்கு இடைக்கால தடைவிதித்து உத்தரவிட்டுள் ளது. இது பாஜக அரசுக்கு மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

சரியான காரணங்கள் ஏதும் இல்லாமல் 2  ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்தது எப்படி என்று குஜராத் நீதிமன்றத்தை உச்சநீதிமன்ற நீதிபதிகள் கடுமையாகச் சாடியுள்ளனர். தண்டனை குறித்து எந்தவொரு விளக்கத்தை யும் அளிக்க கீழமை நீதிமன்றங்கள் தவறிவிட்ட தையும் நீதிபதிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

பொதுவாக மானநஷ்ட வழக்குகளில் இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங் கப்பட்டிருப்பது ராகுல் காந்தி வழக்கில் மட்டும் தான். உச்ச நீதிமன்றத்தைப் பொறுத்த அளவில், எந்த ஒரு  மான நஷ்ட  வழக்கிலும் இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கியதே கிடையாது. அதிகபட்சம் ஒரு மாதம், இரண்டு மாதங்கள் அல்லது ஒரு நாள் என்றுதான் தண்டனை வழங்கியிருக்கிறது.

ராகுல்காந்தி மீதான குற்றச்சாட்டு, ஒரு, பிணையில் வரக்கூடிய குற்றமாகும். குஜராத் பாஜக அரசாங்கத்தால் நீதிபதிகளுக்கு அழுத்தம் தரப்பட்டதால் அவர்கள் சட்டத்தை பார்க்காமல் ஒருதரப்பாக  தீர்ப்பெழுதி விட்டனர். இது அநீதியானது ஆகும். தனக்குப் போட்டியாக உள்ளவர்களைப் பழிவாங்க நீதித் துறையையும் பாஜகவினர் பயன்படுத்துகிறார்கள் என்பது, இதில் தெளிவாகிறது.  

ராகுல் வழக்கில் உச்சநீதிமன்றத்தின் தற்போதைய இடைக்கால உத்தரவால் பேச்சுரி மையும் பாதுகாக்கப்பட்டுள்ளது. இது வரவேற்கப் பட வேண்டிய தீர்ப்பாகும்.