headlines

img

பாஜகவின் குறுக்கு புத்தி

திரிணாமுல் காங்கிரஸ் எம்பி மஹூவா மொய்த்ரா  தொழிலதிபர் தர்ஷன் `ஹிரானந்தனி யிடம் இருந்து பணம் மற்றும் பரிசுகளை லஞ்சமா கப் பெற்றதாக பாஜக எம்பி நிஷிகாந்த் துபே மற்றும் உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் ஜெய் அனந்த் தெஹாத்ராய் குற்றம் சாட்டியதால் அதுகுறித்து மக்களவை  நெறிமுறைகள் குழு விசாரணை நடத்தியது. குழுவில் பாஜக ஆதரவுடன்  6-4 என்ற வாக்கு வித்தியாசத்தில்  மஹூவா மொய்த் ராவை பதவிநீக்கம் செய்ய மக்களவைக்கு குழு பரிந்துரைத்திருப்பதாக செய்திகள் கசிந்துள்ளன. 

மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த மஹூவா மொய்த்ரா மக்களவையில் முக்கியமான விவா தங்களில் அரசை கடுமையாக விமர்சித்தவர். இதனால் பாஜக ஆத்திரமடைந்தது. மஹூவா மொய்த்ரா சார்ந்திருக்கும் கட்சிக்கும் மார்க்சி ஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கும் அரசியல் ரீதியாக முரண்பாடுகள் இருந்தபோதிலும் நெறிமுறைக் குழுவில் இடம்பெற்றிருந்த மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி உறுப்பினர், மேற்கண்ட மஹூவாவின் பதவிநீக்கத்திற்கு எதிராக வாக்களித்தார்.  கார ணம்  குற்றம்சாட்டப்பட்டவர் தன்னை நிரபராதி என்று நிரூபிக்க போதுமான அவகாசம் வழங்கப் படாமல் அவசர அவசரமாக நெறிமுறை குழு கூடி கலைந்துள்ளது. இவர்மீதான நடவடிக்கை விசயத்தில் மட்டும் அதிவேகமாக நெறிமுறைக் குழு செயல்படவேண்டிய அவசியம் என்ன?  தன் மீதான குற்றச்சாட்டுகள் “முற்றிலும் ஆதாரமற்றவை” என்று கூறியுள்ள மொய்த்ரா `ஹிரானந்தனியை வரவழைக்குமாறும், அவரையும் தெஹாத்ரா யையும் குறுக்கு விசாரணை செய்வதற்கும் தனக்கு வாய்ப்பளிக்குமாறும் அவர் விடுத்த கோ ரிக்கையை  குழுவின் தலைவரான பாஜகவைச் சேர்ந்த வினோத்குமார் வேண்டுமென்றே நிரா கரித்திருக்கிறார்.

வேடிக்கை என்னவென்றால் குழுவில் பாஜக உறுப்பினர்கள் பெரும்பான்மையாக இடம்பெறு வார்கள் என்று மக்களவைத் தலைவர் அலுவல கம் அறிவித்த பின்னரே அந்தகுழுவில் இடம்பெற பாஜக சம்மதித்துள்ளது. மேலும் குற்றச்சாட்டு க்கு உள்ளானவரை  முதலில் அழைத்துப் பேசா மல் குற்றம்சாட்டியவரை அழைத்துப் பேசியதும்,  குழுவின் தலைவர்,  ஏற்கனவே எழுதி தரப்பட்ட ஒரு கடிதத்தை கூட்டத்தில் படித்ததும் எல்லாம் முன்கூட்டியே திட்டமிட்டதுபோல் பலத்த சந்தே கங்களை ஏற்படுத்துகின்றன. மொய்த்ரா மீதான குற்றச்சாட்டுக்கு ஆதாரம் இருப்பதாக தெரிவித்த வழக்கறிஞர் ஜெய் அனந்த் தெஹாத்ராய் மற்றும் துபே ஆகியோர், அதை குழுவில் இடம்பெற்ற உறுப்பினர்கள் கேட்டபோது காட்டவில்லை. 

நாட்டில் உள்ள இயற்கை வளங்களை சூறை யாடி வரும் அதானியை கண்டித்து அல்லது அர சுக்கும் அவருக்கும் உள்ள தொடர்பு  குறித்து யாராவது கேள்வி எழுப்பினால் பிரதமர் மோடி உள்ளிட்ட ஆளும் கட்சியினரால் ஜீரணித்துக் கொள்ளமுடியவில்லை. தொடர்ந்து பேசினால் பதவியில் இருந்து தூக்கியெறியப்படுவீர்கள் என்ற மிரட்டலாகவே மொய்த்ரா மீதான நடவ டிக்கையை பார்க்கவேண்டியுள்ளது.  இத்தகைய நடவடிக்கை ஜனநாயக விரோதமானது.