கீழடி என்ற ஒற்றைச் சொல் உலகத் தமிழர்க ளை எல்லாம் பெருமைப்பட வைத்துள்ளதைப் போன்றே கிருஷ்ணகிரி மாவட்டம் மயிலாடும் பாறையில் நடைபெற்ற அகழாய்வில் கண்டெ டுக்கப்பட்ட இரும்பு பொருட்கள் தமிழர்களின் நாகரீக வரலாற்றுக்குச் சான்றாக விளங்கு கின்றன.
தமிழ்ச் சமூகத்தின் தொன்மை மற்றும் தொடர்ச்சியை உறுதி செய்து உலகுக்கு அறி விக்கும் வகையில், தொல்லியல் துறை மேற் கொண்டு வரும் முயற்சிகள் பாராட்டத்தக்கவை. ஏற்கனவே பூம்புகார், கொற்கை உள்ளிட்ட சங்க கால துறைமுக நகரங்களில் மேற்கொள்ளப் பட்ட அகழாய்வில் கிடைத்த ரோமானிய நாண யங்கள், மெருகூட்டப்பட்ட மண் பாண்டங்கள், வெளிநாட்டு பொருட்கள் அக் காலத்திலேயே கடல் கடந்த வணிகத்தில் தமிழர்கள் சிறந்து விளங்கியதை அறிந்துகொள்ள முடிந்தது.
கீழடியில் கிடைத்த ஒளிர்மிகு நீலமணிகள் கங்கைச் சமவெளி மற்றும் வடமேற்கு இந்தி யப் பகுதிகளுடன் தமிழர்கள் உள்நாட்டு வணிகம் மேற்கொண்டிருந்ததை உறுதி செய்யும் வகையில் இருந்தது. அங்கிருந்த கட்டுமானம், தொல்பொருள்களின் செய்நேர்த்தி, பொறியியல் நுணுக்கம் தமிழகத்தில் அன்றே நகரப் பண்பாடு செழித்து வளர்ந்ததை உலகுக்கு அறிவித்தது. இதன் தொடர்ச்சியாக மயிலாடும்பாறை அக ழாய்வில் கண்டெடுக்கப்பட்டுள்ள இரும்புப் பொ ருட்கள் பலவற்றுக்குச் சான்றாக அமைந்துள் ளன.
தமிழகத்தில் இரும்பின் பயனைக் கண்டறிந்த பின்னர்தான் வேளாண்மை தொடங்கியுள்ளது. இந்தியாவின் இரும்புப் பயன்பாடு குறித்து கங்கைச் சமவெளி உள்பட பல்வேறு பகுதிகளில் கணக்கிட்ட ஆய்வுகளைப் பார்க்கும்போது மயிலாடும்பாறையில் கிடைத்த பொருட்கள் 4,200 ஆண்டுகளுக்கு முற்பட்டவை என்பது தமி ழர்கள் அனைவருக்கும் பெருமையளிக்கக் கூடிய விஷயமாகும். மயிலாடுபாறையில் புதிய கற்காலக் கருவிகளும் ஓவியங்களும் கிடைத்துள் ளன. அங்கு கிடைத்த மாதிரிகளை கரிம ஆய்வு செய்ததில் அவற்றின் காலம் என்பது கி.மு 1015 என தெரியவந்துள்ளது. இந்தியத் துணைக் கண்டத்தின் வரலாறு தமிழ் நிலப்பரப்பிலிருந்து தொடங்க வேண்டும் என்ற வரலாற்று ஆய்வா ளர்களின் கோரிக்கைக்கு வலுசேர்ப்பதாக இவை உள்ளன.
முதலமைச்சர் பேரவையில் அறிவித்த வாறு கேரளாவின் பட்டணம், கர்நாடகாவின் தலைக்காடு, ஆந்திராவின் வேங்கி, ஒடிஷா வின் பாலூர் பகுதிகளில் அகழாய்வுகள் மேற் கொள்ளப்படவேண்டும். தமிழ்நாட்டில் கண்டெ டுக்கப்பட்ட ஏராளமான பானை ஓடுகளில் காணப்படும் குறியீடுகளுக்கும் சிந்துசமவெளி எழுத்துக்களுக்குமான உறவை ஒப்பிட்டு ஆய்வு செய்யும் பணிகளை விரைவில் தொடங்க வேண்டும். இத்தகைய ஆய்வுப் பணிகளுக்கு மாநில தொல்லியல் துறையுடன் ஒன்றிய அரசின் தொல்லியல் துறையும் ஈடுபடுவதோடு தேவையான உதவிகளையும் செய்யவேண்டும். நாட்டின் பிற பகுதிகளிலும் தமிழர்கள் தடம் பதித்த வெளி நாடுகளிலும் தமிழ்நாடு தொல்லியல் துறை மேற்கொள்ள உள்ள தொல்லியல் பணிகளுக்கு உரிய அனுமதியையும் ஒன்றிய அரசு வழங்க வேண்டும்.