headlines

img

இன்னும் தொடரலாமா?

தஞ்சாவூர் மாவட்டம்  ஒரத்தநாடு அருகே கிளாம்பாக்கம் கிராமத்தில் பட்டியலின மக்க ளுக்கு சலூன் கடையில் முடிவெட்ட மறுத்தது, ஈரோடு மாவட்டத்தில் பள்ளி கழிவறைகளைத் தலித் குழந்தைகளை வைத்து கழுவச் சொன்ன தலைமை ஆசிரியர் பணியிடை நீக்கம் ஆகி யவை நாளிதழ்களில் வந்துள்ள செய்திகள்.  தீண்டாமை இன்னமும் பல்வேறு வடிவங்களில் இந்த சமூகத்தில் நீடிப்பதையே இத்தகைய நிகழ்வு கள் காட்டுகின்றன.  

இரட்டை குவளை முறை குறித்து சமூக ஆர்வ லர்கள்  ஆட்சியரைச் சந்தித்து புகார் கொடுக்கப் போகிறார்கள் என்று தெரிந்தவுடன் சம்மந்தப் பட்ட கிராம நிர்வாகிகள் இரட்டைகுவளைமுறை,  முடிவெட்ட மறுத்தல் ஆகியவற்றைக் கைவிடு வதாக ஊர்மக்களிடம் உறுதி அளித்த னர். ஆனால் கிராம கூட்டத்தைக் கூட்டுகிறோம் என்ற பெயரில் பட்டியலின மக்களுக்கு ஊருக்குள் மளிகைப்பொருட்களை தரக்கூடாது, என கடைகளுக்குத் தடை விதித்தனர். இதை மீறுப வர்களுக்கு அபராதம் எனவும் அவர்கள் எச்சரித்துள்ளனர்.  ஊர்கட்டுப்பாடு விதித்ததால் தலித் மக்களுக்கு முடிவெட்ட மறுத்ததாக சலூன் கடைக்காரர் கூறுகிறார். 

இங்குதான் இப்படி என்றால் ஈரோடு மாவட்டம் பாலக்கரை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி யின் தலைமையாசிரியர் தலித் வகுப்பைச் சேர்ந்த  5 மாணவர்களை பள்ளியில் உள்ள கழிப்ப றையை கழுவ சொல்லியிருக்கிறார். இது ஊடகங்களில் கசிந்தவுடன் பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் நடத்திய விசாரணையில் ஆறு மாதங்களுக்கும் மேலாக இந்த கொடுமை நடை பெற்று வருவது தெரிய வந்துள்ளது.  ஈரோடு மாவட்டத்தைப் பொறுத்தவரை இது முதல் முறை யல்ல.  கடந்த மார்ச் மாதம் பெருந்துறை முள்ளம் பட்டியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி குறித்து சமூக ஊடகங்களில் வெளியான காணொ ளியில் இரண்டு குழந்தைகள் பள்ளிக் கழிவறை யைச் சுத்தம் செய்யும் காட்சிகள் இடம்பெற்றி ருந்தன. இதுகுறித்து அந்த ஊராட்சி மன்ற பிரதி நிதி ஒருவர் ``இது ஒன்றும் புதிதல்ல; பல நாள்களாக நடந்துகொண்டிருக்கும் ஒரு செயல்தான்! சமீ பத்தில் எங்கள் ஊரில் கல்லூரி மாணவர்கள் என்சிசி முகாம் போட்டிருந்தார்கள். அவர்களுக்கு அது புதிதாகப்பட்டதால் அதை காணொளி எடுத்திருக்கின்றனர். கிராமத்திலுள்ள பெரும்பா லானோருக்கு இந்தச் செய்தி தெரியும்” என்று கூறி சர்வ சாதாரணமாகக் கூறியிருந்தார். 

சாதிய வன்மத்துடன் கூடிய இந்த கொடுமை கள் தடுத்து நிறுத்தப்படவேண்டும். ‘தீண்டாமை ஒரு குற்றம், தீண்டாமை ஒரு பெரும் பாவச் செயல்’’ என்று பள்ளி பாடப் புத்தகங்களில் அச்ச டித்து விழிப்புணர்வை ஏற்படுத்தினால் மட்டும் போதாது. இதுபோன்ற கொடுமைகள் புகாராக வரும் போது அரசு நிர்வாகம் தயக்கமில்லாமல் உறுதியான நடவடிக்கையை எடுக்க வேண்டும். அப்போதுதான் சாதியப் பாகுபாட்டுடன் நடந்து  கொள்பவர்களுக்கு அச்சம் ஏற்படும். சாதிய ரீதி யில் நடந்து கொண்டவர்கள் மீது வன்கொடுமைச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுப்பதும், பாதிக்கப் படும் மக்களுக்கு உரியப் பாதுகாப்பு அளிப்பதும் அரசின் கடமையாகும்.