தமிழகத்தில் தகுதியான பேராசிரியர்கள், போதிய கட்டமைப்பு வசதிகள் இல்லாத 225 பொறியியல் கல்லூரிகளுக்கு அண்ணா பல் கலைக்கழகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இந்த கல்லூரிகளில் ஆர்க்கிடெக் எனப்படும் கட்ட டக்கலை, எம்பிஏ மற்றும் எம்சிஏ படிப்புகளைக் கற்றுத்தரக்கூடிய அளவில் தகுதியான ஆசி ரியர்கள் இல்லை. மேலும் அந்த படிப்புகளுக்கான ஆய்வகம் உள்ளிட்ட கட்டமைப்புகளும் இந்த கல்லூரிகளில் இல்லை. இந்த குறைபாட்டை இரண்டு வாரத்திற்குள் போக்காவிட்டால் பல் கலைக்கழகத்துடனான கல்லூரி இணைப்பு ரத்து செய்யப்படும் அல்லது மாணவர்கள் எண்ணிக்கை குறைக்கப்படும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.
உயர்கல்வி பயிலும் மாணவர்களின் எதிர் காலத்தைக் கருத்தில் கொண்டு அண்ணா பல்கலைக்கழகம் உரிய நேரத்தில் தலையிட்டது வரவேற்கத்தக்கது. ஒவ்வொரு ஆண்டும் பொறியி யல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை ஒரு திரு விழாவைப் போல் நடத்தப்படுகிறது. மாணவர்களி டம் லட்சக்கணக்கில் கல்விக்கட்டணம் வசூலிக் கப்பட்டாலும் அந்த கல்லூரிகளில் தகுதியான ஆசிரியர்கள் குறைந்த ஊதியத்தில் நியமிக்கப் படுவதில் அக்கறை காட்டுவதில்லை.
நாட்டில் பொறியியல் கல்லூரிகள் அனைத்தும் அனைத்திந்தியத் தொழில்நுட்பக் கல்விக் குழுமத்தின் (ஏஐசிடிஇ) கீழ் செயல் படுகின்றன. பொறியியல் கல்வியின் தரத்தை மேம்படுத்துவதற்கும் முறைப்படுத்துவதற்குமான அதிகாரம் 1986-ல் இந்தத் தொழில்நுட்பக் குழு மத்துக்கு நாடாளுமன்றத்தால் வழங்கப்பட்டது. கிட்டத்தட்ட அதே காலகட்டத்தில்தான் சுயநிதிக் கல்லூரிகள் முளைத்தன. புதிய கல்லூரிகள் தொடங்குவதற்கான குறைந்தபட்சத் தேவைகள் வகுக்கப்பட்டு, அதன் அடிப்படையில் புதிய கல்லூ ரிகளுக்கு அனுமதி வழங்கியிருக்க வேண்டும். ஆனால், தொழில்நுட்பக் குழுமம் அதைக் கறாரா கச் செய்யவில்லை.
தொண்ணூறுகளில் தாராளமயத்துக்குப் பிறகு தகவல் தொழில்நுட்பத் துறையிலும் (ஐடி) அயல் பணி சேவையிலும் (பிபிஓ) வேலைவாய்ப்புகள் பெருகின. பொறியியல் கல்லூரிகளில் எந்தத் துறையில் படித்திருந்தாலும் அவர்களை ஐ.டி. இழுத்துக்கொண்டது. பொறியியல் கல்லூரி என்கிற கடையில் நன்றாக வியாபாரம் நடப்பதைப் பலர் தெரிந்துகொண்டனர். இதில் முதலீடு செய்தால் பெருமளவில் லாபம் ஈட்டலாம் என்ற ஆசையில் பலர் சுயநிதிப் பொறியியல் கல்லூரி களைத் தொடங்கினர். அப்படித் தொடங்கப்பட்ட கல்லூரிகளில் ஆசிரியருக்கான தகுதி, கட்ட மைப்புகள் குறித்து அவர்கள் சிறிதும் கவலைப் படவில்லை. மாணவர்களைச் சேர்ப்பதில் மட்டும் குறியாக இருந்தனர்.
இந்த குறைபாடுகளை பொறியியல் கல்லூரி நிர்வாகங்களே சரி செய்து கொள்வார்கள் என்று காத்திருந்தால், அதற்குள் தரம் குறைந்த கல்லூரி களில் படித்துவரும் மாணவர்கள் தங்களது எதிர்காலத்தையே இழப்பார்கள். ஆகவே, சுய திருத்தத்துக்காகக் காத்திருக்காமல், தொழில் நுட்பக் குழுமம், எல்லாக் கல்லூரிகளும் உரிய தரத்தில் செயல்படுவதை உறுதிப்படுத்த வேண்டும்.