தமுஎகச நடத்திய சனாதன ஒழிப்பு மாநாட்டில், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சனாதனம் முன் வைக்கும் இழிவுகளைத்தான் ஒழிக்க வேண்டும் என்றுதான் பேசினார். ஆனால் ஒரு பிரதமரே உண்மையை மறைத்து, வதந்தியைப் பரப்புவது போல் பேசியிருப்பது கண்டிக்கத் தக்கது.
சனாதனம் குறித்து யாரும் தவறாகப் பேசி னால் ஒன்றிய அமைச்சர்கள் பதிலடி தரவேண் டும் என மோடி கூறியுள்ளார். இதைவிட யாரும் இந்திய அரசியலமைப்பு சட்டத்தை அவமதிக்க முடியாது. ஏனெனில் இந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கு முற்றிலும் நேர் எதிராக முன்வைக் கப்படும் ஒரு கோட்பாடே சனாதனம்.
மோடி சனாதனம் குறித்து உண்மைகளை அறிந்து கொள்ள வேண்டும் என்கிறார். உண்மை என்ன? சனாதனத்தின் மூலநூலான மனுஸ் மிருதி வர்ணாசிரமத்தை முன்னிறுத்துகிறது. ‘சனாதனமும், வர்ணாசிரமமும் வேறுவேறல்ல’, சனாதனத்தின் முக்கிய அம்சமே, வர்ணாசிர மம்தான் என்கிறார் காஞ்சி சங்கராச்சாரியார். சனாதனம் பிறப்பின் அடிப்படையில் ஏற்றத் தாழ்வை உருவாக்கி உழைக்கும் மக்களை இழிவு படுத்துகிறது. பெண்களை மிகவும் கீழ்த்தர மாக நடத்துகிறது.
உண்மையில் பிரதமர் யார் மீது நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும்? உதயநிதி ஸ்டாலின் சொல்லாத ஒன்றைச் சொல்லியதாகப் பதிவிட்ட பாஜக ஐடி பிரிவு தலைவர் அமித் மால்வியா மீது நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். ‘மக்கள் தொகையில் 80 விழுக்காட்டினராக இருக்கக் கூடிய சனாதனிகளை இனப்படுகொலை செய்வ தற்கான அழைப்பு” என்று அப்பட்டமாக வன் முறையை உருவாக்கும் விதத்தில் உண்மைக்கு மாறாக அவர் பதிவிட்டிருந்தார். ஆனால் அவர் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை. இந்த விஷக் கிருமிகளை விட்டுவைத்தால் இந்திய ஒற்றுமைக்கே ஊறு விளைவிக்கும்.
1949 நவம்பர் 29 இல் இந்திய அரசியலமைப்பு சட்ட நிர்ணய சபை விவாதத்தின் போது, டாக்டர் அம்பேத்கர், இந்திய சமுதாயத்தில் 2 அம்சங்கள் கவலைக்குரியதாக இருக்கிறது. சமூக ரீதியிலும், பொருளாதார ரீதியிலும் சமத்து வம் இல்லை. சகோதரத்துவமும் இல்லை. சனாத னம் இருக்கும் வரை இது பெரிய அபாயமாக இருக் கும் என்று பேசியிருக்கிறார். அதனை மாற்றவே ஒரு மனிதனுக்கு ஒரு மதிப்பு என்பதை அரசியலமைப்பில் உறுதி செய்தார். அதனை ஒழிக்கவே மோடி அரசு முயற்சிக்கிறது.
சமூக நீதியை சனாதனம் உரசிப் பார்க்கும் போதெல்லாம் இந்துத்துவா வீழ்த்தப்பட்டி ருப்பதுதான் இந்தியாவின் வரலாறு. அத னால்தான் வரலாற்றை ஆராயாமல், அரசிய லமைப்பு சட்டத்தில் உள்ள உண்மை தகவல்க ளை மட்டும் பேசுங்கள். சனாதன சர்ச்சைக்குத் தற்கால சூழல் குறித்தும் பேசுங்கள் என மோடி சனாதனத்திற்கு ஆதரவாக நேரடியாக முட்டுக் கொடுக்க முடியாமல் பம்முகிறார். இது மோடி வகிக்கும் பிரதமர் பதவிக்கு அழகல்ல.