எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் ஆள்பிடி வேலையில் ஈடுபட்டு ஆட்சியை கவிழ்ப்பதையே தொழிலாகக் கொண்ட பாஜக இமாச்சலப்பிரதேசத்திலும் தன் வேலையைக் காட்டத் துவங்கியுள்ளது. அரசியலை மிகவும் கீழிறக்கம் செய்து கொண்டிருக்கும் பாஜக இதை தனது சாதனையாகவும், சாதுரியமாகவும் காட்டிக் கொள்வது அவக்கேடானது.
காங்கிரஸ் கட்சி ஆளும் இமாச்சலப் பிரதே சத்தில் ஆளுங்கட்சியைச் சேர்ந்த ஆறு எம்எல்ஏக்களும், மூன்று சுயேச்சை எம்எல்ஏக்க ளும் மாநிலங்களவைத் தேர்தலில் பாஜக வேட்பாளருக்கு வாக்களித்துள்ளனர். அமைச் சர் விக்ரமாதித்ய சிங் தமது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். பாஜக வின் தூண்டுதலின் பேரிலேயே இவர் ராஜினாமா செய்துள்ளார்.
இதனிடையே காங்கிரஸ் தலைமையிலான அரசு பெரும்பான்மை இழந்துவிட்டதாகக் கூறி பாஜகவினர் கலகம் செய்யத் துவங்கியுள்ளனர். பாஜகவைச் சேர்ந்த 15 எம்எல்ஏக்களை இடை நீக்கம் செய்து சபாநாயகர் உத்தரவிட்டுள்ளார்.
காங்கிரஸ் மற்றும் அரசுக்கு ஆதரவு அளித்து வந்த சுயேச்சை எம்எல்ஏக்களை பாஜகவினர் அப்பட்டமாக கடத்தி அடைத்து வைத்துள்ளனர். இந்த இழிவான வேலைக்கு சிஆர்பிஎப் படையினரையும் பயன்படுத்தியி ருப்பது மிக மிக மோசமான முன்னுதாரண மாகும்.
மோடி ஆட்சிக்கு வந்தபிறகு கோவா, கர்நாட கம், மகாராஷ்டிரம், மத்தியப் பிரதேசம், புதுச்சேரி, பீகார் என பல மாநிலங்களில் எம்எல்ஏக்களை விலைக்கு வாங்கியும், கடத்திச் சென்றும் எதிர்க் கட்சி அரசுகளை கவிழ்த்தது.
சமீபத்தில் ஜார்க்கண்ட் மாநிலத்திலும், தில்லி யூனியன் பிரதேசத்திலும் எதிர்க்கட்சிகளின் ஆட்சியை கவிழ்க்க பாஜக மேற்கொண்ட முயற்சிகள் பலனளிக்கவில்லை. இந்த நிலை யில், இமாச்சலப்பிரதேசத்தில் தங்கள் கைவரி சையை பாஜக காட்டத் துவங்கியுள்ளது.
ஒரு காலத்தில் பாஜக தன்னை ‘வித்தியா சமான’ கட்சி என்று கூறிக்கொண்டதுண்டு. ஆனால் அது வித்தியாசமான கட்சியல்ல; ஜன நாயகத்தையும், கூட்டாட்சியையும் அழிக்கும் விபரீதமான கட்சி என்பது மீண்டும் மீண்டும் தெளிவாகிறது.
அமலாக்கத்துறை, வருமானவரித்துறை போன்ற மத்திய அமைப்புகளையும் தன்னுடைய ஆட்சிக் கவிழ்ப்பு வேலைகளுக்கு பாஜக பயன் படுத்திக் கொள்கிறது. “ஜெய் ஸ்ரீராம்” என்று கூறிக்கொண்டு ‘ஆயாராம் காயாராம்’ அரசிய லைத்தான் பாஜக செய்து வருகிறது. ஒன்றிய ஆட்சிப் பொறுப்பிலிருந்து பாஜக அகற்றப் பட்டால்தான் இந்திய ஜனநாயகத்தைக் காப்பாற்ற முடியும்.