headlines

img

பஜனை பாடுவதால் ஆட்சியின் அவலத்தை மறைக்க முடியாது

நாடாளுமன்றத் தேர்தல் நெருங்குகிற நிலை யில் தன்னுடைய பத்தாண்டு கால ஆட்சியின் தோல்விகள், தவறுகள், முறைகேடுகள், அவலங் கள் அனைத்தையும் அயோத்தி ராமர் கோவி லுக்குள் வைத்து மூடி விடலாம் என பிரதமர் நரேந்திர மோடி முயல்கிறார். தன்னுடைய ஆட்சியின் சாதனைகளாக எதையும் இந்திய மக்கள் முன்னால் வைக்க வகையற்ற அவர் முழு நேர ராமநாம பஜனை கோஷ்டியாக மாறிவிட்டார். தான் ஆட்சிப் பொறுப்பேற்றதிலிருந்து பத்தி ரிகையாளர்களை சந்திப்பதை பிரதமர் மோடி பெரும்பாலும் தவிர்த்தே வந்துள்ளார். நாடாளு மன்றத்திற்கு வருவதையும் அவர் விரும்புவ தில்லை. இந்நிலையில் மாதந்தோறும் மனதின் குரல் என்ற பெயரில் வானொலியில் பேசுவதை வாடிக்கையாக வைத்துள்ளார்.

இந்த மாதத்தின் கடைசி ஞாயிறன்று மனதின் குரல் நிகழ்ச்சியில் பேசிய அவர், பெரும் பகுதி நேரத்தை அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழா குறித்து பேசுவதற்கே செலவிட்டுள்ளார். இந்தியாவின் அரசமைப்புச் சட்டம் மதச் சார்பின்மை, ஜனநாயகம், கூட்டாட்சி, மனித உரிமைகள் ஆகிய விழுமியங்களை கொண்டு உருவாக்கப்பட்டது. ஆனால் இவர் ராம ராஜ்ஜி யமே நம் அரசமைப்புச் சட்டத்தை உருவாக்க அடிப்படையாக இருந்தது என்கிறார். பாஜக வின் முன்னோடிகளான ஆர்எஸ்எஸ் காரர்கள் இந்திய அரசமைப்புச் சட்டத்தை ஏற்க முடியாது என்றும், மனு நீதியின் அடிப்படையில் இது உரு வாக்கப்படவில்லை என்றும் மல்லுக்கட்டினர்.

வாஜ்பாய் ஆட்சிக் காலத்திலும், மோடியின் ஆட்சிக் காலத்திலும் அரசில் சட்டத்தில் உள்ள மதச்சார்பின்மையை சாரமிழக்கச் செய்ய பல முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இப்போது ராம ராஜ்ஜியம் என்று கூறுவதன் மூலம் இந்தி யாவை தாங்கள் விரும்பும் இந்துத்துவா நாடாக மாற்றவோ, அரசியல் சட்டத்தை வர்ணாசிரம அநீதியின் அடிப்படையில் உருவாக்கவோ முயல்கின்றனர் என்பது தெளிவு. மகாத்மாகாந்தி கூறிய ராம ராஜ்ஜியம் என்பது வேறு, இவர்கள் கூறும் ராம ராஜ்ஜியம் என்பது வேறு. ராம பக்தரான மகாத்மா காந்தியை படுகொலை செய்த கருத்தியல் இந்துத்துவா கருத்தியலே ஆகும். அதைத்தான் இப்போது இவர்கள் ராம ராஜ்ஜியம் என்ற பெயரில் முன் வைக்க முயல்கிறார்கள்.  

உச்சநீதிமன்றத்தின் 75ஆவது ஆண்டு விழா வில் பேசிய மோடி, நாட்டின் ஜனநாயகத்தை மேம்படுத்த உச்சநீதிமன்றம் முக்கியமானது என்று கூறியுள்ளார். ஆனால் நடைமுறையில் நீதித்துறையையும், தங்களது வசதிக்கேற்ப வளைக்க இவர்கள் மேற்கொண்ட முயற்சிகள் கொஞ்சநஞ்மல்ல. மோடி ஆட்சியை அகற்ற அனைத்து மதச்சார்பற்ற சக்திகளும் ஒருங்கி ணைந்து வீழ்த்துவது ஒன்றே இன்றைய காலத்தின் தேவை.