தமிழ்நாட்டில் கனமழை மற்றும் பெரு வெள்ளத்தால் மிகப்பெரிய பாதிப்புகள் ஏற்பட்டன. அதனைச் சரி செய்ய மாநிலத்திற்கு பேரிடர் சிறப்பு நிவாரண நிதி வழங்கவேண்டும் என்று பிரதமரை சந்தித்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வலியுறுத்தினார். திருச்சியில் பிரதமர் கலந்துகொண்ட விழாவிலும் இதே கோரிக் கையை வலியுறுத்தினார். ஆனால் ஒன்றிய அரசு உரிய நிதியளிக்க மறுத்து சண்டித்தனம் செய்து வருகிறது.
இரு தவணைகளாக அளிக்கப்பட்ட ரூ.900 கோடியும் ஏற்கனவே கொடுப்பதாக கூறிய நிதியே தவிர, பேரிடர் சிறப்பு நிதி அல்ல. இது தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளை அவ மதிக்கும் செயல் என்று ஒட்டுமொத்த அரசியல் கட்சிகளும் கண்டனம் தெரிவித்த பின்னரும் ஒன்றிய அரசு திருந்தவில்லை. இதோடு நிற்கா மல், மாநில அரசுக்கு அதிகமான நிதி வழங்கி யது போன்று தவறான தகவல்களை பரப்பி வருகிறது.
சென்னையில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், தமிழ கத்தில் இருந்து பெற்ற வரியை விட அதிக மான நிதியை ஒன்றிய அரசு வழங்குவதாக கூறியது எந்த அளவுக்கு வடிகட்டிய பொய் என்பதை தமிழக அரசு உடனடியாக அம்பலப் படுத்தியுள்ளது. “ஒன்றிய அரசு 2014 - 15ம் ஆண்டு முதல் 2022 - 23 ஆம் ஆண்டு வரை ரூ.4.75 லட்சம் கோடி ரூபாய் தமிழகத்துக்கு வழங்கி யுள்ளது. இந்த ரூ.4.75 லட்சம் கோடியில் ரூ.2.46 லட்சம் கோடி என்பது மத்திய வரிகளில் இருந்து வரி பகிர்வாகவும், ரூ.2.28 லட்சம் கோடி என்பது தமிழகத்துக்கு கிடைக்கவேண்டிய மானியங்கள் மற்றும் உதவித்தொகை அடிப்படையில் வழங் கப்பட்டவைதான்.
அதேநேரத்தில் நேரடி வரிவருவாயாக தமிழ கத்தில் இருந்து ரூ.6.23 லட்சம் கோடி ஒன்றிய அரசு பெற்றுள்ளது. இதில் எவ்வளவு தொகை மாநில அரசுக்கு ஒன்றிய அரசு கொடுத்துள்ளது என்று கேட்டால் பாஜக அரசு பதிலளிக்க மறுக்கி றது. தமிழகத்தில் இருந்து ஒன்றிய அரசுக்கு செல்லும் ஒரு ரூபாய்க்கு மீண்டும் அங்கிருந்து தமிழகத்துக்கு கிடைப்பது வெறும் 29 பைசா தான். ஆனால், பாஜக ஆளும் மாநிலங்கள் குறை வாக வரிவசூலித்துக் கொடுத்தாலும் திரும்ப அளிக்கப்படும் நிதி அதிகமாக உள்ளது.
12-வது நிதிக் குழு மத்திய வரியில் இருந்து தமிழகத்துக்கு 5.30விழுக்காடு வரி பகிர்வாக வழங்கியது. தற்போது இது 4.079 விழுக்கா டாக குறைந்துள்ளது. தமிழ்நாட்டுக்கு கொடுக்க வேண்டிய உரிய நிதி வரவில்லை என்பதற்கு இதைவிட விளக்கமும் விபரமும் தேவை யில்லை. இதன் பின்னரும் ஒன்றிய நிதியமைச்சர் உளறிக் கொட்டுவதை நிறுத்தினால் நல்லது. இல்லை என்றால் இந்தியாவின் கோயபெல்ஸ் என்ற பட்டம் தான் அவருக்கு கிடைக்கும்.