headlines

img

ஜனநாயகத்துக்கு சமாதி

நாடாளுமன்ற உறுப்பினர்களை சஸ் பெண்ட் செய்வதில் நரேந்திர மோடி தலைமை யிலான பாஜக ஆட்சி சாதனை படைத்துள் ளது. விடுதலைக்குப் பிந்தைய நாடாளுமன்ற வரலாற்றிலேயே இல்லாத விதத்தில் 141 உறுப் பினர்களை இதுவரை இரு அவைகளிலிருந்தும் சஸ்பெண்ட் செய்திருக்கிறது. 

நாடாளுமன்ற பாதுகாப்பு குறித்து பிரதமரும் உள்துறை அமைச்சரும் விளக்கமளிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கேட்பது குற்றமென்று மக்களவை, மாநிலங்க ளவைத் தலைவர்கள், துணைத் தலைவர்கள் முடிவெடுத்து 141 உறுப்பினர்களை வெளியேற்றி அவைகளை “அமைதி”யாக்கியிருக்கிறார்கள். அந்த வேளையில் சர்ச்சைக்குரிய மசோதாக்க ளை நிறைவேற்றியிருக்கிறார்கள். இதுதான் அவர்களது பத்தாண்டு கால “ஜனநாயக” நடை முறைகளின் உச்சம்.

நாடாளுமன்ற பாதுகாப்பு அத்துமீறல் மிகத் தீவிரமான பிரச்சனை என்றும் கூட்டு மனப்பான் மையுடன் தீர்வு காணும் முயற்சிகள் மேற்கொள் ளப்பட வேண்டும் என்றும் பிரதமர் மோடி தில்லி யில் ஞாயிறன்று இந்தி நாளிதழுக்கு அளித்த பேட்டியில் கூறியிருக்கிறார். ஆனால் இதை நாடாளுமன்றத்தில் சொல்வதற்கு தயங்குவது ஏன்? அதைத் தானே பொறுப்புள்ள எதிர்க்கட்சி களின் உறுப்பினர்கள் இரு அவைகளிலும் கேட்கிறார்கள்.

நாடாளுமன்ற பாதுகாப்பு குறித்து நாடாளு மன்றத்திற்குள் பேசாமல் பிரதமரும் உள்துறை அமைச்சரும் வெளியில் பேசுவது ஏன்? உயர் நிலைக் குழு அமைக்கப்பட்டிருக்கிறது என்றும் மக்களவைத் தலைவர் பார்த்துக் கொள்வார் என்றும் கூறுவது பொறுப்பான பதிலாகுமா? அது வும் அவைக்கு வெளியே சொல்வது தான் ஜன நாயக மரபா?

நாடாளுமன்ற ஜனநாயகம் என்பது எதிர்க் கட்சிகள் இல்லாமல் எவ்வாறு அர்த்தமுடைய தாகும்? அவர்களின் ஆக்கப்பூர்வ ஆலோச னைகளை செவி மடுக்க மறுப்பதுதான் ஜன நாயக நடைமுறையா? எதிர்த்துக் கேள்வியே கேட் கக்கூடாது என்பது எதேச்சதிகாரம் அல்லவா?

75 ஆண்டு கால நாடாளுமன்ற வரலாற்றில்- அவசர நிலைக் காலத்தில் கூட -இத்தகைய ஜன நாயகப் படுகொலை நடவடிக்கைகள் அரங்கேறி யதில்லை. ஆனால் செவ்வாயன்று தில்லியில்  நடைபெற்ற நாடாளுமன்ற பாஜக கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி ஜனநாயக நெறிமுறை களை கடைப்பிடிக்க வேண்டும் என்று கூறி யிருப்பது யாரை ஏமாற்ற?

மக்களின் சேவகர் என்று தன்னைக் கூறிக் கொண்ட பிரதமர் இப்போது நாடாளுமன்ற பாது காப்பு குறித்து கேள்வி கேட்கக்கூடாது என, உரிமையை மறுப்பது ஜனநாயகத்துக்கு சமாதி கட்டுவதல்ல வா? இந்த அதிவேக எதேச்சதிகார ஆட்சிக்கு மக்கள் வரும் தேர்தலில் நிச்சயம் முடிவு கட்டு வார்கள்.